இப்போது நேற்று அல்ல, ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு நடிகை லட்சுமி மேனன் கொடுத்த பேட்டியின் வீடியோ காட்சிகள் தற்போது இணையத்தில் தீயாக பரவி வருகிறது.
நடிகை லட்சுமி மேனன் தன்னுடைய பள்ளி பருவத்திலேயே சினிமா நடிகையாக வாய்ப்பு பெற்றவர்.
கும்கி திரைப்படத்தில் இவருடைய நடிப்பு ரசிகர்களால் பாராட்டப்பட்டது. ஒரு கட்டத்தில் இவர் நடித்ததால் அந்த படம் ஹிட் அடித்து விடும் என்ற நம்பிக்கை இருந்தது.
ராசியான நடிகை என்று போட்டி போட்டுக் கொண்டு தங்களுடைய படங்களில் ஒப்பந்தம் செய்தார்கள் இயக்குனர்கள்.
அந்த வகையில், நான் சிகப்பு மனிதன் என்ற படத்தில் நடிக்கும் பொழுது நடிகர் விஷாலுடன் நெருக்கமான காட்சிகளில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார்.
உச்சகட்டமாக முதன்முறையாக லிப்-லாக் காட்சியிலும் நடித்து ரசிகர்களை அதிர வைத்தார் நடிகை லட்சுமி மேனன்.
இந்நிலையில், அப்போதைய பேட்டி ஒன்றில் நடிகை லட்சுமி மேனனிடம் விவகாரமான கேள்விகள் எழுப்பப்பட்டது. அந்த கேள்வி என்னவென்றால், இந்த பொருட்களில் எது மிகவும் காரமானது..? பச்சை மிளகாய், சிகப்பு மிளகாய், மிளகாய் தூள் அல்லது விஷாலின் உதடு என்று கேள்வி எழுப்பப்பட்டது.
இந்த கேள்வியை கேட்டு ஷாக் ஆனார் நடிகை லட்சுமிமேனன். அதனை, தொடர்ந்து தன்னுடைய பதிலை கொடுக்க ஆரம்பித்தார்.
அவர் கூறியதாவது, காரமானது என்றால் என்னை பொருத்தவரை அது பச்சை மிளகாய் தான்பா. ஒரு வேளை இனிப்பானது எது..? என்று கேட்டிருந்தால் நீங்கள் எதிர்பார்க்கக் கூடிய பதிலை நான் கொடுத்திருப்பேன் என நமட்டு சிரிப்பு சிரித்து இருக்கிறார் அம்மணி.
இந்த வீடியோ காட்சி தற்போது இணையத்தில் தீயாக பரவி வருகிறது.