இரண்டு மகள்களை நினைத்து கண்ணீர்.. அழுது புலம்பும் பிரமாண்ட இயக்குனர்.. ரகசியம் உடைத்த நடிகர்..

இரண்டு மகள்களை நினைத்து கண்ணீர்.. அழுது புலம்பும் பிரமாண்ட இயக்குனர்.. ரகசியம் உடைத்த நடிகர்..

தமிழ் சினிமாவில் பல இயக்குநர்கள், நடிகர், நடிகைகள், தயாரிப்பாளர்கள் என பலர் கோடிக்கணக்கில் சம்பாதிக்கின்றனர். வெற்றிப்படங்களை அடிக்கடி தருகின்றனர். மக்கள் மத்தியில் பெரிய அளவில் பெயரும், புகழும் பெறுகின்றனர்.

ஆனால் வெளியுலகில் அவர்கள் பிரமாண்ட மனிதர்களாக, படைப்பாளிகளாக, கலைஞர்களாக, பணக்காரர்களாக தெரிந்தாலும் அவர்களது குடும்ப வாழ்க்கையில் பலவிதமான ஏமாற்றங்களுடன், துன்பங்களுடன், கவலைகளுடன்தான் வாழ்கின்றனர்.

இதற்கு காரணம் அவர்கள் சரியான முறையில் வாழ்க்கையை அமைத்துக்கொண்டாலும் அவர்களுக்கு வாய்க்கும் மனைவி, பிள்ளைகள் சரியாக இருந்தால் மட்டுமே அவர்களால் நிம்மதியாக தொழில் செய்ய முடியும். தங்களது சாதனைகளை தொடர முடியும்.

இயக்குநர் ஷங்கர்

இதுகுறித்து பிரபல நடிகர் மற்றும் பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் கூறியதாவது,

--Advertisement--

இயக்குநர் ஷங்கர், பிரமாண்ட இயக்குநர் என பெயர் எடுத்தவர். அவர் படங்களில் நடிக்க பல நடிகர், நடிகையர் போட்டி போடுகின்றனர்.

இதையும் படியுங்கள்:  புன்னகையரசி சினேகாவின் அழகில் மூழ்கிய நடிகர்கள்.. செம்ம லுக்கில் விருந்து.. பிரபல நடிகர் வெளியிட்ட தகவல்..

அவருக்கு ஐஸ்வர்யா, அதிதி ஷங்கர் என 2 மகள்கள் இருக்கின்றனர். அதில் முதல் மகள் ஐஸ்வர்யாவுக்கு, புதுச்சேரியை சேர்ந்த ரோஹித் என்ற கிரிக்கெட் வீரருக்கு திருமணம் செய்து கொடுத்தார். திருமணம் மிக பிரமாண்டமாக நடத்தப்பட்டது.

தமிழக முதல்வர் ஸ்டாலின், நடிகர் ரஜினிகாந்த் போன்ற பெரிய பிரபலங்கள் எல்லாம் கலந்துக்கொண்டு வாழ்த்தினார்கள். மருமகன் ரோஹித், இயக்குனர் ஷங்கரை விட பலமடங்கு கோடீஸ்வரர். கிரிக்கெட் பயிற்சி அகாடமியும் நடத்தி வருகிறார்.

ஆறே மாதத்தில்…

திருமணமான ஆறே மாதத்தில், மகள் ஐஸ்வர்யா அந்த ஆள் ரோஹித்துடன் வாழ முடியாது என திரும்பி வந்துவிட்டார். காரணம், அவர் நடத்தையில் மிக மோசமானவர். பல பெண்களுடன் தொடர்பில் இருக்கிறார் என்று கூறியிருக்கிறார்.

அதையடுத்து, விவாகரத்துக்கு அப்ளை செய்ய காத்திருக்கின்றனர். மூத்த மகள் வாழ்க்கை இப்படி 6 மாதங்களில் வாழாவெட்டியாக திரும்பி விட்டதால் நொந்து போய் விட்டார் ஷங்கர்.

டாக்டர் தொழில் செய்ய மாட்டேன்

அடுத்து 2வது மகள் அதிதி ஷங்கர். அவரை பல லட்சம் செலவு செய்து டாக்டருக்கு படிக்க வைத்தார். அவர் டாக்டர் தொழில் செய்ய மாட்டேன். சினிமாவில்தான் நடிப்பேன் என அடம்பிடித்தார். ஷங்கர் எவ்வளவோ சொல்லி பார்த்தும் அதிதி கேட்கவில்லை.

சரி, மிகவும் ஆசைப்படுகிறார். ஒரு படத்தில் நடிக்கட்டும் என விருமன் படத்தில் கார்த்தியுடன் நடிக்க அனுமதித்தார். பிறகு பார்த்தால், சிவகார்த்திகேயனுடன் மாவீரன் உட்பட 4 படங்களில் நடிக்க கமிட் ஆக இருக்கிறார் அதிதி ஷங்கர்.

நான்கு படங்களில் ஒப்பந்தம்

அப்பா ஷங்கருக்கு தெரியாமல் நான்கு படங்களில் நடிக்க ஒப்பந்தம் போட்டு, அட்வான்ஸ் பணத்தையும் வாங்கியிருக்கிறார்.

இதையும் படியுங்கள்:  “ஒரு நைட்டுக்கு ஒரு நடிகை.. காமெடி மன்னனின் லீலைகள்…” ரகசிய பக்கங்களை புரட்டிய சக நடிகர்…

ஏற்கனவே ஒரு மகளின் வாழ்க்கை ஆறு மாதங்களோடு முடிந்து போய் விட்டது. மற்றொரு மகளும் சொல் பேச்சை கேட்காமல், சினிமாவில் நடிக்கிறார். இவரது திருமண வாழ்க்கை எப்படி அமையுமோ என்ற கவலையில் தவிக்கிறார் ஷங்கர்.

கண்ணீர் விட்டு…

ஒரு வேளை சாப்பாட்டை கூட நிம்மதியாக அவர் சாப்பிட முடியவில்லை. குடும்பத்தில் உள்ள இந்த பிரச்னைகளால் அவர் கேம் சேஞ்சர், இந்தியன் 2 படப்பிடிப்புகளை கூட சரியாக நடத்த முடியாமல் தாமதிக்கிறார் என்று கூறியிருக்கிறார் பயில்வான் ரங்கநாதன்.

தனது இரண்டு மகள்களை நினைத்து கண்ணீர் விட்டு அழுது புலம்புகிறார் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் என்று அவரது . ரகசியத்தை உடைத்திருக்கிறார் நடிகர் பயில்வான் ரங்கநாதன்.