அந்த மாதிரி பையன் கெடைச்ச விடவே மாட்டேன்.. ஓப்பனாக கூறிய பிக்பாஸ் ஜனனி..

அந்த மாதிரி பையன் கெடைச்சா விடவே மாட்டேன்.. ஓப்பனாக கூறிய பிக்பாஸ் ஜனனி..

இலங்கையில் டிவி அறிவிப்பாளராக, நிகழ்ச்சித் தொகுப்பாளராக பிரபலமானவர் ஜனனி. அதுமட்டுமின்றி அதிகளவில் ரீல்ஸ் போட்டும் மக்களை கவர்ந்திருக்கிறார். மாடலிங் துறையில் இருந்து நிறைய விளம்பர படங்களிலும் அவர் நடித்திருப்பதாக கூறப்படுகிறது

பிக்பாஸ் ஜனனி

இந்நிலையில், கடந்த 2022ம் ஆண்டில் நடந்த விஜய் டிவி பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் ஜனனி கலந்துக்கொண்டார். துவக்கத்தில் இலங்கை தமிழில் கொஞ்சி கொஞ்சி பேசி, பிக்பாஸ் ரசிகர்களின் மனம் கவர்ந்த ஜனனி, ஒரு கட்டத்தில் கோபத்தில் உச்சத்துக்கே சென்று கத்த ஆரம்பித்து விட்டார்.

சக போட்டியாளர்களிடம் வாக்குவாதம் செய்வது, சண்டையிடுவது, டாஸ்க்களில் தகராறு என, பல விதங்களில் அவர் மீதான விமர்சனம் அதிகரித்தது.

அமுதவாணன்

இந்த சூழலில் பிக்பாஸ் போட்டியில் இருந்த மற்றொரு போட்டியாளர் அமுதவாணனிடம் அதிக நெருக்கம் காட்டினார். அவருக்காக மற்ற போட்டியாளர்களிடம் ஜனனி பரிந்து பேசினார்.

--Advertisement--

அமுதவாணன் இருக்கும் இடத்திலேயே அவரும் இருந்தார். இதனால் ஒரு கட்டத்தில் ஜனனி மீது பிக்பாஸ் பார்வையாளர்களுக்கு கடுமையான அதிருப்தி ஏற்பட்டது.

இதையும் படியுங்கள்: நடிகர் பார்த்திபனின் மகள்களை பார்த்துள்ளீர்களா..? இதோ புகைப்படம்..

லியோ படத்தில்

ஆனால் பிக்பாஸ் போட்டியில் ஜனனி வெற்றி பெறாமலேயே வெளியேற்றப்பட்டார். தொடர்ந்து தமிழ் சினிமாவில் வாய்ப்பு தேடி வந்த நிலையில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் முக்கிய கேரக்டரில் பிக்பாஸ் ஜனனி நடித்திருந்தார்.

காஷ்மீரில் விஜய் நடத்தும் காபி ஷாப்பில், சாக்லேட் காபி கேட்டு வரும் சாண்டி மாஸ்டர், அடுத்து வரும் மிஷ்கின் உள்ளிட்ட வில்லன் குரூப், விஜயிடம் பிரச்னை செய்வர்.

அங்குள்ள பணியாளர் ஜனனியை பிடித்துக்கொண்டு சாண்டி மாஸ்டர் டார்ச்சர் செய்ய, அவர்களை எல்லாம் சில விநாடிகளில் சுட்டுத் தள்ளி விடுவார் விஜய். இந்த காட்சிக்கு பிறகுதான் படம் வேற மாதிரியாக சம்பவங்களுடன் செல்லும்.

எதிர்கால கணவர்

பிக்பாஸ் ஜனனிக்கு இன்னும் திருமணமாகவில்லை. அவரது எதிர்கால கணவர் குறித்த அவரது கனவுகளை ஒரு வீடியோவில் தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்கள்: கேப்டன் விஜயகாந்துடன் ரோபோ ஷங்கர் மனைவி… ஆள் அடையாளம் தெரியாமல் இருக்கும் போட்டோ..

இதுகுறித்து வீடியோவில் பிக்பாஸ் ஜனனி கூறியதாவது, அழகு எல்லாம் எனக்கு முக்கியமே இல்லை. நல்ல பையனாக இருக்க வேண்டும். ஒரு பொண்ணுக்கு உண்மையாக இருக்கும் பையனாக இருந்தால் மட்டும் போதும்.

தூக்குடா அந்த தங்கத்தை

இந்த காலத்தில் உண்மையாக இருக்கும் கணவரோ, காதலரோ கிடைத்தால் அது பெரிய விஷயம். அந்த மாதிரி பையன் கிடைத்தால் போதும். தூக்குடா அந்த தங்கத்தை என்று நானே இலங்கைக்கு கூட்டீட்டு போய் நல்லா பார்த்துப்பேன் என்று கூறியிருக்கிறார் நடிகை பிக்பாஸ் ஜனனி.

உண்மையாக இருக்கற நல்ல பையன் கெடைச்சா விடவே மாட்டேன், இலங்கைக்கு கூட்டீட்டு போயிடுவேன் என்று இந்த வீடியோவில் ஓப்பனாகவே கூறிவிட்டார் பிக்பாஸ் ஜனனி.