ஐஸ்வர்யா ராஜேஷ் எந்த அளவிற்கு நடிப்பில் கவனமாக இருக்கிறாரோ? அந்த அளவிற்கு சம்பளத்திலும் கறார் என்ற பேச்சு உண்டு. சின்னத்திரையில் தொகுப்பாளியாக வலம் வந்த ஐஸ்வர்யா ராகேஷ் பின்னாளில் நடிகையாக மாறினார்.
"காக்கா முட்டை" படத்தின் மூலம் தமிழ் திரையுலகையே திரும்பிப் பார்க்க வைத்தவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். ஐஸ்வர்யா ராஜேஷ் விஜய் சேதுபதியுடன் நடித்துள்ள க/பெ ரணசிங்கம் விரைவில் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.
இந்த படத்தில் ட்ரைலரில் ஐஸ்வர்யா ராஜேஷ் பேசியுள்ள அனல் பறக்கும் அரசியல் வசனங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. 4 பாட்டுக்கு ஆடினோமா, ஹீரோவோடு 2 ரொமான்ஸ் சீன்களில் தலை காட்டினோமா என்றில்லாமல் தன்னுடைய கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்த கதைகளில் மட்டுமே நடித்து வருகிறார்.
‘காக்கா முட்டை’ படத்தில் இரு பிள்ளைகளுக்கு அம்மாவாக நடித்து ஆச்சரியப்படவைத்ததே அதற்கு சாட்சி. தொடர்ந்து விக்ரம், தனுஷ், விஜய்சேதுபதி உள்ளிட்ட பெரிய ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்த ஐஸ்வர்யா ராஜேஷ், மகளிர் கிரிக்கெட் விளையாட்டை மையப்படுத்தி உருவாக்கப்பட்ட "கனா" படத்தில் கிரிக்கெட் வீராங்கனையாகவே வாழ்ந்து விருதுகளையும், ரசிகர்களின் பாராட்டுகளையும் பெற்றார்.
சிவகார்த்திகேயனுக்கு தங்கையாக எங்க வீட்டு பிள்ளை படத்தில் நடித்து அசத்தினார். க/ பெ ரணசிங்கம் படத்தில் வெளிநாட்டில் இறந்த கணவனது உடலை கொண்டு வர போராடும் சாமானிய பெண்ணின் வலிகளை கண்முன் காட்டி மிரளவைத்தார்.
இதுவரை அதிரடியான படத்தில் நடிக்காமல் இருந்த இவர், முதல் முறையாக அதிரடியான ஒரு த்ரில்லர் படத்தில் கதையின் நாயகியாக நடித்துள்ள திரைப்படம் 'திட்டம் இரண்டு'. தற்போது முதன் முறையாக போலீஸ் இன்ஸ்பெக்டராக விக்னேஷ் கார்த்தி இயக்கியுள்ள திட்டம் இரண்டு திரைப்படம் ஜூலை 30ம் தேதி சோனி லைவ் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.
இந்நிலையில், தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் செம்ம க்யூட்டான சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், நேச்சுரல் ப்யூட்டி.. உங்க பாக்கெட்டை செக் பண்ணனும்.. என்னுடைய இதயத்தை நீங்க திருட்டீங்கன்னு நெனைக்குறேன் என்று உருகி வருகிறார்கள்.
Tags
Aishwarya Rajesh