தந்தி TVயில் இருந்து விலக காரணம் இந்த சினிமா பிரபலம் தான்..! ரகசியம் உடைத்த ரங்கராஜ் பாண்டே..!

தமிழக மக்கள் மத்தியில் நன்கு பரிச்சயமானவர் ரங்கராஜ் பாண்டே. சென்னையில் முன்னணி நாளிதழ் ஒன்றில் பல ஆண்டுளாக முதன்மை செய்தியாளராக பணிபுரிந்த அவர் அங்கிருந்து விலகி தந்தி டிவியில் தலைமை செய்தியாளராக பணிசெய்தார்.

நேருக்கு நேர் என்ற நிகழ்ச்சியில் அரசியல் கட்சி தலைவர்கள், சினிமா நடிகர், நடிகைகள், முக்கிய பிரபலங்கள் என பலரையும் நேரடியாக பேட்டி எடுத்தார். எந்தவிதமான தயக்கமும், பயமும் இல்லாமல் யாராக அவர்கள் மீதான குற்றச்சாட்டுகளை, புகார்களை நேரடியா முன்வைத்தார்.

அவரது பேட்டிக்கு வரும்போதே பலரும் அவரை எப்படி எதிர்கொள்வது என்ற ஒருவித பயத்துடன்தான் வரவேண்டி இருந்தது. அந்தளவுக்கு அவரது அதிரடி கேள்விகளும், அதில் நியாயமான குற்றச்சாட்டுகளும் இருந்தன. யாரிடமும் எந்தவிதமான பாரபட்சமும் காட்டாமல், மக்கள் மனங்களில் அவர் மீதிருந்த அதே குற்றச்சாட்டுகளை நேரடியாக கேட்டு பதில் பெற்றுத் தந்தார்.

அதனால் அவரது அந்த நிகழ்ச்சிக்கு நாளுக்கு நாள் வரவேற்பு அதிகரித்தது. இது மக்கள் மத்தியில் பிரபலமானதால், அந்த நிகழ்ச்சிக்கு வர பலரும் விரும்பினர். அதே நேரத்தில் பலவித குற்றச்சாட்டுகளுக்கு ஆளாக நேரிடுமே என்ற பயமும் அவர்களுக்குள் இருந்தது. எனினும் வந்தார்கள். அவர்களை சாட்டையடி கேள்விகளால் திணறடித்தவர் ரங்கராஜ் பாண்டே.

ஆனால் ஒரு கட்டத்தில் அவர் அந்த நிகழ்ச்சியில் இருந்தும் தந்தி டிவியில் தந்த பொறுப்பு, பணி ஆகியவற்றில் இருந்து மொத்தமாக விலகினார். தந்தி டிவியில் இருந்து விலகுவதற்கு முக்கிய காரணமாக இருந்தது பிரபல திரைப்பட இயக்குனர் எச் வினோத் தான் இப்போது கூறியிருக்கிறார் ரங்கராஜ் பாண்டே. நானும் பல நாட்கள் என்னுடைய அடுத்த கட்டம் என்ன என்று சிந்தித்து கொண்டு இருக்கிறேன்.

என்னுடைய அடுத்த கட்டத்திற்கு நான் செல்வதற்கு தடையாக இருக்கும் இந்த பணியை விட்டு எப்படி நீங்குவது. எனக்கு அடையாளம் கொடுத்த இந்த பணியை விட்டு எப்படி நீங்குவது.. என்ற பல்வேறு மன வேதனைகளுடன் தான் தந்தி டிவியில் இருந்து விலகினேன் என மனம்திறந்து வெளிப்படையாக கூறியிருக்கிறார் ரங்கராஜ் பாண்டே.

   

--Advertisement--