Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

முதல் புருஷன் பெயரில் டாட்டூ.. அவ இன்னும் அழிக்கல.. இது தான் காரணம்.. பாவனி குறித்து அமீர்..!

Tamil Cinema News

முதல் புருஷன் பெயரில் டாட்டூ.. அவ இன்னும் அழிக்கல.. இது தான் காரணம்.. பாவனி குறித்து அமீர்..!

சின்னத்தம்பி சீரியலில் நந்தினி கேரக்டரில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம்பிிடித்தவர் நடிகை பாவனி ரெட்டி. இவர் சில ஆண்டுகளுடன் முன் தன்னுடன் சீரியலில் நடித்த நடிகரை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார்.

பாவனி ரெட்டி

ஆனால் திருமணம் செய்த சில ஆண்டுகளில் பாவனியின் கணவர் தற்கொலை செய்துக்கொண்டார். அதனால் கணவரையே கொன்றவர் பாவனி ரெட்டி என்ற கடுமையான விமர்சனங்களுக்கு ஆளானவர்.

பிக்பாஸ் வீட்டில் அமீர்

இந்நிலையில் சில ஆண்டுகளுக்கு முன் விஜய் டிவி நடத்திய பிக்பாஸ் நிகழ்ச்சியில் பாவனி ரெட்டி போட்டியாளராக கலந்துக்கொண்டார். அப்போது வொய்ல்டு கார்டு முறையில் பிக்பாஸ் வீட்டுக்குள் வந்த டான்ஸ் மாஸ்டர் அமீர், பாவனியையே சுற்றி சுற்றி வந்து, ஒரு கட்டத்தில் மடித்துவிட்டார். இருவருக்குள் நெருக்கம் ஏற்பட்டு, காதல் மலர்ந்தது.

குடும்பம் நடத்தி…

அதன்பின் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த அவர்கள் ஒரே வீட்டில் கணவன், மனைவியாக குடும்பம் நடத்தி வருகின்றனர். வருகிற நவம்பர் மாதம் அவர்கள் முறைப்படி திருமணம் செய்துக்கொள்ள இருப்பதாகவும் தகவல் பரவி வருகிறது.

--Advertisement--

இந்நிலையில் நேர்காணல் ஒன்றில் அமீர், பாவனி பங்கேற்றனர். இதில் பாவனி கூறியதாவது,

நான் என் கணவரை, பல ஆண்டுகள் ஆழமாக காதலித்துதான் திருமணம் செய்துக்கொண்டேன். அது பலருக்கும் தெரியாது. இப்போது முதல் கணவரை கொன்றுவிட்டாய், அமீரை எப்போது கொல்லப் போகிறாய் எனக் கேட்டு சிலர் கமெண்ட் செய்து என் மனதை கிழித்து காயப்படுத்துகின்றனர்.

இதையும் படியுங்கள்: அந்த நேரத்தில்.. என்னைத்தான் தூக்கி போட்டு மிதிப்பார்.. கணவர் கொடுமை குறித்து சாந்தி வில்லியம்ஸ்..!

எவ்வளவு வேதனைப்படுவேன்

நான் ஒருவர் மீது அன்பு வைத்துவிட்டால் அவர்களுக்காக எதையும் செய்வேன்.அவர்கள்தான் என் உலகம் என்று வாழ்வேன். அப்படிப்பட்டவர்கள், என் வாழ்வில் இல்லாமல் போய்விட்டால் நான் எவ்வளவு வேதனைப்படுவேன் என என்னுடன் இருந்தவர்களுக்கு தான் தெரியும்.

என் வாழ்க்கையை பார்த்தவர்களுக்கு தெரியும். ஆனால் கொச்சையாக கமெண்ட் போடுகின்றனர் என்று கூறினார்.

பேசாத நாளே கிடையாது

அருகில் இருந்த அமீர் கூறியதாவது, பாவனி தனது முதல் கணவர் குறித்து அடிக்கடி என்னிடம் பேசுவார், அவரை பற்றி நினைவுபடுத்திக்கொண்டே இருப்பார். அவரது கணவரை பற்றி பேசாத நாளே கிடையாது.

இதையும் படியுங்கள்: முதலிரவு அறையில் முரட்டு குடி.. போதை ஏற்றும் மிர்ணாளினி ரவி..

கையில் டாட்டூ

பாவனி, தனது முதல் கணவரின் பெயரை தனது கையில் டாட்டூ போட்டிருக்கிறார். அந்த டாட்டூவை எடுத்துவிடட்டுமா, என பாவனி ஒருமுறை கூட என்னிடம் கேட்டது கிடையாது.

நானும் அதை எடுக்கச் சொல்கிற ஆளும் கிடையாது. அது பாவனி வாழ்ந்த வாழ்க்கை. அதை மறக்குமாறு எந்த இடத்திலும் நான் சொன்னது கிடையாது.

என் மீது கோபப்பட்டால்

அந்த அளவுக்கு பாவனி, தன் முதல் கணவரை நேசித்து இருக்கிறார். என்னிடமும் நிறைய பாசத்துடன், அன்புடன் இருக்கிறார். சில நேரங்களில் பாவனி என் மீது கோபப்பட்டால், நான் போய் தூங்கி விடுவேன். பிறகு அவரே வந்து என்னை சமாதானப்படுத்தி விடுவார், என்று அமீர் கூறியிருக்கிறார்.

இன்னும் அழிக்கல…

முதல் புருஷன் பெயரில் டாட்டூ.. அவ இன்னும் அழிக்கல.. அவர் மீது கொண்ட அன்புதான் காரணம் என பாவனி குறித்து அமீர் நேர்காணல் ஒன்றில் வெளிப்படையாக பேசியிருக்கிறார்.

Continue Reading
 

More in Tamil Cinema News

Trending Now

To Top