பிரபல நடிகை ரேவதி திரையுலகில் தனக்கென ஒரு முத்திரையை பதித்தவர். அவரது இயல்பான நடிப்பு மற்றும் தைரியமான குணத்திற்காக ரசிகர்கள் அவரை கொண்டாடுகிறார்கள்.
மூத்த பத்திரிகையாளரும், சினிமா விமர்சகருமான செய்யாறு
பாலு, நடிகை ரேவதி குறித்து சமீபத்தில் பல சுவாரஸ்யமான தகவல்களை
பகிர்ந்துள்ளார். ஆகாயம் தமிழ் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில்
அவர் பேசிய விஷயங்களை இங்கே தொகுத்து வழங்கி உள்ளோம்.
பாரதிராஜாவின் கண்டுபிடிப்பு:
நடிகை
ரேவதியின் உண்மையான பெயர் ஆஷா கேருண்ணி. கதாநாயகிக்கான தேர்வு நடைபெற்ற
போது, பாரதிராஜா ரேவதியின் புகைப்படத்தை பார்த்த உடனேயே அவரைத்
தேர்ந்தெடுத்துள்ளார்.
ரேவதியின் புகைப்படத்தில் இருந்த வசீகரம்
பாரதிராஜாவை மிகவும் கவர்ந்தது. பின்னர், சின்ன வசனம் ஒன்றை கொடுத்து பேச
சொன்னதும், ரேவதி மலையாளம் கலந்த தமிழில் பேசியுள்ளார். அந்த மாடுலேஷன்
மற்றும் டயலாக் டெலிவரி பாரதிராஜாவுக்கு மிகவும் பிடித்துப் போக, ஆர்
சென்டிமென்ட் படி ஆஷா கேருண்ணி என்ற பெயரை ரேவதி என மாற்றியுள்ளார்.
நடிக்க பயந்த ரேவதி:
ரேவதி நடிக்க வருவதற்கு முன்பு, பாரதிராஜா படப்பிடிப்பில் நடிக்கத் தவறினால் யூனிட் முன்னிலையில் கை நீட்டி அடித்து விடுவார் என்று பலரும் பயமுறுத்தி உள்ளனர்.
இதனால், முதல் நாள் படப்பிடிப்பிற்கு பயந்து போன ரேவதி,
நடிக்காமல் ஒதுங்கி விடலாமா என்று கூட யோசித்தாராம். ஆனால், நடிகர்
மனோபாலா தான் ரேவதிக்கு தைரியம் சொல்லி அறிவுரை கூறி நடிக்க வைத்துள்ளார்.
இருந்தாலும், ஆரம்பத்தில் சில காட்சிகளில் ரேவதி திட்டு வாங்கியதாக
செய்யாறு பாலு கூறியுள்ளார்.
திரையுலகில் வெற்றி:
ரேவதி நடித்த 'மண்வாசனை' திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. அதன் பிறகு, ரேவதிக்கு தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு என நான்கு மொழிகளிலும் தொடர்ந்து வாய்ப்புகள் வந்தன.
கிளாமர் உடைகள் தனக்கு ஒத்து வராது என ரேவதி
முன்கூட்டியே இயக்குனர்களிடம் கூறிவிடுவார். கடைசி வரை தனது நடிப்புத்
திறமையை மட்டுமே நம்பி சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தார்.
புன்னகை மன்னன் படத்தில் ரேவதி:
பிரபல இயக்குனர் கே.பாலச்சந்தர் இயக்கிய 'புன்னகை மன்னன்' படத்தில் முதலில் ரேவதி தான் ரேகா கதாபாத்திரத்தில் நடிக்க இருந்தார்.
ஆனால், படத்தில் கமல்ஹாசனுடன் முத்தக்காட்சி இருக்கிறது என்று சொன்னதும், ரேவதி நடிக்க மறுத்துவிட்டார். என்னுடைய ரசிகர்கள் இதனை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று அவர் பிடிவாதமாக கூறியிருக்கிறார்.
இயக்குனர் எவ்வளவோ சொல்லியும் ரேவதி
கேட்கவில்லை. ஆனால், பின்னாளில் ரேகாவிடம் அந்த முத்த காட்சியில்
நடித்திருக்கலாம் என்று ரேவதி வருத்தப்பட்டதாக செய்யாறு பாலு
தெரிவித்துள்ளார். இருப்பினும், 'புன்னகை மன்னன்' திரைப்படம் ரேவதியின்
திரை வாழ்க்கையில் ஒரு முக்கியமான படமாக அமைந்தது.
கமலுடன் ஏற்பட்ட நட்பு:
கமல்ஹாசன்
டார்ச்சர் செய்வார் என்று மற்றவர்கள் சொன்னதால், ஆரம்பத்தில் கமலுடன்
நடிக்க ரேவதி தயங்கினாராம். ஆனால், 'புன்னகை மன்னன்' படத்தில்
நடிக்கும்போது, கமல் ரேவதிக்கு நிறைய நடிப்பு டிப்ஸ் கொடுத்துள்ளார்.
அதன்
பிறகு, ரேவதி கமலுடன் நெருங்கிய நட்பு பாராட்டினார். 'கைதியின் டைரி',
'தேவர் மகன்' போன்ற பல படங்களில் அவர்கள் இணைந்து நடித்தனர்.
திருமண வாழ்க்கையும், தாய்மையும்:
ரேவதிக்கு திருமண வாழ்வில் சில பிரச்சனைகள் ஏற்பட்டன. இரண்டாவது திருமணம் செய்து கொள்ளப் போவதாக கிசுகிசுக்கள் வந்தன. ஆனால், ரேவதி கிசுகிசுக்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காதவர்.
இருப்பினும், இரண்டாவது திருமணம் குறித்து வந்த செய்திக்கு 5 வருடம் கழித்து மறுப்பு அறிக்கை வெளியிட்டார். அதன் பிறகு குழந்தை தத்தெடுக்கப் போகிறார் என்ற செய்தி பரவியது.
அதற்கும் ரேவதி
எந்த பதிலும் சொல்லவில்லை. பிறகு 5 வருடங்கள் கழித்து, டெஸ்ட் டியூப்
பேபி மூலம் குழந்தை பெற்றுக் கொண்டதாக வெளிப்படையாக அறிவித்தார். தாய்மை
உணர்வு தனக்கு மிகவும் பிடிக்கும் என்றும், 47 வயதில் தனக்கு தாய்மைக்கான
ஏக்கம் வந்ததாகவும், மருத்துவர்களை அணுகிய பிறகு குழந்தை பெற்றுக்
கொண்டதாகவும் தைரியமாக தெரிவித்தார்.
தைரியமான பெண் ரேவதி:
ரேவதி
மிகவும் தைரியமான பெண் என்றும், பத்திரிகையாளர்களிடம் நன்றாக பேசுவார்
என்றும் செய்யாறு பாலு பாராட்டியுள்ளார். மொத்தத்தில், நடிகை ரேவதி
குறித்து செய்யாறு பாலு பகிர்ந்து கொண்ட இந்த தகவல்கள், அவரது திரை
வாழ்க்கையையும், தனிப்பட்ட வாழ்க்கையையும் புரிந்து கொள்ள உதவுகின்றன.