மரணத்தால் 12 வருஷ வலி.. சர்ச்சையில் சிக்கிய சோகம்.. கில்லி விஜய் அம்மா ஜானகி ஜோசப் கதை..!

தளபதி விஜய் படத்தில் நடித்த ஜானகி சபேஷ் பற்றி உங்கள் நினைவில் இருக்கிறதா? இவர் ஒரு மிகச்சிறந்த ஊடக வல்லுனராக திகழ்கிறார். நடிப்பதோடு நின்று விடாமல் மாடல், கதை சொல்லுதல், குழந்தைகள் புத்தகம், நாடகம் மற்றும் குரல் வழி கலைஞராக திகழ்ந்த இவர் தமிழ் மற்றும் தெலுங்கு மொழி படங்களில் நடித்திருக்கிறார்.


இவர் திரைப்படங்கள் மட்டுமல்லாமல் சக்ரா கோல்ட் டீ, ஜான்சன் தோத்தி போன்ற முன்னணி பிராண்டுகளுக்கு மாடலிங் செய்திருக்கக் கூடிய இவர் பிளாக் ஷிப் என்ற தலைப்பில் வெளி வந்த வெப் சீரியலிலும் நடித்திருக்கிறார்.

கில்லி விஜய் அம்மா ஜானகி சபேஷ்..

இதனை அடுத்து தமிழில் முன்னணி நடிகராக விளங்கும் தளபதி விஜயின் அம்மாவாக கில்லி படத்தில் அசத்தல் நடிப்பை வெளிப்படுத்திய இவருக்கு தமிழில் ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள்.

கில்லி படத்தில் நடிப்பதற்கு முன்பே 1997 இல் வெளி வந்த மின்சார கனவு, ஜீன்ஸ், ஜோடி, குஷி, மின்னலே, பூவெல்லாம் உன் வாசம், ஷாஜகான், ஓடு, சிறுவர்கள், உனக்கு 20 எனக்கு 18, வானம் வசப்படும், ஆயுத எழுத்து, வேட்டையாடு விளையாடு, வல்லவன், தாம் தூம், அயன், சிங்கம், பில்லா 2, சிங்கம் 2, பூஜை போன்ற படங்களில் அம்மா சகோதரி போன்ற துணை கதாபாத்திரங்களை செய்திருக்கிறார்.


தற்போது 20 வருடங்கள் கழிந்த நிலையில் கில்லி படத்தை தியேட்டர்களில் ரிலீஸ் செய்து இருக்கிறார்கள். அன்று கிடைத்த வரவேற்பை விட இன்று இந்த திரைப்படம் வெளி வந்து உலக நாடுகள் இடையே பெருத்த வரவேற்பை பெற்றுள்ளது.

--Advertisement--

மரணத்தால் 12 வருஷ வலி..

இந்தப் படத்தில் அம்மா ரோலை செய்திருக்கும் ஜானகி பற்றி ஒற்றை வார்த்தையில் பகிர்ந்து விட முடியாது மிகவும் எதார்த்தமான முறையில் இவர் இந்த ரோலை பக்குவமாக செய்து இருக்கிறார்.

ஜானகி பெங்களூரில் பிறந்தவர். அவர் தனது ஆரம்பப் பள்ளிப் படிப்பை கொல்கத்தாவில் உள்ள கார்மல் பள்ளியிலும், பின்னர் புது தில்லியில் உள்ள DTEA மூத்த மேல்நிலைப் பள்ளியிலும் பயின்றார்.

டெல்லியில் உள்ள லேடி ஸ்ரீ ராம் பெண்களுக்கான கல்லூரியில் அரசியல் அறிவியலில் இளங்கலைப் பட்டமும், டெல்லி ஜாமியா மில்லியாவில் மக்கள் தொடர்பியல் முதுகலைப் பட்டமும் பெற்றுள்ளார்.


மேலும் சங்கரின் மூலம் அம்மாவாக ஜீன்சில் அறிமுகமான இவர் விஜயின் வயதும் இவரது வயதும் ஒன்றாக இருந்த போதும் அவருக்கு அம்மா கேரக்டரை அசத்தலாக செய்திருந்தார். இவர்கள் இருவர் இடையே அம்மா, மகன் உறவு மிகச் சிறப்பாக அந்த படத்தில் வெளிப்பட்டிருந்தது.

சர்ச்சையில் சிக்கிய சோகம்..

இந்நிலையில் மலேசியாவில் பிறந்து வளர்ந்த இவரது தாய் 12 ஆண்டுகளுக்கு முன்பு இறந்த போன வலி இன்னும் அவர் இடையே உள்ளதாக சொல்லி இருக்கும் தகவல் ரசிகர்களின் மனதில் ஆழ்ந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் அவரது அம்மாவின் புகைப்படத்தை பார்க்கும் போது ஏன் இவ்வளவு வேகமாக இறந்து போனார் என்ற கேள்வியை கேட்க வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு அடிக்கடி ஏற்படுவதாக சொல்லி இருக்கிறார்.


தன்னைப் பெற்ற தாய், தந்தை இருவருமே தனக்கு நல்ல கைடு லைனை கொடுத்தது போல இவரும் தன்னுடைய மகளுக்கு அதே கைடன்ஸை கொடுப்பேன் என்று உறுதி பட தெரிவித்திருக்கிறார்.

இதனை அடுத்து பாம்பே ஜெயஸ்ரீ அவர்களின் மருமகளாக விளங்கக்கூடிய இவர் மனதுக்குள் இவ்வளவு சோகத்தை வைத்திருக்கிறாரா? இவர் அம்மா இறந்த துயரம் இவரை விட்டு இன்னும் நீங்கவில்லை என்ற ரீதியில் ரசிகர்கள் இவரை பற்றி பேசி வருகிறார்கள்.