கொடூரத்தின் உச்சம்.. காதலியின் அந்த பாகத்தை வெட்டி.. காதலன் செய்த விபரீதம்.. நடுங்கும் தமிழ்நாடு!


விழுப்புரம், திருவெண்ணெய் நல்லூரைச் சேர்ந்த ஆகாஷ் (19) மற்றும் அபிநயா ஆகியோர், அங்குள்ள கலைக் கல்லூரியில் பி.எஸ்.சி. இரண்டாம் ஆண்டு பயின்று வந்தனர். 

காதலித்து வந்த இவர்கள், கல்லூரி விடுமுறையை முன்னிட்டு, பெற்றோரிடம் வேலைக்குச் செல்வதாகக் கூறி சென்னை வந்து, பெரம்பூரில் உள்ள ராஜீவ்காந்தி நகரில் வாடகை வீடு எடுத்து ஒன்றாகத் தங்கினர்.  

கணவன்-மனைவி எனக் கூறி வீடு பெற்ற இவர்கள், தங்களது காதலை மறைத்து வாழ்ந்து வந்தனர். நவம்பர் மாதம், அவர்கள் தங்கியிருந்த வீடு நீண்ட நேரமாக உள்பக்கம் பூட்டியிருந்ததால், அக்கம்பக்கத்தினர் சந்தேகமடைந்து ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்தனர்.

அப்போது, ஆகாஷ் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாகக் கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனடியாகத் தகவல் அறிந்து விரைந்த பெரம்பூர் காவல்துறையினர், கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, அபிநயா கண் மற்றும் வாயில் ரத்தக் காயங்களுடன், வாயில் நுரை தள்ளியவாறு தரையில் சடலமாகக் கிடந்தார். 

விசாரணையில், இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில், ஆத்திரமடைந்த ஆகாஷ், அபிநயாவை வாயில் கொடூரமாக வெட்டி.. அடித்துக் கொலை செய்துள்ளார், பின்னர் பயந்து போன அவர் தானும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாகத் தெரியவந்தது. 

இரு வீட்டாரும் இவர்களுக்கு திருமணம் செய்து வைக்கத் திட்டமிட்டிருந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்தச் சம்பவம், காதல் உறவுகளில் உணர்ச்சிவசப்படுவதால் ஏற்படும் விபரீத விளைவுகளை எடுத்துக்காட்டுகிறது. 

காவல்துறை வழக்குப் பதிவு செய்து, சடலங்களை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பியுள்ளது. இந்தச் சம்பவம் ஒட்டு மொத்த தமிழ்நாட்டையும் நடுங்க வைத்துள்ளது.