நீ என்ன ஒன்னும் தெரியாத பாப்பாவா..? நீயும் தான் அந்த ரூமில்.. திரிஷாவை வெளுத்து வாங்கிய சுசித்ரா..!

கடந்த 2016 ஆம் ஆண்டு நடிகர் நடிகைகளின் அந்தரங்க லீலைகள் வெளியிட்டு சுச்சி லீக்ஸ் விவகாரம் மிகப்பெரிய விஷயமாக பேசப்பட்டு பெரும் பூதாகரத்தை கிளப்பியது.

குறிப்பாக நட்சத்திர நடிகைகளான திரிஷா , தனுஷ், அனுயா, நயன்தாரா, சிம்பு, அனிருத் ,ஆண்ட்ரியா உள்ளிட்ட பிரபலங்களின் அந்தரங்க லீலைகள் புகைப்படங்கள் ஆகவும் வீடியோக்களாகவும் வெளியாகி பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தியது.

இது அனைத்தும் பிரபல பாடகி சுசித்ராவின் ட்விட்டர் அக்கவுண்டில் இருந்து தொடர்ச்சியாக வெளிவந்து கொண்டு இருந்ததால் அதற்கு சுச்சி லீக்ஸ் என பெயரிட்டு விட்டார்கள்.

பாடகி சுசித்ரா:

சுசித்ரா முதன்முதலில் ஆர் ஜே வாக தனது கெரியரை தொடங்கி அதன் பிறகு பல்வேறு திரைப்படங்களுக்கு பாடல் பாடியிருக்கிறார்.

---- Advertisement ----

குறிப்பாக இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழி படங்களுக்கு கிட்டத்தட்ட நூற்றுக்கும் மேற்பட்ட பாடல்களை பாடி பிரபலமான பாடகியாக வலம் வந்து கொண்டிருந்தார்.

தொடர்ச்சியாக பல வெற்றி பாடல்களை பாடி ஒட்டுமொத்த மக்களால் பிரபலமான படகியாகவும் ஆர்ஜேவாகவும் தென்பட்டு வந்தார்.

திறமையான பெண்மணியாக தென்பட்டு வந்த பாடகி சுசித்ரா இந்த சுச்சி லீக்ஸ் விவகாரத்தில் தனது மிகப்பெரிய அவப்பெயரை சம்பாதித்து பெரும் விமர்சனத்திற்கு உள்ளாகினார்.

இதனிடையே இவர் நடிகரும் ஸ்டாண்ட் அப் காமெடியனுமான கார்த்திக் குமார் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

என் வாழ்க்கையை நாசம் செய்த ரெண்டு பேர்:

இந்த சுச்சி விவகாரத்தில் என் கணவர் கார்த்திக் குமார் மற்றும் தனுஷ் தான் முக்கிய காரணமாக இருந்தார்கள் என சுசித்ரா அப்போதே பேட்டிகளில் கூறியது பெரும் பரபரப்பாக பேசப்பட்டது.

இந்த விவகாரம் 2016 ஆம் ஆண்டு பூதாகரமாக வெடித்தது பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக ஓய்ந்த நிலையில் தற்போது மீண்டும் சுசித்ரா YouTube சேனல்களுக்கு தொடர்ச்சியாக பேட்டி கொடுத்து வருகிறார்.

இதனால் மீண்டும் இந்த விவகாரத்தை பூதாகரமாக கிளப்பி இருக்கிறார். அந்த வகையில் சமீப நாட்களாக இந்த விஷயம் குறித்தும் பிரபலங்களின் லீலைகள் குறித்தும் வெளிப்படையாக பேசி வருகிறார்.

திரிஷா குறித்து பேசி இருக்கும் சுசித்ரா இந்த விவகாரத்தில் என்னை தேவையில்லாமல் மாட்டி விட்டது இரண்டு நபர்கள்தான்.

