கடன் தொல்லை நீங்க..! – இதை பண்ணுங்க..! – Kadan Thollai Theera Pariharam Tamil..!

கடன் தொல்லை நீங்க : கடன் கடன் கடன்.. நம்முடைய வாழ்கையே கடனில் தான் போய்க்கொண்டிருகின்றது. இன்னும் சிலர் இந்த உலகத்தின் பணக்காரன் யார் என்று கேட்டால் அது கடன் இல்லாதவன் தான் என்று கூறுவதை கேட்டிருப்பீர்கள்.

வாழ்க்கையில், நம்முடைய தேவைகள் அதிகரிக்கும் போது, எதிர்பாராத மருத்துவ செலவு, குடும்ப சுப நிகழ்சிகள் என பல நேரங்களில் பண சிக்கல்கள் ஏற்படுவது வாடிக்கை.

அப்படி பல சிக்கல்கள் ஏற்படும் போது அதை எளிதாக சமாளிக்க கடன் பெறுவதை அனைவரும் வழக்கமாக கொண்டிருக்கிறோம். அதன் பிறகு, வாங்கிய கடனுக்கு வட்டி கட்டிக்கொண்டே இருக்க வேண்டும். இல்லையென்றால், அந்த கடனை அடைக்க வேண்டும்.

கடனை அடைக்க முடியவில்லை. வட்டி, வட்டி கட்டவில்லை என்றால் அதற்கொரு வட்டி என கட்டிக்கொண்டு இருப்பதால், குடும்ப பொருளாதாரம் சீர்குலைவதோடு குடும்பத்தில் மன நிம்மதி இல்லாத நிலை, மனம் ஒரு நிலையில் இருக்காத நிலை உருவாகும். இப்படி கடன் பிரச்சனையால் தவிக்கும் போது போது என்ன செய்வது என்று தெரியாமல் பலரும் இருப்பார்கள். இன்னும் சிலர் வாழ்க்கையை வெறுக்க ஆரம்பித்து விடுவார்கள்.

கடன் தொல்லை நீங்க

நீங்கள் கடன் பிரச்சனையில் இருக்கிறீர்களா..? நம்புங்கள் இந்த பதிவை படித்த பிறகு உங்கள் கடன் பிரச்சனை இருந்த இடம் தெரியாமல் போவதற்க்கான வழியை பெறுவீர்கள். உங்கள் வாழ்க்கை சிறப்பாக மாறும் என்ற நம்பிக்கையை பெறுவீர்கள்.

--Advertisement--

என்னத்த சொல்லிட போறீங்க..? என்ன சொன்னாலும், என்னுடைய கடனை அடைக்கும் அளவுக்கு என்னிடம் வருமானதிற்க்கான வாய்ப்பே இல்லையே.. பிறகு எப்படி என்னால் கடனை அடைக்க முடியும் என்று நீங்கள் கேட்கலாம்.

அதற்கான பதிலை தான் இந்த வீடியோ மூலம் உங்களுக்கு சொல்ல போகிறோம். நீங்கள், உங்கள் கடனை எளிதில் அடைக்க உங்கள் வீட்டில் இருக்கும், பணம் சம்பாதிக்க கூடிய நபர்கள் அது ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி, அடுத்து சொல்லக்கூடிய இந்த எளிமையான விஷயத்தை செய்தாலே போதுமானது.

கடன் தொல்லை நீங்க பரிகாரம்

கடன் தொல்லையால் அவதிபடக்கூடிய நீங்கள் உங்கள் வீட்டில் பணம் சம்பாதிக்கும் ஆட்களிடம் இந்த பரிகாரத்தை செய்யச் சொல்லுங்கள்.இந்த பரிகாரத்தை செய்வது மிகவும் எளிதான ஒன்று. இந்த பரிகாரத்திற்கு தேவையான பொருட்கள் கடுகு எண்ணெய், பஞ்சு திரி, அகல் விளக்கு இந்த மூன்று மட்டும் தான்.

அருகில் இருக்கக்கூடிய கோயில்கள், அது எந்த கோயிலாக இருந்தாலும் சரி, எந்த தெய்வமாக இருந்தாலும் சரி, அந்த கோயிலுக்குச் சென்று நீங்கள் இந்த விளக்கை ஏற்ற வேண்டும்.முதலில் விளக்கில் எண்ணெய் ஊற்றி அதன் பிறகு பஞ்சு திரியை அதில் இட்டு தீபம் ஏற்ற வேண்டும்.

