நடிகை ரீமாசென்னுக்கும், தொழில் அதிபர் ஷிவ்கரன் சிங்குக்கும் 9 வருடங்களுக்கு முன் திருமணம் நடந்தது. அவருக்கு ஒரு மகனும் இருக்கிறார். ருத்ர வீர சிங் என அவர் தனது மகனுக்கு பெயரிட்டுள்ளார்.
சில ரீமா சென் குடும்ப புகைப்படங்கள் கூட சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகிய நினைவு மக்களுக்கு இருக்கும். மின்னலே படத்தின் நாயகியாக தமிழ் சினிமாவில் அறிமுகமான ரீமா சென் அதற்குப் பிறகு தமிழ் சினிமாவில் பல வெற்றிப் படங்களில் நடித்தார்.
ஆனாலும், இந்தப் படத்தில் இருந்ததுபோல் கண்ணியமான கதாபாத்திரம் அவருக்கு அமையவில்லை. அந்தக் கண்ணியத்தால் கிடைக்கும் கூடுதல் மதிப்பும் அழகும் அந்தப் படங்களில் இல்லை.
ஒரு இயக்குநராக கெளதம் மேனன் தன் படங்களில் நாயகியாக நடிப்பவர்களுக்குச் செய்யும் ஜாலம் என்ன என்பதை இதிலிருந்தே உணரலாம். எல்லா நடிகைகளையும் போல் திருமணத்துக்கு பின் ரீமாசென் நடிக்க மாட்டார் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், பெரிய மனது கொண்ட கணவர் தொடர்ந்து நடிக்க அனுமதி அளித்தார். இதை தொடர்ந்து அனுராக் காஷ்யப் இயக்கத்தில் உருவான கேங்க்ஸ் ஆப் வசேபூர் என்ற இந்திப் படத்தில் நடித்தார்.
தொடர்ந்து சட்டம் ஒரு இருட்டறை என்ற தமிழ் படத்திலும் நடித்தார். இந்த நேரத்தில் ரீமாசென் தன்னுடைய கணவருடன் Party-ல செய்த அட்டகாசங்கள் புகைப்படங்களாக வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.
0 கருத்துகள்