ராய்ப்பூர் (சத்தீஸ்கர்) : சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள ஒரு பெண்கள் விடுதியில் நடந்த அதிர்ச்சியூட்டும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இரண்டு நெருங்கிய தோழிகள் ஆன்லைனில் ஆர்டர் செய்த ஒரு கண்ணாடி உபகரணத்தை வைத்து விசித்திரமான முறையில் உறவு கொண்டபோது, அந்த உபகரணத்தின் ஒரு பகுதி உடைந்து உள்ளே சிக்கியது.
இதை உடனடியாக கவனிக்காமல் இருந்ததால், ஒரு பெண் கடுமையான வலி மற்றும் தொற்றுக்கு ஆளாகி உயிரிழந்த சம்பவம் வெளியாகியுள்ளது. பிரேத பரிசோதனை அறிக்கை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சத்தீஸ்கரில் உள்ள ஒரு பிரபல பெண்கள் விடுதியில் தங்கியிருந்த 22 வயது மாணவி ரேவதி (பெயர் மாற்றப்பட்டது) கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு தனது அறையில் கடுமையான காய்ச்சல் மற்றும் வயிற்று வலியுடன் மயக்கமடைந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார்.
உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். முதலில் இது சாதாரண காய்ச்சல் விளைவு என்று கருதப்பட்டது.
விடுதி நிர்வாகத்தின் புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தினர். பிரேத பரிசோதனை அறிக்கையில் பகீர் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ரேவதியின் உடலில் கண்ணாடி உபகரணத்தின் உடைந்த பகுதி சிக்கியிருந்தது தெரிய வந்தது. இரு தோழிகளும் ஆன்லைனில் ஆர்டர் செய்த அந்த கண்ணாடி உடலுறவு பொம்மை உபகரணத்தை விசித்திரமான முறையில் பயன்படுத்தியபோது இந்த விபத்து ஏற்பட்டதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.
அந்த உபகரணத்தின் ஒரு பாகம் உடைந்து உள்ளே சிக்கியிருந்தும், அவர்கள் உடனடியாக அதை கவனிக்கவில்லை. கடுமையான வலியால் துடித்த ரேவதி, கடந்த ஒரு வாரமாக சிறுநீர் கழிக்க முடியாமல் பெரும் அவஸ்தைப்பட்டார்.
தொற்று ஏற்பட்டு காய்ச்சல் அதிகரித்த நிலையில், சாதாரண காய்ச்சலுக்கு எடுத்துக்கொள்ளும் மருந்துகளை மட்டும் உட்கொண்டு வந்தார். வலி மற்றும் அசௌகரியத்தை வெளியில் சொல்லாமல், “சாதாரண காய்ச்சல், சரியாகிவிடும்” என்று நினைத்து அலட்சியமாக இருந்ததும் பிரேத பரிசோதனையில் தெரிய வந்தது.
ரேவதியின் நெருங்கிய தோழியான 21 வயது பிரியா (பெயர் மாற்றப்பட்டது) இந்த சம்பவத்தில் சம்பந்தப்பட்டிருப்பதாக விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். இருவரும் பல மாதங்களாக ஒரே அறையில் தங்கியிருந்ததாகவும், அவர்களுக்கு இடையே நெருக்கமான உறவு இருந்ததாக விடுதி தோழிகள் சிலர் தெரிவித்துள்ளனர்.
போலீசார் தெரிவித்ததாவது: “ஆன்லைன் உபகரணம், அதன் பயன்பாடு, உடைந்த பகுதி சிக்கிய விவரங்கள், மரணத்திற்கான காரணங்கள் உள்ளிட்ட அனைத்தையும் விரிவாக விசாரித்து வருகிறோம். சாட்சியங்கள், சிசிடிவி காட்சிகள், மருத்துவ அறிக்கைகள் அடிப்படையில் உண்மை வெளியாகும்” என்றனர்.
இந்த சம்பவம் பெண்கள் விடுதிகளின் பாதுகாப்பு, தனிப்பட்ட உறவுகள் மற்றும் ஆன்லைன் உபகரணங்களின் பாதுகாப்பு குறித்து பல கேள்விகளை எழுப்பியுள்ளது.
ரேவதியின் குடும்பத்தினர் முழுமையான விசாரணைக்கு கோரிக்கை வைத்துள்ளனர். பெற்றோர்கள் தங்கள் பெண் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்து கவலை தெரிவித்து வருகின்றனர்.
English Summary : In Chhattisgarh, two close friends in a women's hostel used an online-ordered glass device in an unusual manner. A part of it broke and lodged inside one woman, leading to severe pain, urinary difficulties, infection and high fever. She managed with common medicines for over a week without proper medical help and later passed away. Post-mortem examination revealed the details.