படுக்கைக்கு முன்பு இதை சாப்பிட்டால் அந்த உணர்வு அதிகமா கிடைக்கும்.. காஜல் அகர்வால் ஓப்பன் டாக்..!

படுக்கைக்கு முன்பு இதை சாப்பிட்டால் அந்த உணர்வு அதிகமா கிடைக்கும்.. காஜல் அகர்வால் ஓப்பன் டாக்..!

நடிகை காஜல் அகர்வால், தமிழ் சினிமாவில் பல முக்கிய வெற்றிப் படங்களில் நடித்தவர்.

பழனி, சரோஜா, பொம்மலாட்டம், மோதி விளையாடு, நான் மகான் அல்ல, மாற்றான், துப்பாக்கி, ஆல் இன் ஆல் அழகு ராஜா, ஜில்லா, மாரி, கவலை வேண்டாம், விவேகம், மெர்சல் என தமிழில் பல வெற்றிப் படங்களில் நடித்தவர்.

இதுமட்டுமின்றி தெலுங்கு மொழியிலும் பல படங்களில் நடித்திருக்கிறார் காஜல் அகர்வால்.

இந்தியில் கியூன், ஹோ கயா நா, சிங்கம், ஸ்பெஷல் சப்பீஸ் போன்ற படங்களிலும் நடித்திருந்தார்.

காஜல் அகர்வால்

தமிழில் கதாநாயகியாக மட்டுமின்றி அதிலும் நகைச்சுவையாக பல படங்களில் காஜல் அகர்வால் நடித்திருக்கிறார்.

குறிப்பாக ஆல் இன் ஆல் அழகுராஜா படத்தில், கார்த்தியை காதலித்துவிட்டு சித்ரா தேவிப்பிரியா என்ற பெயரில் பாடகியாக அவர் தன்னை நினைத்துக்கொண்டு பாடுவது, ஒரே மாதத்தில் பரதநாட்டியம் கற்றுக்கொள்வது என காமெடி ரோல் செய்திருந்தார்.

அதே போல் துப்பாக்கி படத்திலும், விஜயுடன் அவரது காதல் காட்சிகள் மிகவும் ரசிக்கும்படியாக இருந்தன.

இந்தியன் 2 படத்தில்…

இப்போது இந்தியன் 2 படத்தில் நடித்துவரும் காஜல் அகர்வால், திருமணத்துக்கு பிறகு நடிப்பதை தவிர்த்தார். குடும்ப வாழ்க்கையில் ஈடுபட்டு ஒரு குழந்தைக்கும் தாயானார்.

குழந்தை பெற்ற பிறகு காஜல் அகர்வால் சற்று குண்டாக காணப்பட்டார். இதை பார்த்த பலரும், காஜல் அகர்வால் உடல் பருமனாகிவிட்டார். அதனால் இனி அவர் சினிமாவுக்குள் வர முடியாது என மீடியாக்களில் எழுதி விட்டனர்.

இதைப்பார்த்து ஆவேசமடைந்த காஜல் அகர்வால், மிக தீவிரமாக உடற்பயிற்சிகளை செய்து, உணவு கட்டுப்பாட்டில் இருந்து பழையபடி உடல் எடையை குறைத்துக்காட்டி அந்த புகைப்படங்களை மீடியாக்களில் வெளியிட்டு இருக்கிறார்.

சில மாதங்களுக்கு முன், நான் மும்பையில் பிறந்து வளர்ந்தவர். ஆனால், பாலிவுட் படங்களில் நடிக்க இங்கு நெப்போடிசம் அதிகம்.

ஆனால் தமிழ் சினிமாவில் அப்படி இல்லை. தொழில் தர்மம் இருக்கிறது. அங்கு திறமை இருப்பவர்கள் கண்டிப்பாக ஜெயிக்கலாம். அதில் யாருடைய குறுக்கீடு இருக்காது என தமிழ் சினிமா துறை குறித்து பெருமையாக பேசியிருந்தார்.

தற்போது இரவு படுக்கைக்கு போவதற்கு முன் சாப்பிடுவது குறித்த தனது கருத்தை காஜல் அகர்வால் வெளிப்படுத்தி இருக்கிறார்.

படுக்கைக்கு செல்வதற்கு முன்…

இதுகுறித்து நடிகை காஜல் அகர்வால் கூறியதாவது,படுக்கைக்கு செல்வதற்கு முன் பாலில் செய்யப்பட்ட ஐஸ்கிரீம் சாப்பிடுவதன் மூலம் வயிறு நிறைந்த உணர்வு அதிக நேரம் இருக்கும்.

அப்போது உறங்கச் சென்றால் நல்ல கனவுகள் வரும் என்று யாரோ சொல்வதை கேட்டு இருக்கிறேன். நான் அதை நம்புகிறேனா இல்லையா, அது உண்மையா பொய்யா என்றெல்லாம் எனக்கு தெரியாது.

ஆனால் தற்போதும் அதனை பல நேரங்களில் நான் பின்பற்றி வருகிறேன் எனக் கூறியிருக்கிறார்.

நான் எப்போதுமே பாலில் செய்யப்பட்ட ஐஸ்கிரீம்களை மட்டுமே சாப்பிடுவேன்

ப்ரோஷன் டெசர்ட் என்று கூறக்கூடிய தாவர எண்ணெயிலிருந்து தயார் செய்யப்பட்ட ஐஸ்கிரீம்களை நான் உட்கொள்வது கிடையாது எனவும் கூறியிருக்கிறார்

படுக்கைக்கு முன்பு பாலில் செய்த ஐஸ்கிரீம் சாப்பிட்டால் வயிறு நிறைந்த உணர்வு அதிகமாக கிடைக்கும் என்று காஜல் அகர்வால் கூறியிருப்பதால், அவரது ரசிகர்கள் இதை பின்பற்ற அதிக வாய்ப்புள்ளது.