பார்ப்பவர்கள் எல்லாம் மிரண்டு போகிற வகையில் புல்லட் பைக்கை எடுத்துக்கொண்டு கலக்கலாக ரவுண்ட் போட்ட ரச்சிதாவின் போட்டோஸ்கள் தான் தற்போது வைரலாக வலம் வருகிறது.
நான் சீரியலில் மட்டும்தான் கதாநாயகி அல்ல நிஜத்திலும் கதாநாயகி தான் என தற்போது சரவணன் மீனாட்சி புகழ் ரச்சிதா அனைவருக்கும் நிரூபித்திருக்கிறார். இவருடைய லேட்டஸ்ட் போட்டோக்களை பார்த்து தான் அவருடைய ரசிகர்கள் மெய் சிலிர்த்துப் போய் கமெண்டுகளை கொட்டி வருகின்றனர்.
அதுவும் ஒன்றல்ல இரண்டல்ல பல விதமான போட்டோக்களை விதவிதமான அப்லோட் பண்ணி கொண்டிருக்கிறார். இவர் போட்டிருக்கும் போஸ்ட் பார்த்ததும் இவருடைய ரசிகர்கள் ஆரவாரம் எழுப்பி ஆர்ப்பரித்து வருகின்றனர். சும்மா சொல்லக் கூடாது.
அந்தக் காலத்து ரிவால்வர் ரீட்டா ரேஞ்சுக்கு பார்க்கவே படு பயங்கர கெத்தாக காணப்படுகிறார் ரச்சிதா இந்த போட்டோக்களில்.தற்போது நாம் இருவர் நமக்கு இருவரும் மிகவும் பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கும் இந்த சூழலில் ரச்சிதாவுக்கு சினிமாவில் ஹீரோயின் ஆகும் வாய்ப்பு கிடைத்து இருக்கிறது.
அவர் ஒரு கன்னட படத்தில் ஹீரோயினாக நடிக்க தொடங்கி உள்ளார். அதனால் அவர் நாம் இருவர் சீரியலில் இருந்து விலக போகிறார் என்கிற செய்தியும் பரவி வருகிறது. அது வதந்தியா இல்லை உண்மையா என ரச்சிதா இதுவரை எந்த விளக்கமும் அளிக்கவில்லை.
இந்நிலையில் ரச்சிதா தான் ரங்கநாயகா என்கிற படத்தில் நடித்து வருவதை உறுதி செய்யும் விதமாக ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார். அதில் அவர்கள் வரலாற்று பின்னணி இருக்கும் கதைக்கான உடைகளில் இருக்கின்றனர்.
ரசிகர்கள் தன்னை வாழ்த்த வேண்டும் என ரச்சிதா கேட்டுக்கொண்டு இருக்கிறார். இந்நிலையில், ஜாக்கெட்டை கழட்டி விடு இரண்டு கையையும் விட்டு விட்டு புல்லட் ஓட்டும் ஒரு வீடியோவை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார் அம்மணி.
0 கருத்துகள்