இந்த ஆணுறை நீண்ட நேர உறவிற்கு உகந்தது… கூச்சமின்றி ஓப்பனாக பேசிய.. நடிகை காஜல் அகர்வால்..!

நடிகை காஜல் அகர்வால் சமீபத்திய பேட்டி ஒன்றில் ஆணுறை விளம்பரம் குறித்தும்.. அது குறித்து வெளியான வழிகாட்டுதல்கள் குறித்தும் தன்னுடைய கருத்தை பதிவு செய்திருக்கிறார்..

நடிகை காஜல் அகர்வால் திடீரென ஆணுறை குறித்து பேசியதற்கு என்ன காரணம்..? அப்படி என்ன பேசினார்..? என்று பற்றி தெளிவாக பார்க்கலாம்.

சில வருடங்களுக்கு முன்பு நடிகை காஜல் அகர்வால் ஆணுறை விளம்பரம் ஒன்றில் நடிப்பதாக இருந்தது. அதற்காக பிரபல ஆணுறை தயாரிப்பு நிறுவனத்திடம் முன்பணமாக சில கோடிகளை பெற்றிருந்தார் காஜல் அகர்வால் என்று கூறப்பட்டது.

நடிகை காஜல் அகர்வால் எங்கள் நிறுவனத்துடைய ஆணுறை விளம்பரத்தில் ஒப்பந்தமாகி இருக்கிறார் என்று அந்த நிறுவனம் கூறியதும் கடுமையான எதிர்ப்புகள் கிளம்பின.

ஆணுறை விளம்பரத்தில் எத்தனையோ நடிகைகள் நடிக்கிறார்கள்.. காஜல் அகர்வால் நடித்தால் மட்டும் என்ன பிரச்சனை..? என்று தான் பலரும் கேள்வி எழுப்பினார்கள்.

காஜல் அகர்வால் இந்த விளம்பரத்தில் நடிப்பது பிரச்சினையே கிடையாது. ஆனால், இப்படி பிரபலமாக இருக்கக்கூடிய நடிகைகள் நடிக்கக்கூடிய ஆணுறை விளம்பரங்கள் பொது இடங்களில் பிரசிரிக்கப்படுகின்றன.

மெட்ரோ ரயில் நிலையங்கள்.. பேருந்து நிலையங்கள்.. ரயில் நிலையங்கள்.. பொதுமக்கள் அதிகம் கூடக்கூடிய இடங்களில் விளம்பர பதாகைகள் வைக்கப்படுகின்றன.

திருமணமாகாத கல்லூரி மாணவ-மாணவிகள், பள்ளி சிறுவர்கள் இதனை பார்க்கும் பொழுது அவர்கள் தவறான பாதையில் திசை திரும்புவதற்கு அவர்களுடைய கவனம் சிதறுவதற்கு நிறைய வாய்ப்புகள் இருக்கின்றது.

இது என்ன..? என்ற தேடலில் அவர்கள் வழிமாறி போய்விட வாய்ப்பு இருக்கிறது. அதனால் பொது இடங்களில் இப்படியான விளம்பரப்பதாகிகளை வைக்கக் கூடாது என அப்போது மிகப்பெரிய சர்ச்சை போய்க் கொண்டிருந்தது.

என்ன காரணம் என்றால் நடிகை சன்னிலியோன் நடித்திருந்த ஒரு ஆணுறை விளம்பரத்தை டெல்லியில் திரும்பும் பக்கமெல்லாம் பிரசுரம் செய்து இந்த பிரச்சினையை கிளப்பி விட்டார்கள்.

பேருந்துகள், மெட்ரோ ரயில்கள் என ஒரு இடம் விடாமல் பொதுமக்கள் அதிகம் கூட கூடிய அனைத்து இடங்களிலும் இந்த விளம்பரங்கள் இடம் பெற்று இருந்தன.

குறிப்பாக ஒரு கல்லூரி மாணவி.. இன்னொரு கல்லூரி மாணவர்.. மெட்ரோ ரயிலில் நின்றபடி பயணித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் இருவரும் நண்பர்கள் கிடையாது.. ஒருவரை ஒருவர் இதுவரை பார்த்து கொண்டது கூட கிடையாது..

