இது என்ன கூத்து..? தன்னை நிராகரித்த அதே ஆளுடன் இதை பண்ணேன்… கூச்சமின்றி கூறிய அதிதி பாலன்..!

நடிகை அதிதி பாலன் 2015 என்னை அறிந்தால் என்ற தமிழ் திரைப்படத்தில் முதல் முதலாக ஒரு சின்ன ரோலை செய்தார். இந்த படத்தை கௌதம் வாசுதேவ் மேனன் இயக்க அஜித்குமார் நடித்திருந்தார்.


முதல் படம் தனக்கு நல்ல அறிமுகத்தை தந்ததை அடுத்து அதிதி மேனன் 2017-இல் அருவி என்ற திரைப்படத்தில் ஹீரோயினியாக நடித்தார். இந்த படத்தில் இவரது அற்புத நடிப்பை பார்த்து இவருக்கு பட வாய்ப்புகள் வந்து சேர்ந்தது.

நடிகை அதிதி பாலன்..

தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம், தெலுங்கு படங்களிலும் நடித்திருக்க கூடிய அதிதி பாலன் அருவி படத்தில் தனது அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தியதை அடுத்து குட்டி ஸ்டோரி என்ற பாடத்தில் 2021-ஆம் ஆண்டு நடித்திருக்கிறார். இதனை அடுத்து 2021 மலையாள படமான கோல்ட் கேஸில் நடித்தார்.

மேலும் அண்மையில் வெளி வந்த கேப்டன் மில்லர் திரைப்படத்தில் முக்கியமான கேரக்டர் ரோலை செய்த இவர் ரசிகர்களின் மத்தியில் ஃபேமஸ் ஆனார்.


இது என்ன கூத்து..

சமூக வலைத்தளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய அதிதி மேனன் புதிய பட வாய்ப்புகளை தர வேண்டும் என்பதற்காக பல்வேறு வகையான புகைப்படங்கள் வீடியோக்களை வெளியிட்டு அனைவரையும் அதிர வைப்பார்.

--Advertisement--

அது மட்டுமல்லாமல் அவ்வப்போது பேட்டிகளை கொடுக்கக்கூடிய இவர் சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்டிருக்கிறார். அந்த பேட்டியில் அவரிடம் உங்கள் முதல் கிரஷ் யார் என்ற கேள்வி எழுப்பப்பட்டது.


இந்த கேள்விக்கு சற்றும் மனம் கோணாமல் பதிலளித்த அதிதி பாலன் தான் பள்ளியில் படிக்கும் போது ஒருவர் மீது தனக்கு க்ரஷ் ஏற்பட்டதாக சொன்ன விஷயம் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

கூச்சமின்றி கூறிய அதிதி..

அத்தோடு அந்த நபரிடம் தானாகவே நேரடியாக சென்று தன்னுடைய காதலை வெளிப்படுத்தியதாக சொன்னதோடு மட்டுமல்லாமல் அவர் அந்த காதலை ஏற்றுக் கொள்ள மறுத்துவிட்டார் என்ற விஷயத்தை உடைத்துவிட்டார்.

இதனை அடுத்து தான் இவர் தன்னுடைய வேலையில் முழு கவனத்தை செலுத்தி பார்க்க ஆரம்பித்தாராம். மேலும் தன்னை நிராகரித்த அவர் சமீபத்தில் மீண்டும் தன்னை தொடர்பு கொண்டால் அப்போது தன்னை அவர் காதலிப்பதாக கூறியதாக அதிதி பாலன் தொகுப்பாளினியிடம் கூறியிருக்கிறார்.

இதனை அடுத்து தொகுப்பாளனி உங்களை நிராகரித்த ஒருவர் மீண்டும் வந்து உங்களை காதலிக்கிறேன் என்று கூறி இருக்கிறார். இதனை அடுத்து நீங்கள் என்ன செய்தீர்கள். அவர்கள் காதலை ஏற்றுக் கொண்டீர்களா? என்று திரும்ப கேட்க அதற்கு உரிய பதிலை பதிவு செய்தார்.

அந்த பதில் தான் தற்போது இணையத்தில் வைரலாக பரவ ஆரம்பித்து இருப்பதோடு இது என்ன கூத்து தன்னை நிராகரித்த அதே ஆளுடனா? என்று கூச்சம் இல்லாமல் அதிதி பாலன் கூறிய விஷயம் காட்டுத் தீயாய் பரவி வருகிறது.


இதனை அடுத்து ரசிகர்கள் அனைவரும் அவர் அப்படி என்ன தான் சொன்னார் என்று அறிந்து கொள்ள ஆவலாகி இருப்பதை அடுத்து அதிதி பாலன் சொன்ன பதிலானது அவரை நான் நிராகரிக்க வில்லை..

இல்லை.. அப்படி நான் செய்யவே இல்லை. அதன் பிறகு தான் நாங்கள் இருவரும் ஒன்றாக சேர்ந்து டேட்டிங் சென்றோம் என்று கூச்சமின்றி கூறி இருக்கிறார்.

இந்த விஷயம் தான் இணையங்களில் புகைய ஆரம்பித்த உடனே ரசிகர்கள் இதைக் கேள்விப்பட்டு என்ன சொல்வது என்று தெரியாமல் முழித்து இருக்கிறார்கள்.

மேலும் அதிதி பாலனிடம் இருந்து இப்படி ஒரு பதிலை அவர்கள் எதிர்பார்க்கவில்லை என்பது இதன் மூலம் உறுதியாக விட்டது.