Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

“மறந்தும் இந்த பொருட்களை யாருக்கும் பரிசு கொடுக்காதீங்க..!” – மீறினா உங்க அதிர்ஷ்டம் கை மாறும்..!!

எந்த ஒரு சுப நிகழ்வுகளிலும் பரிசு பொருட்களை கொடுப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கிறோம். அப்படி பரிசு பொருட்களை நீங்கள் கொடுக்கும்போது கீழ்க்காணும் பரிசு பொருட்களை கொடுத்தால் உங்களிடம் இருக்கக்கூடிய அதிர்ஷ்டம் கை நழுவி அவர்களுக்கு சென்று விடும்.

எனவே அது போன்ற பொருட்களை நீங்கள் கட்டாயம் பரிசு பொருளாக கொடுக்க கூடாது என்பதில் கவனத்தை செலுத்துவது மிகவும் முக்கியமானதாகும்.

 அந்த வகையில் கீழ்காணும் பொருட்களை நீங்கள் பரிசாக கொடுக்க வேண்டாம். அப்படி எந்தெந்த பொருட்களை நீங்கள் பரிசாக கொடுக்க கூடாது என்பதை பற்றி இப்போது இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

பரிசாக கொடுக்க கூடாத பொருட்கள்

யானை பொம்மையை யாருக்கும் பரிசாக கொடுக்கக் கூடாது. அப்படி கொடுத்தாலும் அது ஜோடியாக இருக்கக்கூடிய இரண்டு யானைகளை தான் கொடுக்க வேண்டும். ஒற்றை யானையை பரிசளிப்பதன் மூலம் உங்களது அஷ்ட ஐஸ்வரியங்கள் அவர்களுக்குச் சென்று விடும்.

 உங்களுடைய கைக்குட்டையை மற்றவர்கள் பயன்படுத்த உடனே கொடுத்து விடாதீர்கள். அப்படி கொடுத்தீர்கள் என்றால் உங்கள் கர்மா முழுவதும் அவர்களுக்கு சென்றுவிடும். எனவே கைகுட்டையை நீங்கள் அளிப்பது மிகவும் தவறான ஒன்று என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.மேலும் இது உங்கள் உறவை கூட துண்டித்து விடும் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

--Advertisement--

கடிகாரத்தை யாருக்கும் பரிசாக கொடுக்காதீர்கள். அப்படி கொடுக்கும்போது உங்களுடைய ஆரோக்கியத்தை மட்டுமல்லாமல் செல்வ செழிப்பையும் அவர்களுக்கு தாரை பார்த்து கொடுப்பது போல ஆகிவிடும்.

தொழில் செய்வது போல இருக்கக் கூடிய பொருட்களை  பரிசாக அளிப்பதின் மூலம் உங்கள் தொழில் ஸ்தானம் பாதிப்படைவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதால் அதுபோன்ற பொருட்களையும் நீங்கள் வாங்கிக் கொடுக்கக் கூடாது.

 மகாலட்சுமியின் படம் விளக்கு போன்றவற்றை வாங்கிக் கொடுப்பதாலும் உங்கள் வீட்டு செல்வம் அவர்களுக்கு கைமாறும் என்ற நிலை இருப்பதால் அது போன்ற பொருட்களை நீங்கள் வாங்கி கொடுப்பதை தவிர்த்து விடுங்கள்.

Continue Reading
 

More in

Trending Now

To Top