பிரபல சின்னத்திரை நடிகை சித்ரா. இவருக்கு வயது ஆகின்றது. சென்னையில் உள்ள தனியார் நட்சத்திர ஹோட்டலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர் தொடரில் முல்லை கேரக்டரில் நடித்து வந்தவர் சித்ரா.
இவருக்கென் தனி ரசிகர் வட்டம் உள்ளது. கடந்த ஆக., மாதம் அவருக்கு தொழில் அதிபர் ஒருவருடன் நிச்சயதார்த்தம் நடந்தது. கொரோனா ஊரடங்கு முடிந்த பின் திருமண தேதியை முடிவு செய்யவிருந்தார்.
இந்நிலையில், சென்னையை அடுத்த நாசரத்பேட்டையில் உள்ள தனியார் நட்சத்திர ஹோட்டலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது இந்த விபரீத முடிவு சின்னத்திரை நடிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இன்று அதிகாலை 2:30 மணிக்கு படப்பிடிப்பு முடிந்து ஹோட்டல் அறைக்கு திரும்பிய சித்ரா விடுவதற்குள் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டிருக்கிறார்.
இது பல சர்ச்சைகள் மற்றும் கேள்விகளை எழுப்பியுள்ளது. இன்னும் சில மாதங்களில் திருமணம் செய்துகொள்ளவிருந்த நிலையில் இவர் இந்த முடிவை எடுத்திருப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Tags
VJ Chithu