அப்படி தீபத்தை ஏற்றுவதற்கு முன்பு திரியின் மேல்பகுதி ஒரு கிராம்பின் அளவுக்கு மேல் நோக்கி இருப்பதை உறுதி படுத்துங்கள். இந்த விளக்கை ஏற்றி இறைவனை மனதார வேண்டிக் கொள்ளுங்கள்.அதன் பிறகு, ஐந்து நிமிடம் சன்னதியில் அமர்ந்து உங்கள் பிரார்த்தனையை கடவுள் முன் வைத்துவிட்டு அதன் பிறகு கோயிலில் மூலவர் விக்ரகம் உள்ள அறையை அல்லது கோயில் பிரகாரத்தை மூன்று முறை சுற்றி வாருங்கள்.

இதுபோல இந்த விளக்கை தொடர்ந்து 48 நாட்கள் ஆண்கள் ஏற்றி வர வீட்டில் ஏற்பட்டிருக்கும் கடன் சுமை குறையும் மட்டுமில்லாமல் வருமானத்திற்கான வழிகளும் அதிகரிக்கும் என்று சாஸ்திரங்களில் கூறப்பட்டுள்ளது.வீட்டில் இந்த தீபத்தை ஏற்றலாமா..? என்ற கேள்விக்கு வீட்டில் ஏற்றுவதை விட கோயிலுக்கு சென்று ஏற்றுவதன் மூலம் தான் முழு பயனையும் நீங்கள் பெற முடியும் என்பதை உணர்ந்து அருகில் இருக்கும் கோயிலுக்குச் சென்று நீங்கள் விளக்கை ஏற்றுங்கள்.

இந்த பரிகாரத்தை ஒரு மண்டலம் தொடர்ந்து நீங்கள் செய்து கொண்டிருக்கும் போது மறுபக்கம் இன்னும் சில விஷயங்களை நீங்கள் கவனத்தில் கொண்டால் 100% உங்கள் கடன் பிரச்சனை தீர்ந்து உங்கள் வீட்டில் செல்வம் தங்கும்.எது என்ன என்று பார்ப்போம் வாருங்கள்.

கடன் அடைக்க உகந்த நாள்

முதல் விஷயம், உங்கள் கடன் எத்தனை லட்சமாக இருந்தாலும், அல்லது எத்தனை கோடியாக இருந்தாலும் சரி குளிகை நேரத்தில் அந்த கடனுடைய அசலில், மீண்டும் கேளுங்கள்.. அந்த கடனுடைய அசல் தொகையில் சிறு பகுதியையையாவது திரும்ப செலுத்துங்கள்.

உங்கள் வீட்டில் பணம் வைக்க கூடிய இடத்தில் மஞ்சள் நிற துணி, முடிந்தால் பட்டு துணியை விரித்து அதன் மீது பணத்தை வைக்க பழகிக்கொள்ளுங்கள்.பணம் வைக்க கூடிய இடத்தில் நாணயங்கள், தங்கம், வெள்ளி இந்த இரண்டை தவிர வேறு எந்த பொருளையும் வைக்காதீர்கள். சிலர் பீரோ லாக்கரில் பணத்தை வைத்து விட்டு அதனுடன் கணக்கு சீட்டுகள், கணக்கு நோட்டுகள், மணி பர்ஸ், பேனா, பென்சில், அது இது என நிறைய பொருட்களை போட்டு வைத்திருப்பார்கள். அப்படி செய்வது கூடாது.

பணம் இருக்கும் இடம் சுத்தமாகவும், வாசனையுடனும் இருப்பதை உறுதி படுத்துங்கள்.உங்கள் பீரோ அல்லது பணம் வைக்க கூடிய பெட்டி எதுவாக இருந்தாலும் அது உங்கள் வீட்டின் தென்மேற்கு மூலையில் இருப்பதை உறுதி படுத்துங்கள். உங்கள் பீரோவின் பின் புறம் தெற்கு திசையை நோக்கியும், பீரோவின் கதவி வடக்கு திசையை நோக்கியும் இருப்பதை உறுதி படுத்துங்கள்.

வாரம் ஒரு முறை உங்கள் வீட்டு சமயலறையில் உள்ள பிரியாணி இலையை எரித்து விடுங்கள். அந்த பிரியாணி இலையை எரித்த பின்பு அதன் வாசனை வீடு முழுதும் பரவுவதை உறுதி படுத்துங்கள்.

இதனை நீங்கள் தொடர்ந்த செய்து வருவதன் மூலம் கடன் அடைவது மட்டுமில்லாமல் வருமானத்திற்கான வழிகளும் அதிகரிக்கும்.