Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

Tamil Cinema News

வெளிய போறதுக்கு முன்னாடி இதை கண்டிப்பா போடுவேன்.. சீக்ரெட் பகிர்ந்த சுஜிதா..!

திரை உலகில் நடிக்கும் நடிகைகளை போலவே சின்னத்துரை சீரியல் நடிக்கக்கூடிய நடிகைகளும் பெரிய அளவு பிரபலமாகிறார்கள். அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பாண்டியன் ஸ்டோர் சீரியல் நடித்து தமிழகம் முழுவதும் இருக்கும் இல்லத்தரசிகளின் மனதில் இடம் பிடித்த சுஜிதா பற்றி அதிக அளவு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.


இவரது சமூக வலைத்தளம் பக்கத்தை ஃபாலோ செய்கின்ற ரசிகர்களின் எண்ணிக்கை அதிகளவு உள்ளதோடு மட்டுமல்லாமல் இவர் எப்போது இணையத்தில் புதிய புகைப்படங்களை வெளியிடுவார் என்று காத்திருக்க ஒரு கூட்டமே உள்ளது.

நடிகை சுஜிதா தனுஷ்..

நடிகை சுஜிதா தனுஷ் கதை கேளு கதை கேளு என்னும் பெயரில் சொந்தமாக யூடியூப் சேனல் ஒன்றினை வைத்திருக்கிறார். தற்போது 40 வயது ஆனாலும் எவர்கிரீன் அழகியாக காட்சி அளிப்பதற்கு என்ன காரணம் என்று தெரியுமா.

அழகின் ரகசியத்தை இவர் தன் youtube வீடியோவில் பகிர்ந்து இருக்கிறார். இந்த வீடியோவானது தற்போது பெண்கள் மத்தியில் பிரபலமாகி வருகிறது.


வெளிய போறதுக்கு முன்னாடி..

மேலும் இவர் குளித்து முடிந்த பிறகு தூங்குவதற்கு முன்பு 20 நிமிடமாவது சரும பராமரிப்புக்காக நேரத்தை ஒதுக்க வேண்டும் என சொல்லி இருப்பது பலரையும் யோசிக்க வைத்துள்ளது.

--Advertisement--

அத்தோடு முக அழகை பராமரிக்க குளிர்ந்த நீரில் தான் ஃபேஸ் வாஷ் பண்ணுவேன். அப்படி முகம் கழுவ ஃபேஸ் வாஷ் மட்டும் தான் பயன்படுத்துவேன். அத்துடன் உடம்புக்கு பயன்படுத்துவதை முகத்திற்கு பயன்படுத்தக் கூடாது என சொல்லி இருக்கிறார்.

அதுமட்டுமல்லாமல் சுடு நீரில் குளித்தாலும் முகத்துக்கு பச்சை தண்ணீரைக் கொண்டு தான் கழுவுவாராம். அதன் பிறகு முகத்தை நன்கு துடைத்து விட்டு க்ளென்சர் போட்டு நல்ல மசாஜ் செய்து காட்டன் துணியை நனைத்து க்ளென்சர் மேல் பூசும் போது நம் முகத்தில் இருக்கும் துளைகள் எளிதாக திறந்து விடும்.


இத கண்டிப்பா போடுவேன்..

அத்தோடு ஆன்ட்டி ஆக்சிடென்ட், வைட்டமின் சி சீரம் பயன்படுத்துவதின் மூலம் முகம் எப்போதும் பொலிவாக இருக்க உதவி செய்யும். மேலும் வைட்டமின் சி சீரம் நான்கு அல்லது ஐந்து சொட்டுக்கள் முகத்தில் அப்ளை பண்ண தவற வேண்டாம்.

இதனை அடுத்து கண்களுக்கு கீழ் அண்டர் ஐ-யில் நன்கு தடவி விட வேண்டும். அது போல கண்களை சுத்தி இருக்கின்ற தோல் மிகவும் சென்சிடிவ் ஆனதால் வயதான அறிகுறி முதலில் கண்களுக்கு கீழே தான் தெரியும். எனவே அந்த பகுதிக்கு எக்ஸ்ட்ரா கவனிப்பு தேவை.

மேலும் முகத்தில் சீரம் செட் ஆன பின் மாய்ஸ்ரைசர் போடுவேன். இது சருமத்தை மிருதுவாகவும் ஈரப்பதத்தோடும் வைத்துக்கொள்ளும். எனவே உங்கள் முகம், கை, கால் என எல்லா பகுதியிலும் காலையிலும் இரவிலும் கண்டிப்பாக மாய்ஸ்சரசரை போட வேண்டும்.


இதனை அடுத்து இதை தோல் நன்கு உறிஞ்சிய பிறகு வெளியே கிளம்புவதற்கு முன்னாடி சன் ஸ்கிரீன் லோஷனை யூஸ் பண்ணுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறேன்.

எப்போது வெளியே சென்றாலும் இதை பயன்படுத்துவதால் ஓவர் நைட்டில் சருமம் பளபளப்பாகும் என்று நினைக்க வேண்டாம்.
இந்த முறைகளை ஃபாலோ செய்வதின் மூலம் உங்கள் முகம் மட்டுமல்லாமல் உடலில் இருக்கும் சருமங்கள் ஜொலி ஜொலிக்க இவை உதவி செய்யும்.

Continue Reading
 

More in Tamil Cinema News

Trending Now

To Top