இந்த உடம்பை வச்சிகிட்டு பிகினி உடை தேவையா..? - சமீரா ரெட்டி வெளியிட்ட புகைப்படம் - நெட்டிசன்கள் விளாசல்..!


கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நடிகர் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்த “வாரணம் ஆயிரம்” படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானாவர் சமீரா ரெட்டி. இந்தி திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர்.

அதன் பின்னர் தமிழில்‘வெடி’,‘அசல்’,‘வேட்டை’ என சில படங்களில் நடித்தார். அதன் பின்னர் படவாய்ப்புகள் குறைந்தது. இதையடுத்து 2014ம் ஆண்டு மகாராஷ்ட்ராவைச் சேர்ந்த அக்ஷய் குமார் வர்தே என்பவரை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆனார்.

அதன் பின்னர் படங்களில் நடிப்பதையே முற்றிலும் திருத்திவிட்டார். ஏற்கனவே ஒரு மகனுக்கு தாயாக இருந்த சமீரா, 4 ஆண்டுகளுக்கு முன்பு இரண்டாவது குழந்தைக்கு தாயானார். அப்போது கர்ப்பமாக இருக்கும் போது கவர்ச்சி போஸ் கொடுத்து சோசியல் மீடியாவை அதிரவைத்தார்.

இரண்டாவது குழந்தைக்காக கர்ப்பமாக இருந்த சமீரா ரெட்டி, நீருக்குள் நின்றபடியும், படுத்தபடியும் நிறைமாத வயிறுடன் கவர்ச்சி போஸ் கொடுத்து இணையத்தை கிடுகிடுக்க வைத்தார்.

தற்போது, தன்னுடைய கைக்குழந்தையுடன் உடற்பயிற்சி செய்வது, வீட்டில் ஆட்டம் போடுவது என அதகளம் செய்து வருகிறார். இந்நிலையில், தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குழந்தையுடன் பிகினி உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள், உடைகள் என்பது உணர்வு. உணர்வை வெளிப்படுத்த உடலோ, வயதோ அவசியமில்லை என கூறி வருகிறார்கள். அதே சமயம், இந்த உடம்பை வச்சிகிட்டு பிகினி உடை அவசியமா..? என்றும் கமென்ட் செய்து வருகிறார்கள்.