திருமணதிற்கு முன்பே தெரிந்த உண்மை..நிதி அகர்வால் எடுத்த அதிரடி முடிவு..!

தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழிகளில் நடித்து தனக்கு என்று ஒரு இடத்தை ரசிகர்கள் மத்தியில் பெற்றிருக்கும் நடிகை நிதி அகர்வால் பற்றி இந்த பதிவில் சில விஷயங்களை நாம் படித்து தெரிந்து கொள்ளலாம்.


ஹைதராபாத்தில் பிறந்து வளர்ந்த இவர் பெங்களூரில் தனது பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை முடித்தவர். இதனை அடுத்து 2017-ஆம் ஆண்டு முன்னா மைக்கேல் என்ற ஹிந்தி மொழி திரைப்படத்தில் அறிமுகமானார்.

நடிகை நிதி அகர்வால்..

தமிழைப் பொறுத்த வரை இவர் 2021-இல் வெளி வந்த ஈஸ்வரன் திரைப்படத்தில் அறிமுகமானதை அடுத்து 2022-ல் கழகத் தலைவன் படத்தில் நடித்திருக்கிறார். இதை அடுத்து தெலுங்கு படங்களில் நடித்த இவருக்கு நல்ல பட வாய்ப்புகள் தெலுங்கில் கிடைத்தது.

மேலும் தெலுங்கு படத்தில் நடித்த வரும் போது இவர் ஒரு நடிகரை காதலித்து வந்ததாக சொல்லப்பட்ட நிலையில், தற்போது அந்த காதல் பிரேக்கப் ஆகிவிட்டதாம். ரோமியோ ஜூலியட், போகன் போன்ற வெற்றி படங்களை கொடுத்த லட்சுமணன் இயக்கத்தில் உருவாகும் பூமி படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடித்த இந்தப் படம் ஓடிபி வெளி வந்து ரசிகர்களின் மத்தியில் பேசப்பட்டது.


மேலும் சிம்புவோடு இணைந்து நடித்த ஈஸ்வரன் படம் மிகப்பெரிய வசூலை செய்யவில்லை என்றாலும் சிம்புவோடு நிதியை இணைத்து கிசுகிசுக்களை வாரி வழங்கியது.

திருமணத்திற்கு முன்பே தெரிந்த உண்மை..

பார்க்க பளபளவென்று இருக்கும் நிதி அகர்வால் நல்ல திறமையும் அழகும் கொண்ட நடிகை. இவர் நடிகர் ஒருவரை காதலித்து வந்த நிலையில் சினிமாவில் ஆர்வம் காட்டாமல் அப்படியும் இப்படியுமாக நடித்துக் கொண்டிருந்தார்.

இந்நிலையில் விரைவில் திருமணம் செய்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அந்த நடிகர் பற்றி சில விஷயங்கள் வெளியே தெரிய வந்ததால் அவர்களது காதல் பிரேக்கப் ஆகிவிட்டது.


இதனால் மன அழுத்தத்தில் இருந்த நிதி அகர்வால் காதலை மூட்டை கட்டி விட்டு தற்போது சினிமாவில் தீவிரமாக கவனத்தை செலுத்தி வருகிறார்.

நிதியின் அதிரடி முடிவு..

இந்நிலையில் சினிமாவில் கூடுதல் கவனத்தை செலுத்தி வரும் நிதி அகர்வால் பவன் கல்யாண் நடிப்பில் உருவாகும் ஹரிஹர வீர மல்லு என்ற படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

மேலும் இயக்குனர் கிரிஷ் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படப்பிடிப்பு தற்போது பரபரப்பாக நடந்து வருகிறது.

அத்துடன் பிரபாஸுக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தம் ஆகி இருக்கக்கூடிய நிதி அகர்வால் தமிழில் மேலும் இரண்டு படங்களில் நடக்க பேச்சு வார்த்தைகள் நடைபெற்று வருவதாக தெரிய வந்துள்ளது.


இந்த விஷயத்தை கேள்விப்பட்ட ரசிகர்கள் அனைவரும் கடுமையான அதிர்ச்சியில் இருப்பதோடு மட்டுமல்லாமல் திருமணத்திற்கு முன்பே உண்மை தெரிந்த நிதியின் அதிரடி முடிவு பற்றி அவர்களுக்குள் பட்டிமன்றம் போட்டு பேசி வருகிறார்கள்.

மேலும் இந்த விஷயத்தை இணையத்தில் வைரல் ஆக்கி இருக்கக்கூடிய ரசிகர்கள் நிதி மீண்டும் திரைப்படங்களில் அதிக கவனத்தை செலுத்துவது என எடுத்து இருக்கும் முடிவை வரவேற்று இருப்பதோடு மட்டுமல்லாமல் சரியான முடிவாகவும் சொல்லி அவருக்கு ஆதரவு கொடுத்திருக்கிறார்கள்.

   

--Advertisement--