பிரிவுக்கு இது தாங்க காரணம்.. ஜீவி பிரகாஷ் பேச்சு.. ட்ரெண்டாகும் வீடியோ..!

சினிமாத்துறையை பொறுத்த வரை காதல், கல்யாணம் இதனை அடுத்து விவாகரத்து என்பதெல்லாம் ஒரு சட்டையை மாற்றி போடக்கூடிய விஷயமாக உள்ளது. அந்த வகையில் தற்போது ஜிவி பிரகாஷ் தான் காதலித்து மனைவியாக்கி கொண்ட சைந்தவியை விவாகரத்து செய்ய உள்ளதாக கூறிய விஷயம் ரசிகர்கள் மத்தியில் உச்சகட்ட அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ் திரை உலகில் மட்டுமல்லாமல் தென்னிந்திய மொழிகள் பலவற்றுக்கும் இசை அமைத்த இசை அமைப்பாளரான ஜிவி பிரகாஷ் ஆரம்ப நாட்களில் இசையோடு பயணித்த இவர் இதனை அடுத்து கதாநாயகனாக பல படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர்.

இதுதான் எங்க பிரிவுக்கு காரணம்..

ஜிவி பிரகாஷ் அவரது காதல் மனைவி சைந்தவியும் பள்ளியில் படிக்கும் போதே ஒருவரை ஒருவர் காதலித்து வந்த விஷயம் பற்றி பல நேரங்களில் கூறி இருக்கக்கூடிய இவர்கள் 2013-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்கள்.

11 ஆண்டுகளாக சமூகமாக சென்று கொண்டிருந்த இவர்களது மன வாழ்க்கைக்கு சாட்சியாக அன்வி என்ற ஒரு மகளும் இருக்கிறார். இந்நிலையில் இவர்கள் இருவரும் தற்போது விவாகரத்து செய்வதாக அறிவித்திருப்பது ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாகி விட்டது.

---- Advertisement ----

சூரரைப் போற்று படத்திற்காக தேசிய விருது பெற்ற ஜிவி பிரகாஷ் கடைசியாக கள்வன், டியர் போன்ற படங்களில் நடித்திருந்த போதும் இந்த படங்கள் விமர்சன ரீதியாகவும் சரி, வணிக ரீதியாகவும் இவருக்கு வெற்றியை தரவில்லை.

இந்நிலையில் எப்படியும் ஒரு வெற்றியை கொடுத்து விட வேண்டும் என்பதில் தீவிரமாக கவனத்தை செலுத்தி வரும் இவர் திருமணம் செய்து கொண்ட சைந்தவி இவரை விட இரண்டு வருடங்கள் இளையவர். இவர்கள் காதலுக்கு இசை தான் ஒரு மிகப்பெரிய அடித்தளமாக இருந்தது.

ஜிவி பிரகாஷின் பேச்சு..

ஜிவி பிரகாஷின் மனைவியும் சினிமாவில் பின்னணி பாடகியாக இருப்பதோடு மட்டுமல்லாமல் ஏராளமான ஹிட் பாடல்களையும் பாடி இருக்கிறார். இதனை அடுத்து நீண்ட நாட்கள் குழந்தை இல்லாமல் இருந்த இவர்களுக்கு 2020-ஆம் ஆண்டு தான் பெண் குழந்தை பிறந்தது.

இந்நிலையில் ஜிவி பிரகாஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் தங்களுக்கு திருமணம் ஆகி 11 ஆண்டுகள் முடிந்து இருக்கக்கூடிய நிலையில் நாங்கள் இருவரும் பிரிந்து வாழ முடிவு செய்திருக்கிறோம்.

எனவே எங்களுடைய பிரைவசிக்கு மதிப்பளிக்கக்கூடிய வகையில் ஊடக நண்பர்கள் மற்றும் ரசிகர்கள் நடந்து கொள்ள வேண்டும். இது மாதிரியான கடினமான நேரத்தில் அனைவரது ஆதரவும் எங்களுக்கு ஆறுதல் தரும் என சொல்லி இருந்தார்.

அது போலவே அவரது மனைவியும் சமூக வலைதள பக்கத்தில் 11 வருடங்களுக்குப் பிறகு எங்கள் உறவில் இருந்து வெளியேறுவதற்கான காரணம் எங்கள் மன அமைதிக்காகவும், முன்னேற்றத்திற்காகவும் இந்த முடிவை இருவரும் எடுத்து இருக்கிறோம். இது சிறந்த முடிவாக இருக்கும் என பதிவிட்டிருந்தார்.

ட்ரெண்டிங் ஆன வீடியோ..

இந்த நிலையில் ஜிவி பிரகாஷ் பேசிய பழைய வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டிங் ஆகிவிட்டது. அந்த வீடியோவில் அவர் காதல் பிரேக் அப் நடப்பதற்கு என்ன காரணம் தெரியுமா? என்பது குறித்து கூறியிருந்தார்.

இதில் இரண்டு பேர் வாழ்க்கையில் வேறொருவர் வந்து அட்வைஸ் சொல்வது மற்றும் அந்த நபர்களிடம் ஐடியா கேட்பதை முதலில் நிறுத்தினால் காதல் பிரேக் அப் ஆகாது என சொல்லி இருக்கிறார்.

ஏனென்றால் அத்தகைய நபர்கள் நம்மில் இருக்கும் தவறுகளை திணிக்க முயற்சி செய்வார்கள். அப்போது என்ன ஆகும் இல்லாத பிரச்சனை எல்லாம் உருவாகும்.

இதனால் தங்களது வாழ்க்கையை சம்பந்தப்பட்ட இரண்டு பேர் மட்டும் முடிவு செய்தால் பிரேக் அப் நடக்கவே நடக்காது என்று சொன்ன விஷயம் தற்போது ட்ரெண்டிங் ஆகி உள்ளது.

---- Advertisement ----