Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

Tamil Cinema News

“ஷகீலா போல பெருசா இருக்கும்ன்னு…” – ஷீத்தல் – பப்லூ BREAKUP..! – முற்றிய வாக்கு வாதம்..!

பிரபல நடிகர் பப்லு என்ற பிரித்திவிராஜ் சமீபத்தில் தன்னுடைய இரண்டாவது மனைவி ஷீத்தல்-ஐ பிரிந்து இருக்கிறார். ஆனால், மறுபக்கம் இவருடைய இரண்டாவது மனைவி என கூறப்படும் ஷீத்தல் எனக்கும் பப்லுவுக்கும் திருமணமாகவே இல்லை.

அவரை என்னுடைய கணவர் என்றோ.. என்னை அவருடைய மனைவி என்றோ.. எழுதுவதை நிறுத்துங்கள்… என தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கதறி வருகிறார்.

இத்தனை நாட்களாக ஒன்னும் மண்ணுமாக இருந்த இருவரும் எதனால் பிரிந்தார்கள் என்ற விவாதம் தான் கடந்த இரண்டு நாட்களாக இணைய பக்கங்களில் பேசு பொருளாக இருக்கிறது.

எவ்வளவு பெரிய தவறு..

இதுகுறித்து பப்லு பிரித்விராஜ் மட்டும் தான் ஊடகங்களை சந்தித்து பேசி வருகிறார். அதில், அவர் பிரதானமாக கூறக்கூடிய விஷயம் என்னுடைய தனிப்பட்ட விஷயத்தை பொதுவெளியில் பேசியதை எவ்வளவு பெரிய தவறு என்பதை நான் இப்போது புரிந்து கொண்டிருக்கிறேன்.

இனிமேல் நிச்சயமாக எப்படி செய்ய மாட்டேன் என கூறுகிறார். அந்த வகையில் பிரபல நடிகை ஷகிலா தொகுத்து வழங்கிய பேட்டி ஒன்றில் கலந்து கொண்டார் பிரித்திவிராஜ்.

--Advertisement--

அப்போது, நீங்கள் தான் முதலில் உங்களுடைய தனிப்பட்ட ரகசியமான விஷயங்களை பொதுவெளியில் போட்டு உடைத்தீர்கள். எனக்கு வயது ஆகிறது ஆனால் எனக்கு உடல் ரீதியான தேவை இருக்கிறது.. அப்படியான விஷயங்கள் தேவைப்படுகிறது என ரகசியமான விஷயங்களை வெளியில் பேசினீர்கள்.

ஷகிலா போல பெருசா இருக்கும்ன்னு…

அப்போது நீங்கள் அப்படி பேசியதன் காரணமாகத்தான் தற்போது உங்களுடைய தனிப்பட்ட வாழ்க்கையில் கேள்விகள் எழுப்பப்படுகிறது. அப்போது நீங்கள் பேசாமல் இருந்திருந்தால் இப்போது இந்த கேள்வியை உங்களை யாரும் கேட்டிருக்க மாட்டார்கள்  என நடிகர் ஷகிலா கூறினார்.

இதனை கேட்ட பப்லூ, நான் அனைவரையும் நம்பி விட்டேன். எல்லோருக்குமே மனசு.. ஷகிலா போல பெருசா இருக்கும்ன்னு நம்பிட்டேன். ஆனால் அவர் அவர்கள் அவர்களுடைய எல்லையில் தான் சிந்திக்கிறார்கள். இப்போதுதான் அதை புரிந்து கொண்டிருக்கிறேன்.

என்னுடைய தனிப்பட்ட விஷயத்தை பொதுவெளியில் பேசியது மிகப்பெரிய தவறு. நான் ஷகிலா என்ற தனி மனிதரிடம், தனிப்பட்ட முறையில் எவ்வளவோ விஷயங்களை பேச முடியும்.. அதையெல்லாம் பொதுவெளியில் பேசக்கூடாது என்பதை புரிந்து கொண்டிருக்கிறேன். உங்களுக்கு பெரிய மனசு இருக்கிறது.

ஆனால் அனைவருக்கும் அப்படி இருக்கிறதா..? என்றால் இல்லை.. எனவே இனிமேல் என்னுடைய தனிப்பட்ட விஷயங்களை பொதுவெளியில் விவாதிக்க போவது கிடையாது. யார் என்ன வேண்டுமானாலும் சொல்லிக் கொண்டு போகட்டும்.. நான் என்னுடைய தனிப்பட்ட விஷயத்தை பொதுவெளியில் விவாதிக்க போவது கிடையாது என பேசியிருக்கிறார்.

Continue Reading
 
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Tamil Cinema News

Trending Now

To Top