கும்முன்னு இருந்த சீரியல் நடிகை ஷில்பா இப்போது எப்படி இருக்காங்க பாருங்க - தூக்கி வாரிப்போட்ரும்..!


தமிழ் தொலைக்காட்சி தொடர்களில் சுமார் 15 வருடங்களாக நடித்து வருபவர் நடிகை ஷில்பா. ‘சித்தி’ சீரியல் மூலம் மிகவும் பிரபலமான இவர், பெரும்பாலும் வில்லி கதாபாத்திரங்களில் நடிப்பதிலே ஆர்வம் காட்டி வருகிறார். 
 
அதற்கு காரணம், வில்லியாக நடித்தால் தான் தனது திறமையை முழுமையாக வெளிக்காட்ட முடியும், என்று அவரே கூறியுள்ளார். சீரியல் மட்டும் இன்றி ஒரு சில திரைப்படங்களிலும் சிறு வேடத்தில் நடித்திருக்கும் ஷில்பா, நடனத்திலும் அசத்துவார். 
 
ஷில்பாவுக்கு வயது ஏறிக்கொண்டே போனாலும், இன்னும் திருமணம் செய்துகொள்ளவில்லை. அவருடன் சீரியலில் நடிக்க தொடங்கிய பல நடிகைகள் திருமணம் செய்துகொண்டு செட்டிலாக ஷில்பா மட்டும் இனும் சிங்கிளாகவே இருக்கிறார். 
 
ஏன் அப்படி? என்று அவரிடம் கேட்டதற்கு, “எனது அப்பா போன்ற ஒரு நல்லவரை நான் இதுவரை பார்த்ததில்லை. இனியும் பார்க்க போவதில்லை. அதனால் நான் திருமணமும் செய்துகொள்ள போவதில்லை. 
 
 
திருமணம் செய்துக்கொண்டு பிறகு விவாகரத்து வாங்கி அப்பாவுடன் வாழ்வதை காட்டிலும், திருமணம் செய்யாமலேயே அப்பாவுடன் வீட்டில் வாழ்வதே சந்தோஷமாக இருக்கிறது. அதனால், எனது வாழ்க்கையில் நோ திருமணம். என்ற முடிவுக்கு வந்துவிட்டேன்.” என்று கூறுகிறார்.
 
மேலும், தற்போது இவர் ஒரு தேவாலயத்தில் தன்னுடைய பெயரை Shilpa Mary Teresa என்று மாற்றிக்கொண்டு கன்னியாஸ்திரியாக சேவை செய்து வருகிறார் என்ற தகவலும் உள்ளது. இந்நிலையில், இவரது சமீபத்திய புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் ஷாக் ஆகித்தான் கிடக்கிறார்கள்.



இளம் வயதில் கும்முன்னு இருந்த இவர் இப்போது மொட்டை யடித்து குட்டையான முடியுடன் தோற்றமளிப்பதை பார்த்து ரசிகர்கள் என்ன ஆச்சு இவங்களுக்கு என்று கேட்டு வருகிறார்கள்.