"வெளஞ்சி நிக்கும் பொம்பள.. வெக்கம் கெட்டு நிக்குறேன்.." - முதலிரவு அறையில் சூட்டை கிளப்பும் தேவி ப்ரியா..! - வைரல் வீடியோ..!

 
90’ஸ் கிட்ஸ் அனைவருக்குமே தேவிப்ரியாவை நிச்சயம் நினைவிருக்கும். காரணம், சீரியல்கள் மக்களை கொஞ்சம் கொஞ்சமாக ஆட்கொண்டிருந்த சமயத்தில் பல சீரியல்களில் பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்துக் கொண்டிருந்தார். 
 
வில்லியாக நடிக்கும் போது, கோபத்தையும், வெறுப்பையும் இயல்பாக தனது கண்களில் கொண்டு வந்து மிரட்டுவார்.பெரும்பாலும் நெகட்டிவ் வேடங்களில் தான் நடித்துள்ளார் தேவி பிரியா. 
 
அதோடு, விஜய் டிவியில் ஒளிபரப்பப்பட்ட பல்வேறு நடன நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றார். பல்வேறு தொலைக்காட்சிகளில் 30-க்கும் மேற்பட்ட சீரியல்களில் நடித்துள்ளார். 
 
இயக்குநர் கங்கை அமரனின் “ஊரு விட்டு ஊரு வந்து” திரைப்படத்தின் மூலம் சினிமாவில் நுழைந்து, வாலி, வல்லமை தாராயோ, மஞ்சப்பை, யாமிருக்க பயமே உள்ளிட்ட பல திரைப்படங்களிலும் நடித்துள்ளார். 
 

அதோடு சினிமாவில் பல சப்போர்ட்டிங் கதாபாத்திரங்களுக்கு பின்னணி குரலும் கொடுத்துள்ளார். தேவிப்பிரியா என்றாலே அனைவருக்கும் ஞாபகம் வருவது அவரது கண்களும், அவரது கனீர் குரலும் தான். 
 
சின்னத்திரையில் நீண்டகாலமாக நடித்துவரும் தேவிபிரியா. சினிமாவில் டப்பிங் ஆர்டிஸ்டாகவும் அதிகம் பணியாற்றியுள்ளார் தேவிபிரியா. சீமராஜா திரைப்படத்தில் சிம்ரனுக்கும், புதுப்பேட்டை படத்தில் சினேகாவுக்கும், தாமிரபரணி’ படத்தில் நடிகை நதியாவிற்கும் டப்பிங் கொடுத்து பிரபலமானார்.
 

 
 
தற்போது சீரியலுக்காக போட பட்ட முதலிரவு செட் அப்பில் இவர் சூரரை போற்று படத்தில் இடம் பெற்ற காட்டுப்பயலே பாடலுக்கு சூடான முக பாவனைகளை வெளிக்காட்டி ஒரு குட்டி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Advertisement

கருத்துரையிடுக

0 கருத்துகள்