கன்னியாகுமரி மாவட்டம், தென்தாமரைகுளம், கரம்பவிளை பகுதியைச் சேர்ந்த 20 வயது ரெஜினா என்பவர், நாகர்கோவில் பகுதியில் உள்ள ஒரு தனியார் நர்சிங் கல்லூரியில் படித்து வந்தார்.
இவருக்கும், திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி நகராட்சி அலுவலகத்தில் தற்காலிக ஊழியராகப் பணியாற்றும் 25 வயது முகேஷ் என்பவருக்கும் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் இருவரும் நெருங்கிப் பழகி காதலில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், இருவரும் அடிக்கடி நேரில் சந்தித்து வந்ததாகவும், ரெஜினா கல்லூரிக்குச் செல்வதாகவும், நண்பர்கள் வீட்டுக்குச் செல்வதாகவும் பெற்றோரிடம் கூறிவிட்டு முகேஷுடன் ஊர் சுற்றி வந்ததாகவும் தெரியவந்துள்ளது.
இதனிடையே அடக்க முடியாத உடலுறவு வெறியில் இருவரும் திருமணத்துக்கு முன்பே பலமுறை உல்லாசமாக இருந்துள்ளனர். இதன் விளைவாக ரெஜினா கர்ப்பமடைந்தார்.
இந்த விஷயம் வீட்டில் தெரிந்தால் பெரும் பிரச்சனை ஏற்படும் என்பதால், தனது காதல் உறவு மற்றும் கர்ப்பம் குறித்து பெற்றோரிடம் எதுவும் தெரிவிக்காமல் மறைத்து வந்தார்.
நேற்று முன்தினம் (மார்ச் 31) காலை ரெஜினாவுக்கு பிரசவ வலி ஏற்பட்டது. நர்சிங் மாணவியான அவர், தானே கழிவறைக்குச் சென்று குழந்தையைப் பெற்றெடுத்ததாகக் கூறப்படுகிறது.
பின்னர் உடனடியாக முகேஷுக்கு செல்போன் மூலம் தகவல் தெரிவித்தார். அப்போது முகேஷ், “குழந்தையை எங்காவது வீசிவிட்டு வா, நாம் வாழலாம்” என்று கூறியுள்ளார்.
இதைக் கேட்ட ரெஜினா, பிறந்த பச்சிளம் குழந்தையை ஒரு பையில் போட்டு, பக்கெட்டில் அடைத்து, முகேஷின் வீட்டுக்கு அருகில் உள்ள கோவிலின் பின்புறம் வைத்துவிட்டுச் சென்றதாகக் கூறப்படுகிறது.
குழந்தை மூச்சுத் திணறி உயிரிழந்த நிலையில் இருந்தது. அப்பகுதியைச் சேர்ந்த ஒரு பெண், பக்கெட்டைப் பார்த்து சந்தேகம் அடைந்து திறந்து பார்த்தபோது, இறந்த பச்சிளம் குழந்தை உள்ளே இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.
உடனடியாக தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து வழக்குப் பதிவு செய்தனர். அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்த போலீசார், ரெஜினாவை அடையாளம் கண்டு கைது செய்தனர்.
ரெஜினாவின் வாக்குமூலத்தின் அடிப்படையில் முகேஷையும் போலீசார் கைது செய்தனர். இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். காதலித்து கர்ப்பமடைந்த மாணவி, பிறந்த குழந்தையை பெற்றெடுத்து கொலை செய்த இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
போலீசார் மேலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Summary in English : A 20-year-old nursing student from Kanyakumari district became pregnant after a relationship with a 25-year-old temporary municipal employee from Tirunelveli. She delivered the baby at home and placed it in a bucket near a temple. A woman found the infant and alerted police. Both were arrested.

