தமிழ் சினிமாவில் 30 வயதை கடந்த நடிகைகள் பலர் இருக்கிறார்கள். அவர்களில் ஒருவர் நடிகை பிரியா ஆனந்த்.இவர் கடந்த பத்து வருடங்களாக தமிழ் சினிமாவில் இருந்தாலும் இன்னும் முன்னணி நடிகைகளான அந்தஸ்தை பெற முடியவில்லை.
என்னதான் இவர் முன்னணி நடிகையாக இல்லை என்றாலும் இவர் தனக்கென ஒரு ரசிகர் வட்டத்தை உருவாக்கி வைத்துள்ளார். இவர் நடிப்பில் வெளியாகிய எல்கேஜி திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களை பெற்று வெற்றி பெற்றது. இந்த திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான பாலாஜிக்கு தமிழ் சினிமா நல்ல வரவேற்பை பெற்றுக் கொடுத்தது.
நடிகைகள் என்றாலே அடிக்கடி கவர்ச்சி போட்டோ ஷூட் நடத்துவது வழக்கம். தற்போது, லாக் டவுன் காரணமாக எங்கும் நகரமுடியாமல் இருக்கும் நடிகைகள் தங்களுடைய பழைய புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்கள்.
இந்நிலையில், ப்ரியா ஆனந்த் தனது ஆரம்ப காலத்தில் ஒல்லியாக இருக்கும்போது அவர் எடுத்துக்கொண்ட கவர்ச்சி புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி இளசுகளை கிறங்கடித்து வருகின்றது.


