பாருடா..! கோலி சோடா படத்தில் நடிச்ச சீதாவா இது..? பளபளன்னு மாறிட்டாங்களே.. ஆச்சரியத்தில் ரசிகர்கள்..

பாருடா..! கோலி சோடா படத்தில் நடிச்ச சீதாவா இது..? பளபளன்னு மாறிட்டாங்களே.. ஆச்சரியத்தில் ரசிகர்கள்..

2014 ஆம் ஆண்டு வெளி வந்த கோலி சோடா திரைப்படத்தில் சோடாபுட்டி போட்டு நடித்த நடிகை சீதாவை ஞாபகத்தில் இருக்கிறதா?. இந்த திரைப்படம் சேரன் தயாரிப்பில் விஜய் மில்டன் இயக்கத்தில் வெளி வந்தது.

இந்த படத்தில் கிஷோர், ஸ்ரீராம், பாண்டி, இமான் அண்ணாச்சி, சீனிவாசன் போன்றவர்கள் நடித்திருந்தார்கள். மேலும் பசங்க திரைப்படத்தில் நடித்த நான்கு சிறுவர்கள் தான் இந்த திரைப்படத்தில் கதாநாயகராக நடித்தது குறிப்பிடத்தக்கது.

கோலி சோடா..

அந்தப் படத்தில் சோடா புட்டி கண்ணாடி அணிந்து அனைவரையும் கவர்ந்து தனது நடிப்பால் உயர்ந்த நடிகை சீதாவின் லேட்டஸ்ட் போட்டோஸ் தற்போது இணையத்தில் வெளி வந்து வைரலாக மாறி வருகிறது.


பொதுவாகவே சினிமாவில் நடிக்க வேண்டும் என்றால் அழகாக இருக்க வேண்டும். அப்போது தான் வாய்ப்புகள் கிடைக்கும். மக்கள் விரும்புவார்கள் என்றெல்லாம் பல பேச்சுக்கள் இன்று வரை உள்ளது.

அவற்றை மறுக்கக் கூடிய வகையில் ஓரளவு அழகு கொஞ்சம் அதிர்ஷ்டம் இருந்தால் சினிமாவில் ஜொலிக்கலாம் என்பதை உறுதி செய்யக் கூடிய விதத்தில் நடிகை சீதா இந்தப் படத்தில் நடித்திருந்தார்.

---- Advertisement ----

அது மட்டுமல்லாமல் இவர் ரோட்டில் நடந்து கொண்டு போய் வரும் போது சினிமா வாய்ப்பை பெற்றவர் என்பது மிக முக்கியமாக நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.

இதையும் படிங்க: நண்பர்களே என்னிடம் படுக்கையில் அதை செய்யும் படி கேட்டார்கள்.. ரகசியம் உடைத்த நடிகை கிரண்..

சோடா புட்டி சீதா..

படத்தின் இயக்குனர் விஜய் மில்டன் சீதாவின் கேரக்டருக்காக பல ஆடிஷன்கள் நடத்தையும் அவருக்கு திருப்தி ஏற்படவில்லை. எனினும் தற்செயலாக நடுரோட்டில் நடந்து போன சீதாவை பார்த்ததும் இந்த கேரக்டருக்கு இந்த பெண் தான் செட்டாக என்று தோன்றியுள்ளது.


இதனை அடுத்து இவரது தோழி மூலம் அவரை அணுகி நடிக்க சம்மதம் வாங்கி நடிக்க வைத்திருக்கிறார். அதனால் இந்த படம் மூலம் திரையுலகுக்கு அதிகமான இவருக்கு ஒரு நல்ல அடையாளம் கிடைத்தது.

லேட்டஸ்ட் போட்டோஸ்..

இதனை அடுத்து விஜய் மில்டன் நடிகர் விக்ரம் சமந்தாவை வைத்து இயக்கிய பத்து எண்றதுக்குள்ள என்ற படமும், பிரபுதேவா நிக்கி கல்ராணி நடித்த சார்லி சாப்ளின் போன்ற சில படங்களில் மட்டுமே நடிகை சீதா நடித்திருந்தார். மேலும் இவர் ஒரு படத்தில் ஹீரோயினியாக நடித்த நிலையில் அந்த படம் வெளிவரவில்லை.

நடிகை சீதா தற்போது சமூக வலைதள பக்கங்களில் வித விதமான ரீல்ஸ் மற்றும் புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார். குறிப்பாக கோலி சோடா படத்தில் சோடா புட்டியாக பார்த்த சீதாவா? இது என்று கேட்கக் கூடிய வகையில் அவரது உருவ மாற்றம் பலரையும் ஆச்சிரியத்தில் தள்ளியுள்ளது.


தற்போது கொடுக்கப்பட்டிருக்கும் புகைப்படத்தை பார்த்தாலே தெரியும். இவர் ஆளை மயக்கும் அழகு தேவதையாக ஜொலிக்கிறார். சோடாபுட்டியோடு பார்த்த அந்த பெண்ணா இது என்று கேட்கக் கூடிய வகையில் படு லட்சணமாக காட்சி அளித்திருப்பதை பார்த்து ரசிகர்கள் வாய் அடைத்து விட்டார்கள்.

இதையும் படிங்க: அது எடுப்பா தெரியனும்.. அஞ்சே நிமிஷத்துல ரெடி.. வரம்பு மீறும் நடிகைகள்.. கொடும காலம்டா சாமி…

இதனை அடுத்து ரசிகர்கள் அனைவரும் கோலி சோடாவில் நடித்த சீதாவா? இது பளபளன்னு மாறிட்டாங்களே என்று ஆச்சிரியத்தில் அவரை வர்ணித்து தள்ளி வருகிறார்கள். மேலும் போட்டோக்களை நண்பர்களுக்கு ஷேர் செய்து விரைவில் புதிய பட வாய்ப்பு கட்டாயம் கிடைக்கும் என்றும் கூறியிருக்கிறார்கள்.

---- Advertisement ----