வாழும் சில்க் ஸ்மிதா - முரட்டு குத்து நடிகை சந்திரிகா ரவி வெளியிட்ட புகைப்படம் - உருகும் ரசிகர்கள்..!


இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் நடித்து கவனம் ஈர்த்தவர்களில் சந்திரிகா ரவியும் ஒருவர். ஆஸ்திரேலியாவில் பிறந்தாலும், இந்தியா மீதும், தமிழ் மீதும் பற்று கொண்டவர்.

கொரோனாவால், இவரது திரைப்பயணத்திற்கு தற்காலிகமாக இடைவெளி விழுந்துள்ளது. இவர் கடைசியாக, உன் காதல் இருந்தால் படத்தில் நடித்தார்.

தற்போது, கவர்ச்சிப் படங்களை, 'டுவிட்டர்' தளத்தில் பதிவேற்றி, தன்னை ரசிகர்கள் மத்தியில், நிலைநிறுத்தி வருகிறார். கோலிவுட்டின் அடுத்த சில்க் ஸ்மிதா என்ற புகழ்ச்சியுடன், வலம் வரத் துவங்கிஉள்ளார்.

சந்தோஷ் பி. ஜெயக்குமார் இயக்கத்தில் கவுதம் கார்த்திக் நடிப்பில் வெளியான அடல்ட் - காமெடி தான் "இருட்டு அறையில் முரட்டு குத்து" இந்த படத்தில் யாஷிகா ஆனந்த், சந்திரிகா ரவி, வைபவி ஷாண்டில்யா, ஷா ரா, கருணாகரன், மொட்டை ராஜேந்திரன், பால சரவணன், ஜான் விஜய், மதுமிதா மற்றும் பலர் நடித்திருந்தனர்.



அடல்ட் - காமெடி என்பதால் இந்த படத்திற்கு எதிர்ப்பும், விமர்ச்சனங்களும் எழுந்தது. ஆனாலும் "இருட்டு அறையில் முரட்டு குத்து" படம் நல்ல வரவேற்ப்பை பெற்றது. இந்த படத்தில் சந்திரிகா ரவி பேயாக நடித்திருப்பார். இவர் சமூக வலைதளங்களில் அவ்வப்போது புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

அந்த வரிசையில் நேற்று தனது இன்ஸ்ட்டாகிராம் பக்கத்தில் ஒரு கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அது தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.  இதனை பார்த்த ரசிகர்கள், நீங்க வாழும் சில்க் ஸ்மிதா என்று கூறி வருகிறார்கள்.