என் விவாகரத்திற்கு காரணம் இந்த இசையமைப்பாளர் தான்..! குண்டை தூக்கி போட்ட வீரம் பட நடிகர்..!

பிறன்மனை நோக்காமை என்ற ஒரு சொற்றொடர் தமிழில் இருப்பது அனைவருக்கும் மறந்து போய் விட்டது. ஏனென்றால் இன்றெல்லாம் அடுத்தவன் மனைவியை ஆட்டையை போடுவதை தொடர் கதையாக திரை உலகத்தார் மாற்றிவிட்டார்கள் என்று சொல்லலாம்.

இந்த காரணத்தால் அவர்களுக்கு இடையே பிரிவு ஏற்படுவதோடு விவாகரத்து வரை இந்தப் பிரச்சனை செல்கிறது. மேலும் விவாகரத்துக்கு பின்பு சட்டையை மாற்றுவது போல விருப்பப்பட்டவர்களை திருமணம் செய்து கொள்கிறார்கள். இது அவர்களது பர்சனல் லைஃப் என்றாலும் ஒருவித கலாச்சார சீர்கேடு என்று கூறலாம்.

அந்த வகையில் சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளி வந்த வீரம் திரைப்படத்தில் முக்கியமான கேரக்டர் ரோலை செய்து ரசிகர்களின் மத்தியில் பிரபலமான நடிகர் என்ற பெயரைப் பெற்ற பாலாவை பற்றி உங்களுக்கு நினைவில் இருக்கலாம்.

தனது அற்புதமான நடிப்பை வெளிப்படுத்திய இவர் 2010 ஆம் ஆண்டு பாடகி அம்ருதா சுரேஷை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு அழகிய பெண் குழந்தையை பெற்றெடுத்தார். இதனை அடுத்து இவர்கள் இருவர் இடையேயும் கருத்து வேற்றுமைகள் எழுந்தது.

இனி சேர்ந்து வாழ்ந்தால் வேலைக்காகாது என்பதை உணர்ந்து கொண்ட இவர்கள் 2019 ஆம் ஆண்டு சட்டப்படி விவாகரத்து பெற்றது அனைவருக்கும் நன்றாகத் தெரியும்.

--Advertisement--

ஆனால் இதில் அதிர்ச்சி தரக்கூடிய விஷயம் என்னவென்றால் அம்ருதா சுரேஷை இசையமைப்பாளர் கோபி சுந்தர் என்பவர் இரண்டாம் திருமணம் செய்து கொண்டிருக்கிறார்.

இந்நிலையில் தனது முதல் மனைவியின் பிரிவு மற்றும் விவாகரத்து பற்றி பேசிய நடிகர் பாலா, நானும் அம்ருதா சுரேஷை காதலித்து திருமணம் செய்து கொண்டது உண்மைதான். அவரை விவாகரத்து செய்ததும் உண்மைதான். ஆனால் இந்த விவாகரத்துக்கு காரணம் யார் என்று சொன்னால் நீங்கள் அதிர்ந்து போவீர்கள்.

அந்த நபர் யார் என்பதை நான் இப்போது உங்களுக்கு சொல்கிறேன். அவர் இரண்டாவதாக திருமணம் செய்து கொண்ட இசையமைப்பாளர் கோபி சுந்தர் தான் எங்களது பிரிவிற்கு மூல காரணம். இந்த விஷயத்தை பொது இடத்தில் பகிர எனக்கு விருப்பம் இல்லை. மேலும் உண்மைகளை பேசினால் எனது மகளின் எதிர்காலம் பாதிப்படையும்.

எனவே தான் வாயை மூடி மௌனியாக இருக்கிறேன். இதனை நான் தொடர்ந்து பேசினால் என் மகளை கூட பார்க்க விடமாட்டார்கள். தற்போதும் அப்படி தான் செய்து வருகிறார்கள் என்று கண்ணீர் மல்க தனது கருத்தை தெரிவித்திருக்கிறார்.

இந்த விஷயம் தற்போது இணையத்தில் வைரலாக பேசப்பட்டு வருகிறது. உண்மையிலேயே இப்படி நடந்திருக்குமா? என்று பல்வேறு வகையான கேள்விகளை ரசிகர்கள் முன் வைத்து வருகிறார்கள்.