இந்த வயசுல கல்யாணம் தேவையா..? பணம் இல்ல.. விரக்தியின் உச்சத்தில் சங்கீதா எடுத்த முடிவு..!

சின்னத்திரை, பெரிய திரை என்ற வித்தியாசம் இல்லாமல் தற்போது நடிக்கும் நடிகர்கள் தன் துறையை சார்ந்தவர்களே திருமணம் செய்து கொண்டு வருகிறார்கள். அந்த வகையில் சின்னத்திரை சீரியல் நடிகையாக இருந்து காமெடி நடிகர் ரெடின் கிங்ஸிலியை காதலித்து திருமணம் செய்து கொண்டார் சீரியல் நடிகை சங்கீதா.


இந்த விஷயம் இணையத்தில் பரபரப்பாக பேசப்பட்டதோடு மட்டுமல்லாமல், இவர்களது திருமணம் மிகவும் சிம்பிளான முறையில் மைசூரில் நடந்ததை அறிந்து பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார்கள்.

இந்த வயசுல கல்யாணம் தேவையா?

நடிகை சங்கீதா சமூக வலைதளங்களில் அதிக அளவு ஆக்டிவாக இருப்பவர். இவர் திருமணம் செய்து கொண்ட காமெடி நடிகர் ரெடின் கிங்ஸ்லிக்கி 46 வயது ஆகிறது. இந்நிலையில் இந்த வயதில் திருமணம் தேவையா? என்று பலரும் பல்வேறு வகைகளில் விமர்சனம் செய்தார்கள்.

இவற்றையெல்லாம் கண்டு கொள்ளாமல் ரொமான்ஸ் புகைப்படங்களை இணையங்களில் வெளியிட்டு ரசிகர்களின் மனதில் சலனங்களை ஏற்படுத்திய இவர் அண்மை பேட்டி ஒன்றில் வதந்தி செய்திகளை பரப்பியதை அடுத்து ஏற்பட்ட மனநிலை எப்படி இருக்கும் என்பதை சிறப்பாக பதிவு செய்திருக்கிறார்.

பணம் இல்ல..

இதில் குறிப்பாக இவருக்கு ஏற்கனவே குழந்தை இருக்கு என்று செய்தி போட்டார்கள். ஆனால் அந்த குழந்தை என்னுடைய குழந்தை அல்ல அது என் சகோதரியின் மகள் தான்.

---- Advertisement ----


அதை இன்று வரை நான் சொல்லியும் எவர் காதிலும் விழவில்லை. இதனை அடுத்து அப்படியே நினைத்துக் கொள்ளட்டும் என்று விட்டு விட்டேன்.

அந்த வகையில் ஒரு குறிப்பிட்ட வயதுக்கு மேல் திருமணம் செய்து கொள்ள சினிமா துறையில் இருப்பவர்களுக்கு முடிவதில்லை.

ரெடின் கொஞ்சம் விட்டுக் கொடுத்துப் போகும் மனம் உடையவர். மேலும் எதையும் அட்ஜஸ்ட் செய்து போய்விடுவார்.

நான் எதை செய்தாலும் எல்லாவற்றையும் ஏற்றுக் கொள்வதில்லை. அதற்காக அதை நான் பொறுத்துக் கொள்கிறார் என்று பல்வேறு கருத்துக்கள் வருகிறது.

விரக்தியின் உச்சத்தில் சங்கீதா..

அது மட்டுமல்லாமல் வயது கடந்த நிலையில் திருமணம் செய்து கொண்ட எங்களுக்கு திருமணம் தேவையா? என்று பல்வேறு கமாண்டுகள் வருவதாகவும் அப்படிப்பட்ட கமெண்ட்களை போடக் கூடிய மனிதர்களை புரிந்து கொள்ள முடியவில்லை.


எனவே தான் வெளிநாட்டுக்கு சென்று செட்டில் ஆகி விடலாமா? என்று கூட தோன்றும்.

ஆனாலும் நாங்கள் இன்னும் இளமையோடு தான் இருக்கிறோம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். பணத்துக்காக கல்யாணம் பண்ணினேன் என்று சொல்லும் போது நான் ஒன்னும் இல்லாதவள் இல்லை.

எல்லாவற்றிற்கும் நான் விளக்கம் கொடுக்க முடியாது. அவரின் அரவணைப்பு குணம் தான் என்னை கவர்ந்ததே தவிர அவர் சம்பாதிக்கக்கூடிய பணம் இல்லை என்று நான் நாசுக்காக சீரியல் நடிகை சங்கீதா வெளியிட்டு இருக்கும் கருத்துக்கள் ஒவ்வொன்றும் ரசிகர்களின் மத்தியில் பேசப்பட்டு வருகிறது.


இதனை அடுத்து உண்மையாக காதலித்து திருமணம் செய்து கொண்ட இவர்களை பணத்திற்காக திருமணம் செய்து கொண்டார்கள் என்று இனி யாரும் நோகடிக்க மாட்டார்கள் என ரசிகர்கள் பலரும் கூறி வருகிறார்கள்.

தற்போது இந்த விஷயம் இணையத்தில் வைரலாக மாறி வருவதோடு மட்டுமல்லாமல் ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாகவும் உள்ளது.

---- Advertisement ----