அம்மாவை விட்டுவிட்டு சித்தியை திருமணம் செய்தார்.. நவரச நாயகன் கார்த்தி காணமல் போக காரணம்..!

பழம்பெரும் நடிகரான முத்துராமனின் மகன் தான் நடிகர் கார்த்திக். இவரை பாரதிராஜா தன் அலைகள் ஓய்வதில்லை படத்தில் அறிமுகம் செய்து வைத்தார். முதல் படமே சூப்பர் ஹிட் அடித்தது.

இதையும் படிங்க: நடிகை கனகாவின் இந்த நிலைமைக்கு காரணம் இது தான். ரகசியம் உடைத்த சரத்குமார்..!

இதனை அடுத்து இவரது தந்தை மறைவிற்குப் பிறகு சரியான கதையம்சம்முள்ள கதைகளை தேர்வு செய்யாமல் நடித்ததின் காரணத்தால் சொல்லிக் கொள்ளும் படி இவர் திரை உலகில் ஜொலிக்கவில்லை.

நவரச நாயகன் கார்த்திக்..

1981 இல் அலைகள் ஓய்வதில்லை திரைப்படத்தில் அறிமுகம் ஆனதை அடுத்து இவர் ஆர்வி உதயகுமார் உடன் இணைந்து மூன்று முறை பணி புரிந்திருக்கிறார். அது மட்டுமல்லாமல் இவர் நடிப்பில் வெளி வந்த அக்னி நட்சத்திரம், வருஷம் 16, இதய தாமரை, கிழக்கு வாசல் போன்ற படங்கள் வணிக ரீதியில் வெற்றியைத் தந்து இவரை முன்னணி நடிகராக மாற்றியது.

--Advertisement--

அது போல இவர் சுந்தர் சியுடன் இணைந்து உள்ளத்தை அள்ளித்தா படத்தில் நடித்தார். இந்த படமும் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்ததை எடுத்து இந்த இரண்டு ஜோடிகளும் இணைந்து மேட்டுக்குடி என்ற மற்றொரு படத்தையும் கொடுத்தார்கள்.

மேலும் இவர் நடிப்பில் வெளி வந்த சின்ன ராஜா, நிலவே முகம் காட்டு, ஆனந்த பூங்காற்றே, சுயம்வரம், ரோஜாவனம் போன்ற படங்கள் ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளானது. அது மட்டுமல்லாமல் 90-களில்  சுந்தர் சி யின் படங்களில் நடிகர் கார்த்திக் நடித்த பல வெற்றிகளை பெற்றிருக்கிறார்.

அம்மாவை விட்டுவிட்டு சித்தியோடு திருமணம்..

இதனை அடுத்து அண்மை பேட்டி ஒன்றில் இவரது மகன் கௌதம் கார்த்திக் அவரும் திரைப்பட நடிகர் அண்மையில் தான் மலையாள நடிகையான மஞ்சிமாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.இந்த பேட்டியில் அவர் தனது தந்தை பற்றி பல விஷயங்களை மனம் நொந்து வெளியிட்டு இருக்கிறார்.

தனது அப்பா தனது அம்மா ராகினியை திருமணம் செய்து கொண்டு சுமார் 4 ஆண்டுகள் வாழ்ந்ததாகவும், தனக்கு ஒரு தம்பி இருப்பதாகவும் கூறியவர் நான்காண்டுகள் கழித்து தனது அம்மாவை விட்டு தனது அம்மாவின் தங்கை ரதியை திருமணம் செய்து கொண்டார். அவருக்கு தீரன் என்ற ஒரு மகனும் இருப்பதாக கூறினார்.

சித்தியை திருமணம் செய்து கொண்ட பிறகு ஊட்டியில் இவரது அம்மாவும் இவரும் தம்பியும் வாழ்ந்து வந்ததாக தெரிவித்து இருக்கக்கூடிய இவர் அந்த சமயத்தில் தனது அம்மா தான் இவர்கள் இருவரையும் சிறப்பான முறையில் வளர்த்து ஆளாக்கினார்கள் என்பதை பதிவு செய்திருக்கிறார்.

காணாமல் போக காரணம்..

தனது தந்தை சென்னையில் இருந்ததால் எங்களை காண ஊட்டிக்கு வருடத்தில் ஒருமுறை அல்லது இரண்டு வருடத்தில் இரண்டு முறை வந்து செல்வா அது போல போனிலும் பேசுவார் என்பதை கூறியிருக்கிறார்.

எனது அம்மாவை பிரிந்து ரதியை திருமணம் செய்து கொண்டதை அடுத்து தனது அம்மா கார்த்திகை விட்டு விலகி வாழ்ந்ததாக அவர் கூறியிருக்கிறார். இந்தக் காரணத்தால் கூட அவருக்கு திரையுலகில் பின்னடைவுகள் ஏற்பட்டு இருக்கலாம்.

இதையும் படிங்க: தன்னுடைய உயிர் நண்பன் சஞ்சீவை நெகிழ வைத்த சூரியா..! பலரும் அறிந்திடாத ரகசியம்..!

மேலும் கௌதம் கார்த்திக் கூறிய இந்த விஷயம் தற்போது இணையத்தில் வைரலாக மாறி வருவதோடு நவரச நாயகன் கார்த்திக் பற்றி பலரும் பல்வேறு வகையான விமர்சனங்களை முன் வைத்து இருக்கிறார்கள்.