அந்த வயதிலேயே நடிகையை படுக்கைக்கு அழைத்த தயாரிப்பாளர்!.. பயில்வான் ரங்கநாதன் அளித்த பகீர் தகவல்..

அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனை என்பது தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல் இந்திய சினிமா முழுக்க எக்கச்சக்கமாக இருந்து வருகிறது என்று கூறலாம் பெரும்பாலும் திரைத்துறைக்கு வரும் நடிகைகள் ஒருமுறையாவது அட்ஜஸ்ட்மெண்ட் பிரச்சினைகளுக்கு உள்ளாகி வருவதை அவர்களே பேட்டிகளில் கூறுவதை பார்க்க முடிகிறது.

கருப்பு வெள்ளை சினிமா காலகட்டங்களில் இருந்து பெண்களுக்கு சினிமாவில் பாதுகாப்பு என்பது குறைவாகவே இருந்து வருகிறது .ஏனெனில் பெரும் நடிகர்கள் அளவிற்கு பெண் நடிகைகளுக்கு மார்க்கெட் இருப்பதில்லை.

சினிமாவில் அட்ஜெஸ்ட்மெண்ட்:

பெரும் கதாநாயகனாக நடிக்கும் நடிகர்களுக்கு பெரிய ரசிகர் பட்டாளமே இருக்கிறது. ஆனால் நடிகைகளை பொறுத்தவரை தயாரிப்பாளரோ அல்லது நடிகரோ நினைத்தால் கூட அவர்களுக்கு பட வாய்ப்பு கிடைக்காமல் செய்துவிட முடியும் என்கிற நிலை இருப்பதால் தொடர்ந்து அவர்களுக்கு அட்ஜஸ்ட் செய்து போக வேண்டிய நிலையில் பெண்கள் இருக்கின்றனர்.

இப்படி பாலிவுட் நடிகை அங்கிதா லோகாண்டே விற்கு ஒரு சம்பவம் நடந்துள்ளதாக கூறப்படுகிறது. பிரபல ஹிந்தி சீரியல் நடிகையாக இருந்து வருபவர் அங்கிதா லோகாண்டே.

---- Advertisement ----

வர் முதன்முதலில் பவித்ர ரிஷ்டே என்கிற ஹிந்தி சீரியலில் நடித்து பிரபலமானார். கடந்த 2021 ஆம் ஆண்டு இவர் விக்கி ஜெயின் என்பவரை திருமணம் செய்து கொண்டார். அங்கிதா லோகாண்டே பிரபல சினிமா நடிகரான சுஷாந்த் சிங்கின் முன்னாள் காதலி ஆவார்.

பாலிவுட் நடிகை சந்தித்த பிரச்சனை:

சுஷாந்த் சிங்கின் மறைவிற்கு பிறகு இவர் விக்கி ஜெயினை திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் சினிமாவில் ஆரம்ப கட்டங்களில் அவர் அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனைக்கு உள்ளானதாக கூறியிருக்கிறார்.

அவருக்கு 19 வயது இருக்கும்பொழுது பிரபல திரைப்பட தயாரிப்பாளர் ஒருவர் அவருக்கு அவரைப் படுக்கைக்கு அழைத்ததாக அவர் கூறியிருக்கிறார்.

இது குறித்து தனது பேட்டியில் பேசிய பயில்வான் ரங்கநாதன் கூறும்போது ”சுஷாந்த் சிங்கின் முன்னாள் காதலியான அங்கிதா லோகாண்டே தன்னுடைய இளம் வயதில் தயாரிப்பாளர் ஒருவர் படுக்கைக்கு அழைத்தது குறித்து பேட்டியில் பேசியிருந்ததை பார்க்க முடிந்தது.

ஆனால் அவரை யார் படுக்கைக்கு அழைத்தார் என்பதை அவர் கூறவில்லை சினிமா நடிகைகளை பொறுத்த வரை இந்த மாதிரியான அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சினைகளை அவர்கள் சந்திக்கும் போது, அவர்கள் தைரியமாக அதை கொண்டு வந்து வெளியில் பேச வேண்டும்.

அப்பொழுதுதான் மற்றவர்களுக்கு பயம் வரும் ஆனால் எதற்காக இப்படி அவர்கள் மூடி மறைக்கிறார்கள் என்று தெரியவில்லை” என்று இது குறித்து பயில்வான் ரங்கநாதன் பேசியுள்ளார்.

---- Advertisement ----