ஆடையின்றி நின்ற ஆண்ட்ரியா.. அதுவும் அந்த நேரத்தில்.. ரகசியம் உடைத்த நடிகை பூர்ணா..!

நடிகை பூர்ணா தமிழில் முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானார் நடிகையாக அறிமுகமானார்.

அதனை தொடர்ந்து பல்வேறு திரைப்படங்களில் கதாநாயகர்களுக்கு ஜோடியாக நடித்திருக்கிறார் நடிகை பூர்ணா. இடையில் உடல் எடை கூடி குண்டடித்து போன பூர்ணாவிற்கு பட வாய்ப்புகள் குறைந்தது.

இதனை தொடர்ந்து துபாயை சேர்ந்த தொழிலதிபர் ஒருவரை காதலித்து அவரை திருமணம் செய்து கொண்டிருக்கிறார் பூர்ணா. இப்போது ஒரு குழந்தைக்கு தாயுமாகி இருக்கும் இவர் திரைப்படங்களிலும் பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.

சமீபத்தில் நடிகர் மகேஷ்பாபு நடிப்பில் வெளியான குண்டூர் காரம் என்ற திரைப்படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட்டு சென்றிருந்தார். உடல் எடை கூடி குண்டாக இருந்தபோதிலும் குத்தாட்டம் போட்டு ரசிகர்களை அதிர வைத்தார் நடிகை பூர்ணா.

மேலும், இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் நடிகை ஆண்ட்ரியா நடிப்பில் உருவான பிசாசு படத்தில் இரண்டாம் பாகத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார் நடிகை பூர்ணா.

இந்த திரைப்படத்தில் நடிகை பூர்ணாவை விடவும் ஆண்ட்ரியாவின் கதாபாத்திரத்துக்கு தான் வெயிட் அதிகம் என்று கூறப்பட்டது உச்சகட்டமாக நடிகை ஆண்ட்ரியா இந்த திரைப்படத்தில் சில நிமிட காட்சிகள் உடம்பில் ஆடை இன்றி நடித்திருக்கிறார் என்று தகவல்கள் வெளியாகின.

இயக்குனர் மிஷ்கினும் இதனை ஒப்புக்கொண்டார். ஆனால், சில நாட்கள் கழித்து இந்த படத்தை குழந்தைகளுடன் வந்து பார்க்க வேண்டும் எனவே அந்த காட்சிகளை நான் நீக்கிவிட்டேன் என்று கூறியிருந்தார்.

இதனை கேட்ட ரசிகர்கள் நீங்க மட்டும் பாத்துட்டீங்களே.. நாங்க இன்னும் பார்க்கலையே என்று மிஷ்கினை கலாய்த்து மீம்களை பறக்க விட்டு வந்தனர் ரசிகர்கள்.

இது ஒரு பக்கம் இருக்க படத்தில் நடித்த சக நடிகை பூர்ணாவிடம் நடிகை ஆண்ட்ரியா ஆடை இன்றி நினைத்தது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

உண்மைதான் இயக்குனரின் முன்பு ஆடை இன்றி நிற்பதற்கு ஒரு தைரியம் வேண்டும். அது ஆண்ட்ரியாவிடம் இருந்தது. படப்பிடிப்பு முடிந்து பேக்கப் சொன்ன நேரத்தில் இயக்குனர் கேட்டுக்கொண்டதால் அவர் முன்பு ஆடையின்றி நின்றார் ஆண்ட்ரியா.

இதற்கு மேல் சொல்ல வேண்டும் என்றால் அதை ஆண்ட்ரியாவோ அல்லது இயக்குனர் மிஷ்கினோ கூறினால் தான் சரியாக இருக்கும். நான் வேடிக்கை பார்த்தவர் மட்டும்தான் நான் இதை பற்றி கருத்து கூறுவது சரியாக இருக்காது என்று தன்னுடைய பதிலையும் முடித்துக் கொண்டார் பூர்ணா.