புயல் நடிகரின் பண்ணை வீட்டில் அம்பிகா.. புருஷன்கள் பெயரை பட்டியலிட்ட நடிகர்..!

80ஸ் காலகட்டத்தில் தென்னிந்திய சினிமாவில் கொடி கட்டி பறந்த புகழ் பெற்ற நடிகையாக தென்பட்டு வந்தவர் தான் நடிகை அம்பிகா.

இவர் மலையாளம் தமிழ் தெலுங்கு உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் பல்வேறு வெற்றி திரைப்படங்களில் நடித்து முன்னணி நட்சத்திர நடிகையாக இடத்தை பிடித்திருந்தார்.

நடிகை அம்பிகா:

இவர் தன்னுடைய சகோதரியான ராதாவுடன் சேர்ந்து தான் திரை பயணத்தையே துவங்கினார். அவருடன் அறிமுகமான புதிதிலேயே அடுத்தடுத்து தொடர்ச்சியாக வெற்றி திரைப்படங்களில் நடித்து ராதாவுக்கு ஈடாக பிரபலமானார்.

கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தை சொந்த ஊராகக் கொண்ட அம்பிகா தமிழ் சினிமாவிலும் பல்வேறு வெற்றி திரைப்படங்களில் நடித்து இங்கும் பிரபலமான நடிகையாக பார்க்கப்பட்டு வந்தார் .

---- Advertisement ----

இது தவிர அவர் குணச்சித்திர நடிகையாகவும் சீரியல் நடிகையாகும் நடித்து வந்தார். ஒருவர் வாழும் ஆலயம், தூங்காத கண்ணொன்று ஒன்று, அம்பிகை நேரில் வந்தால். நானும் ஒரு தொழிலாளி ,மக்கள் என் பக்கம், வில்லாதி வில்லன் உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார்.

80ஸ் ஹிட் ஹீரோயின்:

மேலும்,ஆள வந்தான், பௌர்ணமி அலைகள், அந்த ஏழு நாட்கள், சகலகலா வல்லவன் ,வாழ்வே மாயம் ,அன்புள்ள ரஜினிகாந்த், உயர்ந்த மனிதன் ,படிக்காதவன் , நான் சிகப்பு மனிதன், இதய கோவில், அருணாச்சலம் உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்த அம்பிகா பிரபலமான நடிகையாக 80ஸ் காலகட்டத்தில் தென்பட்டு வந்தார்.

தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வந்த அம்பிகா வயதாக பின்னர் குணசித்திர வேதங்களில் ஏற்று நடிக்க ஆரம்பித்தார் .

பூவெல்லாம் கேட்டுப்பார், ஆனந்த பூங்காற்றே ,உயிரோடு உயிராக, சுயம்வரம் ,ஜோடி, மழை, உத்தமபுத்திரன் ,அவன் இவன், உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் அம்பிகா நடித்திருக்கிறார்.

“அவன் இவன்” படத்தில் அம்பிகாவின் சரவெடி காமெடி:

குறிப்பாக அவன் இவன் திரைப்படத்தில் விஷாலின் அம்மாவாக அதிரடி காமெடி நடிகையாக நடித்து அனைவரையும் குலுங்க குலுங்க சிரிக்க வைத்திருந்தார்.

இப்படி மிகத்திறமையான நடிகையாக வலம் வந்த நடிகை அம்பிகாவின் தனிப்பட்ட வாழ்க்கை என எடுத்து பார்த்தோமானால் 1988 ஆம் ஆண்டு ஆர். ஐ . பிரேம்குமார் மேனன் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

அம்பிகாவுக்கு இரண்டு ஆண் குழந்தைகள் பிறந்தனர். திருமணத்திற்கு பிறகு தனது கணவருடன் அமெரிக்காவில் குடியேறிவிட்டார்.

அதன் பின்னர் பிரேம்குமார் உடன் கருத்து வேறுபாடு ஏற்பட அவரை விவாகரத்து செய்துவிட்டு சென்னையில் குடியேறி மீண்டும் 2000 கால கட்டத்தில் திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்தார்.

அப்போதுதான் நடிகர் ரவிகாந்த் என்பவரை காதலித்து மீண்டும் திருமணம் செய்து கொண்டார். ஆனால் இரண்டே ஆண்டுகளில் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அவரையும் பிரிந்து விட்டார்.

வடிவேலுடன் பண்ணைவீட்டில் அம்பிகா:

பின்னர் திருமணம் என்று யாரையும் செய்யாமல் தனது மகன்களுடன் தனிமையில் வாழ்ந்து வந்த அம்பிகா இதனிடையே நடிகர் வடிவேலுவுடன் ரகசிய உறவில் இருந்ததாகவும் அவருடன் அவ்வப்போது பண்ணை வீட்டிற்கு அடிக்கடி சென்று வந்ததாகவும் கிசுகிசுக்கப்பட்டார்.

இதனை பிரபல சர்ச்சைக்குரிய பத்திரிகையாளர்கள் ரங்கநாதன் கூறி அதிர வைத்துள்ளார். நான் ஒரு முறை அம்பிகாவை பேட்டி எடுத்தபோது உங்களுக்கு எத்தனை கணவர்? என கேட்டதற்கு நீங்களே கணக்குப் போட்டுக் கொள்ளுங்கள் என்றார்.

ஆனால் எனக்கு இருப்பது இரண்டு மகன்கள் தான் என சிரித்தபடி கூறினார் அம்பிகா. அம்பிகாவே இப்படி கூறிவிட்டதால் அவரோட வாழ்க்கையில் எத்தனை கணவர்கள் இருந்திருப்பார்கள் என பயில்வான் ரங்கநாதன் நக்கலாக கிண்டல் அடித்திருக்கிறார்.

---- Advertisement ----