ஒவ்வொரு பிக்பாஸ் சீசனிலும் வெளிநாடு வாழ் தமிழர்களை ஈர்க்கும் விதமாக வெளிநாடு வாழ் தமிழர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்கள். அந்த வகையில் இந்த சீசனில் நாடியா சாங் என்ற மலேசியா வாழ் தமிழர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
இவர் ஆரம்பத்தில் அமைதியாக தான் உண்டு தன் வேலை உண்டு என இருந்த காரணத்தினால் இவர்தான் நிகழ்ச்சியை விட்டு எலிமினேட் செய்யப்படுவார் என சொல்லப்பட்டது.
ஆனால் கதை சொல்லும் டாஸ்கில் இவர் தனது ஸ்டிக்ரிட்டான தாய் குறித்து கூறிய கதையால் ரசிகர்களை கவர்ந்தார்.
மேலும் தனது கணவர் குறித்து அவர் கூறிய கருத்துகளால் அவரது கணவர் சாங் சூன் ஹுவாத் யார் என இணையதளத்தில் தேடும் அளவுக்கு தனது கணவருக்கு புகழை தேடி தந்தார் நாடியா.
பேச்சில் இருந்த அமைதி உள்ளிட்டவற்றால் இவர் பிக்பாஸில் 5 போட்டியாளர்களில் ஒருவராக வருவார் என சொல்லப்பட்டது. ஆனால் இவர் இந்த நிகழ்ச்சியிலிருந்து முதன் ஆளாக வெளியேற்றப்பட்டார்.
தொடர்ந்து சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் இவர் தற்போது முட்டிக்கு மேல் ஏறிய கவர்ச்சி உடையில் தொடையை காட்டி போஸ் கொடுத்துள்ள புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டுள்ளார்.