ஆடையின்றி அவருடன் இருந்த போது.. என் உணர்வு இப்படித்தான் இருந்தது.. தமன்னா ஓப்பன் டாக்..!

தமிழ் சினிமாவில் அறிமுகமாகி ஒரு சில காலங்களிலேயே அதிகமான வரவேற்பை பெற்றவர் நடிகை தமன்னா. கிட்டத்தட்ட அவரது இளமைக்காலத்தில் துவங்கி இப்பொழுது வரை நடிகை தமன்னாவிற்கு இருக்கும் வரவேற்பு என்பது துளி கூட தமிழ் சினிமாவில் குறையவே இல்லை என்று கூறலாம்.

கேடி திரைப்படத்தில் முதன்முதலாக வில்லி கதாபாத்திரத்தில் அறிமுகமானார் நடிகை தமன்னா. அந்த திரைப்படம் பெரிதாக வரவேற்பு பெறவில்லை. மேலும் அந்த திரைப்படத்திலும் அவருக்கு நல்ல விதமான கதாபாத்திரம் இருக்கவில்லை.

அதனை தொடர்ந்து வியாபாரி திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தார் தமன்னா. வியாபாரி படத்திற்கு ஓரளவு வரவேற்பும் கிடைத்தது. அதன் பிறகுதான் கல்லூரி திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தார் தமன்னா.

வரிசையாக வந்த வரவேற்பு:

கல்லூரி திரைப்படம் அவருக்கு அதிகமான வரவேற்பை பெற்றுக் கொடுத்தது. தொடர்ந்து வரவேற்புகளை பெற துவங்கிய தமன்னா படிக்காதவன் திரைப்படத்தில் முதன் முதலாக அதிக கவர்ச்சியுடன் களமிறங்கினார்.

---- Advertisement ----

அதனை தொடர்ந்து அயன், ஆனந்த தாண்டவம், கண்டேன் காதலை, பையா என்று வரிசையாக அவர் நடித்த திரைப்படங்கள் எல்லாமே வெற்றியை கொடுத்தன. மேலும் அவையாவும் தமன்னாவிற்கும் அதிக வரவேற்பை பெற்றுக் கொடுத்தது.

தொடர்ந்து இப்போதுவரை தமிழ் தெலுங்கு ஹிந்தி என்று அனைத்து மொழிகளிலும் அதிக படங்களில் நடித்திருக்கிறார் தமன்னா. தற்சமயம் தமிழை விடவும் அவருக்கு ஹிந்தி திரைப்பட உலகில் வாய்ப்புகள் அதிகமாக இருந்து வருவதாக கூறப்படுகிறது.

பாலிவுட்டில் காதல்:

இதற்கு நடுவே தற்போது பாலிவுட் நடிகர் விஜய் வர்மாவை தமன்னா காதலித்து வருகிறார். அது குறித்த புகைப்படங்களும் சமீபத்தில் வெளியாகி அதிக ட்ரெண்டிங் ஆகி வந்தது. தற்சமயம் இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் உருவான அரண்மனை 4 படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் அவர் நடித்திருந்தார்.

அந்தப் படமும் 100 கோடி வசூல் செய்து பயங்கர ஹிட் கொடுத்தது. இந்த நிலையில் அவரிடம் பேட்டி ஒன்றில் பேசும் பொழுது நடிகர்களுடன் படுக்கையறை காட்சிகள் நடிக்கும் பொழுது அந்த நடிகர்களின் மனநிலை எப்படி இருக்கும் என்று அவரிடம் கேட்கப்பட்டது.

படுக்கையறை காட்சியில் சங்கடம்:

அதற்கு வெளிப்படையாக பதில் அளித்த தமன்னா கூறும் பொழுது ”நடிகர்களை பொருத்தவரை அவர்கள் அந்தரங்க காட்சிகளை அவ்வளவாக விரும்புவது கிடையாது. சொல்ல போனால் அந்த காட்சிகளை படமாக்கும் பொழுது எங்களை விட நடிகர்கள்தான் மிகவும் பதட்டமாகவும் சங்கடமாகவும் உணர்வார்கள்.

அந்த பெண் நடிகைகள் நம்மைப் பற்றி என்ன நினைப்பார்கள் என்ற கவலை அவர்களுக்கு இருந்து கொண்டே இருக்கும். இப்படி பல கேள்விகள் மனதில் ஓடுவதோடு சேர்ந்துதான் அவர்கள் அந்த காட்சியில் நடிக்கிறார்கள். ஆனால் வெளியில் படம் பார்க்கும் பெரும்பாலானோருக்கு இந்த கஷ்டம் புரிவதில்லை” என்று கூறியிருக்கிறார் தமன்னா.

---- Advertisement ----