ஆண்ட்டியால் மார்க்கெட் இழந்த நடிகர் கரண்..! இப்போ அந்த ஆண்டியோட பையன் பெரிய ஹீரோ..!

தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் பிரபல ஹீரோவாக வலம் வந்து கொண்டிருந்தவர் நடிகர் கரண் இவர் தற்போது அடையாளம் இல்லாமல் காணாமல் போனதற்கு காரணம்,

ஆன்டி நடிகையுடனான கள்ளத்தொடர்புதான் என பிரபல நடிகர் பிரபல சர்ச்சைக்குரிய பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் கூறி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார்.

நடிகர் கரண்:

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்து கொண்டிருந்த கரண் குறிப்பாக வில்லன் ரோல்களில் நடித்து மிகப்பெரிய அளவில் பிரபலம் ஆனார்.

90ஸ் கிட்ஸ் களின் பேவரட்டான ஹீரோவாக இவர் பார்க்கப்பட்டு வந்தார். தமிழ் மற்றும் மலையாள மொழி திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக கிட்டத்தட்ட 20க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

--Advertisement--

கொக்கி என்ற திரைப்படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் கதாநாயகனாக நடிக்க தொடங்கி அதன் பின்னர் கருப்புசாமி குத்தகைதாரர், காத்தவராயர் உள்ளிட்ட சில திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்தார்.

சினிமாவின் உச்சத்தை தொட்ட கரண்;

இதனடி அண்ணாமலை, நம்மவர், தொட்டில் குழந்தை, உள்ளிட்ட படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார்.

காதல் மன்னன், கண்ணெதிரே தோன்றினாள், கண்ணாத்தாள் , சொல்லாமலே, மனம் விரும்புதே உன்னை, காதல் கவிதை ,உன்னை தேடி, மறவாதே கண்மணியே, கண்ணுபட போகுதய்யா,

பூவெல்லாம் கேட்டுப்பார் உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் இவர் நடித்து வந்தார்.

சினிமாவில் உச்சி நட்சத்திரமாக இருந்தபோது இவர் பிரபல நடிகை ஒருவரை தனக்கு மேனேஜராக நியமித்துக் கொண்டு அவருடன் நெருக்கமாக பழகி சினிமா வாழ்க்கையை சீரழித்துக் கொண்டார்.

கிட்டத்தட்ட 5 வயதிலிருந்து சினிமாவில் நடித்து வரக் கூடிய கரண் ஒரு காலத்தில் நடிகர்கள் விஜய் அஜித் பிரசாந்த் ஆகியோருக்கு இணையாக சினிமாவில் பிரபலமாக வலம் வந்து கொண்டிருந்தவர்.

ஆண்ட்டியின் கட்டுப்பாட்டில் கரண்:

இப்படி இருந்த இவர் கதை கேட்பது படங்களில் ஒப்பந்தம் ஆவது என அனைத்தையும் ஒரு ஆன்ட்டியின் பொறுப்பில் விட்டு விட்டார்.

இன்னும் சொல்லப்போனால் அந்த ஆண்டியுடன் லிவிங் ரிலேஷன்ஷிப்பில் இருந்தார் நடிகர் கரண் என்றெல்லாம் தகவல்களை அந்த ஆண்டி நடிகையையும் மறுக்கவில்லை.

நடிகர் கரனும் மறுக்கவில்லை. தற்போது அந்த ஆன்ட்டி நடிகையின் மகன் பெரிய ஹீரோவாக இருக்கிறான். எந்த நடிகை என்று நான் சொல்ல விரும்பவில்லை என,

சமீபத்திய பேட்டி ஒன்றிய குண்டை தூக்கி போட்டு இருக்கிறார் நடிகர் ரங்கநாதன். தற்ப்போது நடிகர் கரண் அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.