வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைத்தால்.. இதை பண்ணுவேன்.. தேவிப்பிரியா ஓப்பன் டாக்..!

சினிமா துறையை பொறுத்தவரை பெண்களுக்கு அது சாபக்கேடான ஒரு துறை என சொல்லும் அளவுக்கு அவர்கள் திரைப்படங்களில் நடிக்க வேண்டும் என ஆசைப்பட்டாலே அட்ஜஸ்ட்மென்ட் செய்து கொள்ள வேண்டும் என்ற கட்டாயத்திற்கு தள்ளப்படுகிறார்கள்.

பொதுவாக இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள், நடிகர்கள் ,கேமராமே ன் உள்ளிட்ட பல பேருடன் பெண்கள் அட்ஜஸ்ட்மென்ட் செய்தால் மட்டுமே திறமைப்பட வாய்ப்பை பெற முடியும். வாய்ப்பு கையில் கிடைத்தாலும் அட்ஜஸ்ட்மென்ட் க்கு நோ சொன்னால் அந்த பட வாய்ப்பு அப்படியே பறிபோகிவிடும் .

சினிமாவில் அட்ஜெஸ்ட்மென்ட் டார்ச்சர்:

எனவே அந்த அளவுக்கு சினிமா துறையில் பெண்களுக்கு அட்ஜஸ்ட்மென்ட் கறார் காட்டுகிறார்கள் ஆண்கள்.

குறிப்பாக ஆண்கள் கொலோசித்து வரும் துறையாக கொஞ்சம் கொஞ்சமாக சினிமா துறை மாறி வந்த காலகட்டத்தில் தற்போது பெண்களும் அதை ஆட்டிப்படைக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.

---- Advertisement ----

ஆம், இயக்குனர்களாகவும் , பட தயாரிப்பாளர்களாகவும், கேமராவுமன்களாகவும் பெண்கள் தற்போது அந்த துறையை தேர்ந்தெடுத்து வருவதால் கொஞ்சம் கொஞ்சமாக அந்த துறையில் ஆணாதிக்கம் குறைந்து வருகிறது.

ஆனால், நடிகைகளை பொறுத்தவரை அவர்களுக்கு இருக்கும் ஒரே பிரச்சனை ஆண்டாண்டு காலமாக இருந்து வரக்கூடியதாக பார்க்கப்படுவது அட்ஜஸ்ட்மென்ட் தொல்லை மட்டும்தான்.

வாரிசு நடிகைகளுக்கும் அட்ஜெஸ்ட்மென்ட்:

ஹீரோயின் ஆக இருந்தாலும், சாதாரண நடிகையாக இருந்தாலும் , சைட் ஆக்ட்ரஸ் ஆக வாய்ப்பு கேட்டாலும் எதுவாக இருந்தாலும் அதற்கு ஏற்றார் போல அட்ஜஸ்ட்மென்ட் டார்ச்சர் நடந்து கொண்டுதான் இருக்கிறது.

இது புதுமுக நடிகைகளுக்கு மட்டும் தான் நடக்கிறதா? சினிமாவில் சாதிக்க வேண்டும் என திறமை இருந்து பின்பலம் இல்லாத பெண்களுக்கு மட்டும் தான் நடக்கிறதா? என்று கேட்பீர்களானால் அது தான் இல்லை .

வாரிசு நடிகைகளான வரலட்சுமி சரத்குமார் முதல் லேடி சூப்பர் ஸ்டார் ஆன நயன்தாரா வரை இந்த அட்ஜஸ்ட்மென்ட் கொடுமைகள் ஆரம்பத்தில் இருந்தே எதிர்கொண்டு தான் வருகிறார்கள்.

அவர்கள் அதனை கொஞ்சம் கொஞ்சமாக நிராகரித்து ஒவ்வொரு படத்திலும் தனது திறமையை வெளிக்காட்டி இந்த அளவுக்கு நட்சத்திர நடிகையாக உயர்ந்து இருக்கிறார்கள்.

சீரியல் நடிகை தேவி பிரியா:

இதனை அவர்களே பல பேட்டிகளில் கூட வெளிப்படையாக தெரிவித்திருக்கிறார்கள் அந்த வகையில் தற்போது சீரியல் நடிகையான பிரபலமான நடிகையாக இருந்து வருபவர்தான் தேவி பிரியா.

இவர் தனக்கு நடந்த அட்ஜஸ்ட்மெண்ட் குறித்து பொதுவெளியில் தற்போது வெளிப்படையாக பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார்.

ஒருமுறை பெங்களூரில் இருந்து மிகவும் டீசன்டான ஒரு நபரிடம் இருந்து எனக்கு ஒரு போன் கால் வந்தது அவர் ஆங்கிலத்தில் மிகவும் டீசண்டாக என்னிடம் பேசினார்.

பெங்களூருக்கு படுக்க கூப்பிட்ட மர்ம நபர்:

பெங்களூரில் நிகழ்ச்சி ஒன்று நடக்கவிருக்கிறது அதில் நீங்கள் பங்கேற்க முடியுமா? என கேட்டார்.
நான் நிகழ்ச்சி நடக்கும் நாள் அன்று வருகிறேன் என கூறினேன்.

அதற்கு அவர் முன்னதாக நீங்கள் என்னுடன் இரவு விருந்துக்கு வர வேண்டும் எனக் கூற உடனடியாக அவர் எந்த நோக்கத்தில் கேட்டு கேட்கிறார் என்பதை புரிந்து கொண்ட நான் முடியாது எனக்கூறி மறுத்து விட்டேன்.

இதுபோன்று பல பெண்களுக்கு நடந்திருக்கிறது. சினிமாவில் சின்ன சின்ன ரோல்களில் நடிக்க கூட பல பேருடன் அட்ஜெஸ்மென்ட் செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது .

எல்லா ஆடிஷனும் முடிஞ்ச பிறகும் அட்ஜஸ்ட்மெண்ட் என்பது ஒரு கடைசி ஆப்ஷன் ஆகவே திரைப்படத்துறையில் இருந்து வருகிறது.

அடிக்ஷன் முடிஞ்சதும் அட்ஜெஸ்ட்மென்ட்:

அதை கிளிக் செய்தால் தான் சினிமாவில் ஹீரோயின் ஆக முடியும் தாங்கள் நினைத்த இடத்திற்கு இடத்திற்கு போய் சேர முடியும்.

ஒரு படத்தில் அறிமுகமாகி விட்டு அடுத்த படத்தை தேடும் நடிகைகளுக்கு இது அதிகமாகவே நடந்து வருகிறது.

இது போன்ற தொல்லையால் திரைப்படத்துறையில் பெண்கள் நடிக்கவே குடும்பத்தார் அனுப்புவதில்லை.

பலபேர் திறமை இருந்தும் கூட இந்த அட்ஜஸ்ட்மென்ட் தொல்லையால் இந்த துறையே வேண்டாம் என தங்களது லட்சியத்தை விட்டு ஓடியவர்களும் இருக்கிறார்கள் என தேவி பிரியா அந்த பேட்டியில் கூறினார்.

---- Advertisement ----