ஒன்று தனுஷ் எனது முன்னால் கணவரான கார்த்திக், மற்றும் நடிகர் தனுஷ் தான் இவர்கள் இருவரும் பிராங்க் செய்கிறேன் என்று கூறி இப்படி என்னுடைய வாழ்க்கையை நாசம் செய்து விட்டார்கள்.

அவர்கள் இருவரும் பிராங்க் பண்ணுவதற்கு ஏதாவது ஒரு ட்விட்டர் அக்கவுண்ட் தேவைப்பட்ட சமயத்தில் கார்த்திக் என்னுடைய அக்கவுண்ட் எடுத்து தனுஷின் கொடுத்துவிட்டார்.

இப்படி தான் என்னுடைய வாழ்க்கையில் இவர்கள் விளையாட தொடங்கினார்கள். நடிகர் தனுஷ் இயக்குனர் ஜவஹரின் மொபைல் போனை வாங்கி கார்த்திக்கு கண்டபடி மெசேஜ் அனுப்புவார்.

தனுஷ் உடன் படுக்கையில் திரிஷா:

அதுவும் ஓரினச்சேர்க்கை உறவு வைத்துக் கொள்வது போல் அவர்கள் மெஜேஜ் அனுப்பி பேசிக்கொள்வார்கள். அது என்னிடம் ஆதாரமாக இருக்கிறது.

அவ்வளவு பெரிய விஷயத்தை செய்துவிட்டு அது கூட அதுவும் ஒரு வகையான பிராங்க் என கூறி கூறுவார்கள்.

அது மட்டுமில்லாமல் திரிஷாவும் இந்த பிராங்க் விஷயத்திற்கு தானாகவே வந்து தனது பர்சனல் போட்டோவை தந்தார். அது மட்டும்மில்லாமல் தனுஷ் உடன் அவர் படுக்கையில் கிடந்தார் .

ஆனால், அதன் பின்னர் அவர்கள் ஒரே ஒரு ட்விட்டை மட்டும் போட்டுவிட்டு இந்த விவகாரத்தில் தன் பெயர் அடிப்படாமல் எஸ் கேப் ஆகிவிட்டார்.

இதுவரை பாதிக்கப்படாமல் திரிஷா இருப்பதற்கு தனுஷும் ஒரு காரணம்தான். ஆனால் என்னை மட்டும் என்னுடைய பெயரை மட்டும் தவறாக பயன்படுத்திக் கொண்டு மக்கள் மத்தியில் மோசமான பெண்ணாக என்னை சித்தரித்துவிட்டார்கள்.

அதுமட்டுமில்லாமல் என்னை மனநிலை சரியில்லாதவர் என்று எனக்கு முத்திரையும் குத்தினார்கள்.

இதை நினைத்து நான் பலமுறை வேதனைப்பட்டு கதறி அழுது கோவில் கோவிலாக சென்று வேண்டிக்கிறேன்.

எல்லாத்துக்கும் கடவுள் இருக்கிறார் என்று நினைத்தேன். அதன் பிறகு இந்தியாவில் இருக்கவே எனக்கு பிடிக்கவில்லை.

சுசித்ராவுக்கு திரிஷா பதிலடி:

யாருடனும் பழகுவதற்கும் எனக்கு பிடிக்கவில்லை. இதனால் நான் லண்டனுக்கு சென்று சில ஆண்டுகள் தங்கி இருந்தேன் என்றார்.

திரிஷாவை குறித்த பூதாகரமான ஒரு விஷயத்தை சுசித்ரா கூறியதையடுத்து அவருக்கு பதிலடி கொடுத்துள்ள திரிஷா தனது இன்ஸ்டாகிராமில் “நான் சரியாக இருந்தாலும் இந்த உலகம் குறை கூறுகிறது.

உண்மை திரித்து பேசுகிறது என்று அப்சட்டாக இருக்கும் வரை இமோஜியை அவர் போட்டு இந்த பதிவை வெளியிட்டு இருக்கிறார். இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

---- Advertisement ----