கும்முன்னு இருக்குன்னு பின்னாடி புடிச்சாரு.. முன்னணி இயக்குனர் குறித்து நடிகை காயத்ரி பரபரப்பு புகார்..!

சினிமாத்துறையை பொறுத்த வரை நடிகைகளுக்கு தொடர்ந்து அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனைகள் நடந்து கொண்டுதான் இருக்கிறது.

வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்றால் அட்ஜஸ்ட்மென்ட் செய்தால்தான் வாய்ப்பு கிடைக்கும் என இயக்குனர்களும் தயாரிப்பாளர்களும் ஆடிசனுக்கு செல்லும்போதே நடிகைகளிடம் நேரடியாக கேட்கிறார்கள்.

சினிமாவில் அட்ஜெஸ்ட்மென்ட்:

முடியுமா முடியாதா? முடிந்தால் படத்தில் நடிக்கலாம் என்று ஒரு கெடுபிடியும் வைக்கிறார்கள். இதனை பல நடிகைகள் வெளிப்படையாக வந்து தெரிவித்து வருகிறார்கள்.

குறிப்பாக அட்ஜஸ்ட்மெண்டில் நடக்கும் கொடுமைகள் குறித்து பலர் வெளிப்படையாக பேசி வருகிறார்கள்.

--Advertisement--

அந்த வகையில் எஸ்ஏ சந்திரசேகர் இயக்கத்தில் 2015 ஆம் ஆண்டு வெளிவந்த டூரிங் டாக்கீஸ் படத்தின் மூலமாக கதாநாயகியாக அறிமுகமானவர்தான் நடிகை காயத்ரி ரேமோ.

கேரளாவை சேர்ந்த இவர் பார்ப்பதற்கு கொழுக் மொழுக் லுக்கில் அவ்வளவு அழகாக இருப்பார். இதனாலே இவருக்கு திரைப்பட வாய்ப்புகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் அவர் அறிமுகமானதிலிருந்தே பெரிதாக வாய்ப்புகள் கிடைக்காமல் தன் நடிப்புக்கு அங்கீகாரம் கிடைக்காமல் போய்விட்டார்.

நடிகை காயத்ரி ரேமா:

இந்நிலையில் தான் பெரிதாக வளர முடியாததற்கு காரணம் என்ன? என்று சமீபத்தில் பேட்டி ஒன்றில் பல விஷயங்கள் குறித்து வெளிப்படையாக பேசியிருக்கிறார்.

அதாவது, நான் அட்ஜஸ்ட்மென்ட்க்கு நோ சொன்னதால்தான் எனக்கு வாய்ப்புகள் கிடைக்காமல் போனது, நான் சினிமாவில் நிலைத்திருக்க முடியவில்லை என வெளிப்படையாக தெரிவித்திருக்கிறார்.

பிரபல நடிகை பிந்து மாதவி எல்லாம் வைத்து பாடம் எடுத்தவர் அந்த இயக்குனர். அவரது இயக்கத்தில் என்னை நடிக்க வைப்பதாக சொன்னார். அதற்காக நானும் ஆடிஷனுக்கு சென்றிருந்தேன்.

அப்போது அந்த படத்தை குறித்து பல விஷயங்களை விளக்கமாக தெரிவித்தார் அதாவது இந்த படத்தில் நெருக்கமான காட்சிகளால் எல்லாம் இருக்கும். படுக்கையற காட்சிகள் இருக்கும் உங்களால் நடிக்க முடியுமா? என கேட்டார்.

அதற்கு நான் அப்படியெல்லாம் நடிக்க முடியாது என்று சொல்லிவிட்டேன். உடனே அவர் வெப் தொடர்களில் எல்லாம் அவ்ளோ கிளோஸ் ஆக கிளாமரா கவர்ச்சியாக நடிக்கிறீங்க என்று குறுக்கு கேள்வியை கேட்டார்.

உடனே நான் சினிமாவில் கொலை செய்கிறோம் என்பதற்காக யாரையாவது ரியல் லைஃப்ல கொலை பண்ணுவாங்களா என்ன சொன்னதும்….

பின்னாடி பிடித்து அழுத்திய இயக்குனர்:

சூப்பர் இப்படித்தான் ரொம்ப போல்டா பேசணும் ரொம்ப நல்ல நடிகையாக இருக்கீங்க என்று என்னை அப்ரிசியேட் பண்ணி கொண்டே வந்து என்னுடைய பின்பகுதியை பிடித்து அழுத்தினார்.

இதனால் எனக்கு ரொம்ப கடுப்பாகிவிட்டது. உடனே நான் கோபத்தில்… ஷூட்டிங் ஸ்பாட்ல உங்களை ஓங்கி அறைஞ்சா உங்களுக்கு அசிங்கமா போயிடும் மரியாதையாக கை எடுங்க என்று சொன்னதும்,

நீங்க நல்லா கும்முனு இருக்கீங்க பார்த்தவுடன் மூட் ஆகிவிட்டது என்று பச்சையாக என்னிடம் கூறினார். அதைக் கேட்டதும் எனக்கு அருவருப்பாக இருந்தது.

இதனால் தான் வாய்ப்பு கிடைக்கல:

ஒரு விஷயத்துக்கு நோ சொல்லிட்டோம்னா அதுக்கப்புறம் நம்மளை டிஸ்டர்ப் பண்ணவே மாட்டாங்க. ஆனால் அதே நேரத்துல நமக்கு வாய்ப்பு சுத்தமா கிடைக்கவே கிடைக்காது.

அதை நம்மால் எதிர்பாக்கவும் முடியாது. அதே நேரத்தில் அவங்க கேட்கும் படி அட்ஜஸ்ட்மென்ட்க்கு ஓகே சொல்லி அவர்கள் இஷ்டப்படி எல்லாம் நம்ம வணங்கி போனால் வாய்ப்பு கிடைத்து ஹீரோயின் ஆகிடலாம்.

அப்படி சில பேர் அட்ஜஸ்ட்மெண்ட் கேட்ட உடனேயே ரூமுக்கு சென்று பின்னர் டாப் ஹீரோயின் ஆக வேல லெவலில் வளர்ந்தவர்களை நான் பார்த்திருக்கிறேன்.

ஆனால், அது அவங்களோட இஷ்டம் அது தப்பு சொல்ல முடியாது. எனக்கு அந்த விஷயத்துல தகுதி இல்ல அப்படின்னு தான் நான் சொல்வேன் என காயத்ரி ரேமா கூறினார்.