நடிகை நயன்தாரா நடிப்பில் கடைசியாக மூக்குத்தி அம்மன் படம் வெளியாகி இருந்தது. OTT யில் வெளியான இப்படத்திற்கு மக்களிடம் நல்ல வரவேற்பு இருந்தது. அடுத்தபடியாக நடிகை நயன்தாரா அண்ணாத்த பட ஷுட்டிங்கில் கலந்து கொண்டிருந்தார்.
ஆனால் படக்குழுவில் சிலருக்கு கொரோனா பிரச்சனை காரணமாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் தான் நடிகை நயன்தாரா வேலு நாச்சியாரின் கதையில் நடிக்கப்போவதாக தகவல் வைரலாக பரவியது.
ஆனால் அதில் உண்மை இல்லை என நயன்தாரா தரப்பில் இருந்து விளக்கம் தரப்பட்டது. இந்நிலையில், ஹைதராபாத்தில் காத்து வாக்குல ரெண்டு காதல் படக்குழுவினருடன்
நயன்தாரா ஹோட்டலில் இருக்கும் புகைப்படங்கள் சமீபத்தில் வெளியானது.
தற்போது, புத்தாண்டை காதலர் விக்னேஷ் சிவனுடன் கொண்டாடியுள்ளார்.
அந்தப் புகைப்படங்களை விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்
பகிர்ந்து வாழ்த்துகளை கூறியுள்ளார்.
அந்தப் புகைப்படங்களில் புத்தாண்டு
உற்சாகத்துடன் நீல நிற மினுக்கும் உடையில் றெக்கை முளைக்காத தேவதையாக நயன்தாரா
மின்னுவதாக அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் உருகி வருகின்றனர்.




