கமல் இப்படி பண்ணுவாருன்னு நான் எதிர்பாக்கல.. பாபநாசம் பட நடிகை ஆஷா சரத் பேட்டி..!

ஒரு படத்தில் நடித்தாலும் அந்த படத்தில் மிகச்சிறந்த தனது நடிப்பாற்றலை சில காட்சிகளிலேயே வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்ந்து விடும் திறமை சில நடிகைகளுக்கு மட்டுமே உண்டு.

இதில் மலையாள நடிகைகள் மிகச் சிறந்த அளவில் நடிப்பை வெளிப்படுத்தி, தமிழ் சினிமா ரசிகர்களை தொடர்ந்து அசத்தி வருகிறார்கள்.

ஆஷா சரத்

பாபநாசம் படத்தில் போலீஸ் அதிகாரி கேரக்டரில் நடித்தவர் ஆஷா சரத். இந்த படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு அவரது நடிப்பும் ஒரு முக்கிய காரணம் என்றால் அது மிகையல்ல.

ஆஷா சரத் மலையாள படங்களில் அதிகளவில் நடித்த மலையாள நடிகை மட்டுமல்ல, இவர் ஒரு சிறந்த பரதநாட்டிய கலைஞர். அதிகமான மலையாள படங்களில் மட்டுமின்றி, தொலைக்காட்சி சீரியல்களில் நிறைய நடித்துள்ளார்.

--Advertisement--

பாபநாசம் படத்தில் போலீஸ் அதிகாரி

கடந்த 2014 ஆம் ஆண்டில் வெளியான பிரைடே என்ற படம்தான் இவரது முதல் படம். தமிழில் ஆஷா சரத் அறிமுகமான படம் பாபநாசம். இந்த படத்தில் போலீஸ் அதிகாரி கேரக்டரில், தன் மகனை இழந்து தவிக்கும் ஒரு பாசமான தாயாக ஒரு அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.

அதே நேரத்தில் தமிழில் முதலில் அறிமுகமான முதல் படத்திலேயே வில்லி கேரக்டரில் நடித்து, தமிழ் சினிமா ரசிகர்களால் பெரிதும் கவனிக்கப்பட்டார்.

திருஷ்யம் படம் ரீமேக்

பாபநாசம் படம் மலையாளத்தில் மோகன்லால் – மீனா நடித்த திருஷ்யம் என்ற படத்தின் ரீமேக் தான். இந்த படம்தான் பாபநாசம் என்று ரீமேக் செய்து தமிழிலும் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. திருஷ்யம் படத்தில் நடித்த அதே கேரக்டரில் தான் தமிழிலும் ஆஷா சரத் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பாபநாசம் படத்தில் ஆஷா சரத் நடிப்பு மிகவும் பிடித்துப் போனதால் கமல்ஹாசன் தனது அடுத்த படமான தூங்காவனம் படத்தில் தனது மனைவி கேரக்டரில் ஆஷா சரத்தை நடிக்க வைத்தார். இந்த படத்திலும் ஆஷா சரத், சிறந்த நடிப்பை தந்திருந்தார்.

தொடர்ந்து அன்பறிவு என்ற படத்தில் ஹிப்ஹாப் ஆதிக்கு அம்மாவாக ஆஷா0 சரத் நடித்திருந்தார்.

இதுவரை பல படங்களில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி பல விருதுகளை பெற்று இருக்கிறார் ஆஷா சரத். பிலிம்பேர், விகடன், சைமா என பல விருதுகளை பெற்றிருக்கிறார். நடிப்பில் மட்டும் இன்றி பரத நாட்டியம், குச்சிப்புடி, கதகளி ஆகிய நடனங்களில் முறையாக பயிற்சி பெற்ற நடனக் கலைஞர்.

8 ஆண்டுகளாக ரேடியோ ஜாக்கி

ஆஷா சரத் ரேடியோ ஆசியா எப் எம் இல் ரேடியோ ஜாக்கியாக 8 வருடங்களுக்கு மேல் பணிபுரிந்துள்ளார். தற்போது 48 வயதாகும் ஆஷா சரத் தொடர்ந்து சினிமாவில் தனக்கு பிடித்தமான கேரக்டர்களை தேர்வு செய்து நடித்து வருகிறார்.

இந்நிலையில் சமீபத்தில் ஒரு நேர்காணல் பேசிய ஆஷா சரத், பாபநாசம் படத்தில் நடித்த பிறகு, கமல்ஹாசன் நடித்த தூங்காவனம் படத்தில் எனக்கு வாய்ப்பு கிடைத்தது.

ஒரே டேக்கில் முடிந்து விடும்

நான் நிறைய பேர் சொல்லி கேள்விப்பட்டிருக்கிறேன். அதாவது, கமல்ஹாசன் நடிப்பில் ஜாம்பவான் என்று அவர்கள் கூறுவார்கள் ஆனால், அவருடன் சேர்ந்து பணி செய்யும் போது தான், அதை நான் நேரடியாக உணர்ந்தேன். எனக்கு ஒவ்வொரு காட்சியையும் தெளிவாக விளக்கி சொல்லிக் கொடுப்பார். இயக்குனர் சொல்வதை காட்டிலும் கமல்ஹாசன்சொல்வது சிறப்பாக இருக்கும். அவர் சொல்வதைக் கேட்டு நடித்தால் ஒரே டேக்கில் முடிந்து விடும்.

இப்படி செய்வார் என்று நினைக்கவில்லை

பாபநாசம் படத்தில் என் நடிப்பை பார்த்துவிட்டு, அவரே கூப்பிட்டு எனக்கு தூங்காவனம் படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்தார்.

கமல் இப்படி செய்வார் என்று நான் நிச்சயமாக நினைக்கவில்லை. அது ஒரு கனவு போல இருந்தது. படமும் வெளியாகி நல்ல பெயரை பெற்றுக் கொடுத்தது என்று நடிகை ஆஷா சரத் கூறியிருக்கிறார்