அந்த நேரத்தில் என் கணவர் செய்த வேலை.. விவாகரத்து குறித்து வெளிப்படையாக சொன்ன பிக்பாஸ் சம்யுக்தா..

அந்த நேரத்தில் என் கணவர் செய்த வேலை.. விவாகரத்து குறித்து வெளிப்படையாக சொன்ன பிக்பாஸ் சம்யுக்தா..

பிரபல மாடல் அழகி மற்றும் நடிகையாக திகழும் சம்யுக்தா விஜய் டிவியின் டாப் ரியாலிட்டி ஷோவான பிக் பாஸ் சீசன் 4-கில் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சிகள் கலந்து கொண்ட பிறகு இவருக்கு பல பட வாய்ப்புகள் வந்து குவிந்தது.

இதையும் படிங்க: ஒரு பையனை எனக்கு பிடிச்சா.. இதை பண்ணிடுவேன்.. கூச்சமின்றி கூறிய லட்சுமி மேனன்..


அந்த வகையில் இவர் தளபதி விஜய் நடிப்பில் வெளியான வாரிசு திரைப்படத்தில் நடித்திருக்கிறார். மேலும் திரைப்படங்கள் மட்டுமல்லாமல் ஜி 2 தொலைக்காட்சியில் வெளி வந்த அனந்தம் என்ற வெப் சீரியலிலும் நடித்திருக்கிறார்.

பிக் பாஸ் சம்யுக்தா..

பிக் பாஸ் சம்யுக்தாவை பொறுத்த வரை சுந்தர் சி இயக்கத்தில் ஜீவா ஜெய் நடிப்பில் வெளி வந்த நண்பன் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருக்கிறார். மேலும் இவர் சொந்தமாக யூடியூப் சேனல் ஒன்றை நடத்தி வருகிறார்.

இந்த Youtube சேனலில் ஃபேஷன், சமையல், டிராவல் நிமித்தமான வீடியோக்களை வெளியிட்டு அதிக அளவு பார்வையாளர்களை பிடித்து விட்டார். அது மட்டுமல்லாமல் இவர் தொகுப்பாளினி பாவானவோடு இணைந்து டான்ஸ் வீடியோக்களை அடிக்கடி Instagram பக்கத்தில் வெளியிடுவார்.


கணவன் செய்த வேலை..

சமூக வலைதள பக்கத்திலும் தன்னை பிசியாக வைத்திருக்க கூடிய பிக் பாஸ் சம்யுக்தா அண்மை பேட்டி ஒன்றில் பேசிய போது கூறிய சில விஷயங்கள் அவர் விவாகரத்துக்கு இது தான் அடிப்படை காரணமாக அமைந்திருந்ததா? என்று ரசிகர்களை அசைபோட வைத்து விட்டது.

மேலும் இந்த பேட்டியில் அவர் விவாகரத்துக்கான உண்மையான காரணத்தை அறிந்து கொண்ட ரசிகர்கள் அனைவரும் இவருக்குள் எவ்வளவு சோகம் இருக்கிறதா? என்பதை உணர்த்த கூடிய வகையில் இருந்தது.

கொரோனா காலகட்டத்தில் வீட்டில் இருந்த சமயத்தில் இவர் கணவர் செய்த செயலானது இவரை மன ரீதியில் சில சிக்கல்களில் சிக்க வைத்து விட்டது.

விவாகரத்துக்கான காரணம்..

இதற்குக் காரணம் தன் கணவர் மீது ஆழ்ந்த அன்பை வைத்திருந்த இவர் தன்னை விட்டு வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த கணவர் மற்றொரு பெண்ணோடு குடும்பம் நடத்தி வருகிற விஷயத்தை தெரிந்து கொண்டு அதிர்ந்து போனார்.


இதனை அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் இருந்த இவரை தேற்றி இவரை பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வைத்ததை அடுத்து இன்று பிரபலமாகி இருப்பதை கூறி இருக்கிறார்.

மேலும் தனது கணவர் வேறொரு பெண்ணுடன் லிவிங் ரிலேஷன்ஷிப்பில் இருந்தார் என்ற விஷயத்தை தாங்கிக் கொள்ள முடியாத இவர் கடுமையான மன உளைச்சலில் இருந்ததாகவும் கண்ணை கட்டி காட்டில் விட்டது போல இருந்ததாக இவரது நிலைமையை கூறினார்.

மேலும் தன் கணவர் வேறொரு பெண்ணோடு லிவிங் ரிலேஷன்ஷிப்பில் இருந்ததால் தான் விவாகரத்து செய்து கொண்டு தற்போது சினிமாவில் கவனத்தை செலுத்தி வருவதாக கூறிய இவரது பேச்சு ரசிகர்களின் மத்தியில் பரவி பேசும் பொருளாக மாறிவிட்டது.


இதனை கேள்விப்பட்ட ரசிகர்கள் அனைவரும் அவருக்கு ஆறுதலை கூறி வருவதோடு மட்டுமல்லாமல் அவர் செய்த செயலில் நியாயம் உள்ளது. உங்களுக்கு இருக்கும் திறமைக்கு நீங்கள் சிறப்பாக வாழ்வீர்கள் என்று உற்சாகம் தரக்கூடிய உத்வேக வார்த்தைகளை கூறி வருகிறார்கள்.

இதையும் படிங்க: “அந்த இடத்தில் குத்தி குத்தி மதுவை ஊற்றி..” கணவர் குறித்த ரகசியத்தை உடைத்த பாப்ரி கோஷ்..!

இணையத்தில் வைரலான இந்த விஷயத்தை அவர்களோடு வைத்துக் கொள்ளாமல் நண்பர்களுக்கும் ஷேர் செய்து வருவதால் இந்த விஷயமானது காட்டு தீ போல் பரவி விட்டது.