பலரும் அறியாத நடிகை ரம்பா குடும்பத்தின் ரகசியங்கள்..!

90ஸ் கிட்ஸ்களின் ஃபேவரைட் ஹீரோயினாக இடம் பிடித்த நடிகை ரம்பா தமிழில் 90ஸ் காலகட்டத்தில் பல்வேறு வெற்றி படங்களில் நடித்திருக்கிறார்.

குறிப்பாக இவர் 1993 ஆம் ஆண்டு வெளிவந்த உழவன் திரைப்படத்தில் நடித்து அறிமுகமாகி பின்னர் சிவசக்தி , செங்கோட்டை , அருணாச்சலம், ஜானகிராமன் , காதலா காதலா, காதலர் தினம் உள்ளிட்ட படங்களில் நடித்தார்.

நடிகை ரம்பாவின் திரைப்படங்கள்:

மேலும் பூமகள் வந்தால், மின்சார கண்ணா, சுயம்வரம் உள்ளிட்ட பல்வேறு வெற்றி திரைப்படங்களில் நடித்து இங்கு முன்னணி நடிகையாக இடத்தைப் பிடித்தார்.

குறிப்பாக ரம்பாவின் அழகுக்காக அவரிடம் சொக்கி கிடந்த கோடிக்கணக்கான ரசிகர்கள் அவரின் தொடையழகை அவ்வளவு ரசித்தார்கள்.

---- Advertisement ----

இன்றளவும் ரம்பாவின் தொடையழகுக்கு ஈடாக யாருமே கிடையாது என வர்ணிக்கும் அளவுக்கு அவர் அழகிய தேவதையாக ரசிகர்களின் மனம் கவர்ந்த தேவதையாக இருந்து வந்தார்.

இந்நிலையில் நடிகை ரம்பா பற்றிய அறியாத பல விஷயங்கள் மற்றும் அவரின் குடும்ப ரகசியங்கள் தற்போது வீடியோவாக இணையத்தில் வெளியாகி அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது.

ரம்பாவின் பிறப்பு:

அதை பற்றி இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம். தமிழ் சினிமாவில் கொடிகட்டி பறந்தவரான நடிகை ரம்பா ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் பிறந்து வளர்ந்தார்.
ரம்பாவின் குடும்பம்:

தாய் மொழியை தெலுங்கு மொழியாக கொண்ட நடிகை ரம்பாவின் தந்தை ஈஸ்வரராவ், உஷாராணி ராவ் தம்பதியருக்கு மகளாக பிறந்தார்.

ரம்பாவுக்கு ஒரு சகோதரரும் இருக்கிறார். தன்னுடைய 16 ஆவது வயதிலேயே மலையாள படத்தில் நடிகையாக அறிமுகமானார் ரம்பா.

அழகு உயரம் தோற்றம் சினிமாவிற்கு ஏத்த முக ஜாடை என ஒட்டுமொத்தமாக மிகச் சிறந்த நடிகையாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ஆரம்பத்திலேயே விஜயலட்சுமி என்ற பெயரை இயற்பெயராகக் கொண்ட ரம்பா சினிமாவுக்காக தன்னுடைய பெயரை ரம்பாவாக மாற்றிக் கொண்டார்.

தமிழை தாண்டி தெலுங்கு,மலையாளம், கன்னடம், போஜ்புரி உள்ளிட்ட பல்வேறு மொழி திரைப்படங்களில் இவர் நடித்திருக்கிறார்.

தொழிலதிபருடன் திருமணம்:

கடந்த 2019 இலங்கை தமிழரான தொழிலதிபர் இந்திரன் பத்மநாதன் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

பிறகு கனடா நாட்டில் செட்டில் ஆன இவர்களுக்கு மொத்தம் மூன்று குழந்தைகள் இருக்கிறார்கள். இதனிடையே கணவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு சில ஆண்டுகள் அவருடன் சேர்ந்து வாழாமல் இருந்து வந்தார்.

பின்னர் மீண்டும் அவருடன் சேர்ந்து வாழ்ந்து மகனை பெற்றார். திரைப்பட வாய்ப்புகள் கிடைக்காமல் போன பிறகு மார்க்கெட் குறைந்த பிறகு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடுவராக பங்கேற்று வந்தார்.

கணவரை பிரிந்து தனியாக வாழ்ந்து வந்த போது இரண்டு பெண் குழந்தைகளை வைத்துக்கொண்டு தன்னால் தனிமையாக குடும்பம் நடத்த முடியவில்லை.

பிரிந்த கணவருடன் மீண்டும் ரம்பா:

எனவே கணவருடன் சேர்த்து வைக்கக் கோரி வழக்கு தொடர்ந்திருந்தார் நடிகை ரம்பா. அதன் பின்னர் உயர் நீதிமன்ற நீதிபதிகள் அவரது கணவர் பத்மநாதனை சமாதானப்படுத்தி மீண்டும் ரம்பாவுடன் சேர்ந்து வாழ வைத்தனர்.

கணவருடன் சேர்ந்த பின்னர் டிவி நிகழ்ச்சிகளில் இருந்து விடைபெற்ற நடிகை ரம்பா கனடாவில் தன் கணவரோடு சென்று அங்கேயே வாழ்ந்து வர ஆரம்பித்தார்.

அதன்பின்னர் அவருக்கு ஒரு மகனும் பிறந்தார். தற்போது 47 வயதாகும் நடிகை ரம்பா தனது குடும்பம் மற்றும் குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

---- Advertisement ----