படையப்பா “சிங்க நடை போட்டு..” பாடலில் தோன்றிய இந்த குழந்தை யாரு..? இப்போ எப்படி இருக்காங்க பாருங்க..!

தமிழ் திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த குழந்தைகள் பலரும் என்று வளர்ந்த நிலையில் சின்னத்திரை சீரியல்களில் திறமையான ஹீரோயின்களாக நடித்து வருகிறார்கள்.

அந்த வகையில் இன்று இந்த பதிவில் குழந்தை நட்சத்திரமாக நடித்து சீரியல்களில் ஹீரோயினியாக நடித்து வரும் சில நடிகைகளை பற்றி விரிவாகவும் விளக்கமாகவும் பார்க்கலாம்.

படையப்பா திரைப்படம்..

ரஜினிகாந்த் நடிப்பில் வெளி வந்த படையப்பா திரைப்படம் தமிழ் திரை உலகில் மாபெரும் வசூலை தந்ததோடு மட்டுமல்லாமல் இந்த படத்தில் நடித்த ரம்யா கிருஷ்ணனின் நீலாம்பரி கேரக்டர் இன்று வரை பேசும் பொருளாக உள்ளது.

இதையும் படிங்க: இவ்ளோ ஓப்பனா சொல்லிட்டீங்களே டா.. இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ..

படையப்பா “சிங்க நடை போட்டு..” பாடலில் தோன்றிய இந்த குழந்தை யாரு..? இப்போ எப்படி இருக்காங்க பாருங்க..!
அந்த வகையில் இந்த படத்தில் இடம் பிடித்த சிங்க நடை பாடலில் வரும் குழந்தை யார் என்று உங்களுக்கு தெரியுமா ? இவர் வேறு யாரும் இல்லை கலர்ஸ் தொலைக்காட்சியில் மிக சிறப்பான முறையில் ஒளிபரப்பாகி வரும் இதயத்தை திருடாதே சீரியலில் நடித்து வரும் ஹிமா பிந்து என்பது பலருக்கும் தெரியாத விஷயமாகும். மீசை வைத்த குழந்தையாக அசத்திய இவர் தற்போது சீரியல்களில் அசத்தி ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்திருப்பவர். இந்த எபிசோடானது 1000 எபிசோடுகள் கடந்த நிலையில் ரசிகர்களின் மத்தியில் பெருத்த ஆதரவை பெற்றதோடு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இவருக்கு இரண்டரை லட்சத்திக்கும் மேற்பட்ட ரசிகர்கள் இருக்கிறார்கள்.

--Advertisement--

காதலுக்கு மரியாதை..

அது போலவே காதலுக்கு மரியாதை திரைப்படமானது தளபதி விஜய்யின் திரையுலக வாழ்க்கையில் ஒரு மாபெரும் திருப்புமுனையை ஏற்படுத்திக் கொடுத்த திரைப்படம் என சொல்லலாம். இந்த திரைப்படத்திற்கு பிறகு தளபதி விஜய் ஒரு நிரந்தரமான இடத்தை தமிழ் திரையுலகில் பிடித்து விட்டார்.

படையப்பா “சிங்க நடை போட்டு..” பாடலில் தோன்றிய இந்த குழந்தை யாரு..? இப்போ எப்படி இருக்காங்க பாருங்க..!
மேலும் அந்த படத்தில் சிறு குழந்தையாக நடித்த நடிகை வேறு யாரும் இல்லை சரண்யா மோகன். இவர் பட்டாம்பூச்சி பறக்குதடா என்ற பாடலில் தனது அற்புத நடிப்புத் திறனை வெளிப்படுத்தி இருப்பது உங்களுக்கு நினைவில் இருக்கலாம்.

சூரியவம்சம்..

இந்த படத்தில் நடித்த சரத்குமாரின் நடிப்பை பற்றி எடுத்துச் சொல்ல வேண்டிய அவசியமே இல்லை. மேலும் தேவயானி இவருடன் இணைந்து மிகச் சிறப்பான முறையில் நடித்ததை அடுத்து தமிழகம் எங்கும் இவர்கள் சினிமாவில் செய்த இட்லி உப்புமா ஃபேமஸ் ஆனது.

மேலும் இந்த படத்தின் ஒரு பாடல் காட்சியில் குழந்தை ஒன்று முள் குத்தி ரத்தம் வழியக்கூடிய காட்சியில் மிக நேர்த்தியான முறையில் நடித்திருக்கும். அந்த குழந்தை நட்சத்திரம் தற்போது சீரியல்களில் நடித்து வரும் சீரியல் நடிகை நிவாசினி திவ்யா என்பது பல பேருக்கும் தெரியாது.

படையப்பா “சிங்க நடை போட்டு..” பாடலில் தோன்றிய இந்த குழந்தை யாரு..? இப்போ எப்படி இருக்காங்க பாருங்க..!
இப்போது 90-களில் பெரிய திரையில் குழந்தை நட்சத்திரமாக நடித்த சரண்யா மோகன், ஹீமா பிந்து மற்றும் நிவாசினி திவ்யா பற்றிய விவரங்கள் புரிந்து இருக்கும். இந்த விவரங்களை தற்போது ரசிகர்கள் அனைவரும் அவர்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்து இந்த செய்தியை வைரல் ஆக்கிவிட்டார்கள்.

சிறு குழந்தையாக இருக்கும் போதே நடிப்பில் பின்னி பெடல் எடுத்த இவர்கள் மூவரும் இன்று வெள்ளித்திரை மற்றும் சின்ன திரையில் நேர்த்தியான முறையில் தனது நடிப்பினை வெளிப்படுத்தி ரசிகர்களின் மத்தியில் தங்களுக்கு என்று ஓர் இடத்தை பிடித்திருக்கிறார்கள்.

இதையும் படிங்க: கட்டாய கல்யாணம்.. 17 வருஷ காதல்.. ஹனிமூனில் போலீஸ்.. அருண் விஜய் மனைவி ஆர்த்தி யாரு தெரியுமா..?