என் முதல் காதலன் கொடுத்த வலி.. நடிகை வித்யா பாலன் கூறிய அதிர்ச்சி தகவல்..!

சினிமாவில் நடித்து பெரிய அளவில் பெயர், புகழ்,செல்வாக்கு பெற்றிருந்தாலும் எல்லா கலைஞர்களுக்கும் சராசரி மனிதர்களுக்குரிய எண்ணங்களும், ஆசைகளும், கனவுகளும், கற்பனைகளும், ஏமாற்றங்களும், தோல்விகளும், துரோகங்களும், வலிகளும் இருக்கவே செய்கின்றன.

அந்த வகையில் பலரும் தங்களது வாழ்க்கையில் கடந்து வந்த பாதையை, தங்களுக்கு கிடைத்த கசப்பான அனுபவங்களை, ரசிகர்களுடன் அவ்வப்போது பகிர்ந்து கொள்கின்றனர்.

இன்னும் சிலர் அதை வெளிப்படுத்த முடியாமல், வெளிப்படுத்த விரும்பாமல் தங்கள் மனதுக்குள்ளேயே வைத்து அந்த வேதனைகளுடன் வாழ்ந்து வருகின்றனர்.

கசப்பான அனுபவங்களை…

நடிகர் ரஜினிகாந்த், கமல்ஹாசன் போன்றவர்கள் தங்களது கடந்த கால வாழ்க்கையில் சந்தித்த கசப்பான அனுபவங்களை, வாழ்க்கை பாடங்களை வெளிப்படையாக பொது நிகழ்ச்சிகளில், சினிமா விழாக்களில் ரசிகர்கள் மத்தியில் பேசி விடுகின்றனர்.

அதுபோல் வெளிப்படையாக ஒரு சிலரால் மட்டுமே பேச முடிகிறது. பெரும்பாலும் நடிகைகள் தங்களது கடந்த கால வாழ்க்கை பற்றி பொதுவெளிகளில் பேசுவதில்லை. அதற்கு காரணம் அவர்கள் மீதான இமேஜ் ரசிகர்கள் மத்தியில் குறைந்து விடும் என்பதால் அதை பலரும் வெளிப்படுத்துவதில்லை.

--Advertisement--

வித்யாபாலன்

பாலிவுட் சினிமா உலகில், இந்தி படங்களில் நடித்து மிகப் பிரபலமான நடிகைகளில் ஒருவராக இருப்பவர் நடிகை வித்யா பாலன். இவர் கடந்த 2005 ஆம் ஆண்டு வெளியான ப்ரிணீதா என்ற படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் அறிமுகமானார். தொடர்ந்து வித்யா பாலன் நிறைய படங்களில் நடித்திருக்கிறார்.

இதையும் படியுங்கள்: “உன்ன வச்சி செய்யணும் போல இருக்கு..” மோசமான கமெண்ட்.. கிங்ஸ்லி மனைவி சங்கீதா கொடுத்த பதிலை பாருங்க..!

சில்க் ஸ்மிதா வாழ்க்கை படம்

அதில் குறிப்பாக மறைந்த நடிகை சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட தி டர்ட்டி பிக்சர் படத்தில் வித்யாபாலன், சில்க் ஸ்மிதா கேரக்டரில் நடித்து, ரசிகர்கள் மத்தியில் மிகப் பிரபலமானார்.

இவர் தமிழில் நடிகர் அஜித்குமாருடன் நேர்கொண்ட பார்வை படத்தில், அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. நிறைய விளம்பர படங்களில் வித்யாபாலன் நடித்திருக்கிறார் என்பதும் கவனிக்கத்தக்கது.

மோசமான சம்பவம்

இந்நிலையில் நடிகை வித்யா பாலன் தன்னுடைய வாழ்க்கையில் நடந்த ஒரு மோசமான சம்பவம் குறித்து வெளிப்படையாக பேசி உள்ளார் .

அதுகுறித்து அவர் கூறியதாவது, நான் மிக மோசமாக ஏமாற்றப்பட்டேன். என்னுடைய முதல் காதலன், என்னை ஏமாற்றி விட்டான். நான் கல்லூரியில் படிக்கும் காலகட்டத்தில், மாணவியாக இருந்தபோது ஒருவரை மிகவும் ஆழமாக காதலித்தேன்.

இதையும் படியுங்கள்: வடிவேலு பாணியில் அதுவரை பனியன் மட்டும் போட்டுக்கிட்டு.. “பாண்டியன் ஸ்டோர்ஸ்” காவ்யா அறிவுமணி..!

முன்னாள் காதலியுடன் டேட்டிங்

ஆனால் அவர் காதலர் தினத்தன்று என்னிடம் வந்து, முன்னாள் காதலியுடன் டேட்டிங் செல்லப் போவதாக கூறினார். அந்த சமயத்தில் நான் அப்படியே நொறுங்கி போய்விட்டேன். அதன்பிறகு நாங்கள் பிரிந்து விட்டோம்.

ஆனால், இப்போது வாழ்க்கையில் நான் சிறப்பான நிலையில் இருக்கிறேன் என்று நடிகை வித்யா பாலன் அதில் கூறியிருக்கிறார்.

வலியை மறக்கவில்லை

என்னுடைய முதல் காதலன் கொடுத்த அந்த வலியை இன்னும் நான் மறக்கவில்லை என்று நடிகை வித்யா பாலன் அதில் தெளிவுபடுத்தி இருக்கிறார்.