ஆனால், அந்த ஆணுறை விளம்பரத்தை பேக்ரவுண்டாக வைத்து யாரோ சில ஆசாமிகள் இருவரையும் சேர்த்து போட்டோ ஒன்றை எடுத்து அதனை இணையத்தில் பரவி விட்டனர். இதனை பார்ப்பதற்கே அருவருப்பாக இருந்தது.

இப்படியான பிரச்சனைகள் இருந்த காரணத்தினால் பொது இடங்களில் ஆணுறை விளம்பரங்களை வைக்க வேண்டாம் தொலைக்காட்சிகளிலும் ஒளிபரப்ப நேர கட்டுப்பாடு ஒதுக்கப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது.

இதன் அடிப்படையில் ஆணுறை விளம்பரத்தை இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை ஒளிபரப்பிக்கொள்ளலாம். இடைப்பட்ட பகல் நேரத்தில் ஒளிபரப்பு செய்ய தடை விதிக்கப்படுகிறது என்ற ஒரு வழிகாட்டுதலை கொடுத்திருந்தது உச்ச நீதிமன்றம்.

இதனை தொடர்ந்து பல்வேறு நடிகைகள் சமூக முற்போக்கு பேச்சாளர்கள் பலரும் தங்களுடைய எதிர்ப்புகளை பதிவு செய்திருந்தனர். ஆணுறை என்பது அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய ஒரு சமாச்சாரம்.

ஒரு தற்காலிக கருத்தடை சாதனம். மட்டுமில்லாமல் பல்வேறு நோய்கள் பரவுவதை தடுக்க கூடிய ஒரு சாதனம். இதனை மோசமானது என கருதி விளம்பரம் செய்வதை தடை செய்வது என்பது தவறானது என பலரும் குரல் கொடுத்தனர்.

அந்த நேரத்தில் நடிகை காஜல் அகர்வால் இப்படிப்பட்ட நிறுவனம் ஒன்றின் விளம்பரத்தில் நடிக்க ஒப்பந்தமாக இருக்கிறார் என்ற தகவல் இணைய வட்டாரங்களில் பேசுபொருளானது.

இதனால் நடிகை காஜல் அகர்வால் எதிராக கண்டனங்கள் கிளம்பின. எனவே, வாங்கிய அட்வான்ஸ் பணத்தை திருப்பி கொடுத்துவிட்டு அந்த விளம்பரத்தில் நடிக்க மாட்டேன் என கூறிவிட்டார் காஜல் அகர்வால்.

ஆனால் ஆணுறை குறித்த தன்னுடைய நிலைப்பாட்டையும் கூறியிருந்தார். ஆணுறை என்பது அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய ஒரு விஷயம்.. இதில் ஒளிவு மறைவு எதுவும் கிடையாது.. ஒரு ஆணுறை நிறுவனம் தங்களுடைய ஆணுறையை.. இந்த அளவுக்கு தரமானது.. இந்தந்த வகைகளில் கிடைக்கிறது.. இன்ன பிளேவர்களில் கிடைக்கிறது.. இந்த ஆணுரையை பயன்படுத்தினால் நீண்ட நேரம் உறவு கொள்ளலாம்.. போன்ற விஷயங்களை விளம்பரம் மூலமாக தான் சொல்ல முடியும்.

அந்த விளம்பரத்தை செய்யக்கூடாது எனும் பொழுது ஆண்களை தயாரிப்புகள் குறித்து பொதுமக்களுக்கு எப்படி ஒரு அறிவு கிடைக்கும் என பேசி இருந்தார்.

மேலும் நேர கட்டுப்பாட்டையும் தளர்த்த வேண்டும் 10 மணிக்கு ஆரம்பித்து காலை 6 மணி வரை தான் ஒளிபரப்ப வேண்டும் என்றால் பகல் நேரத்தில் கூடத்தான் பலரும் உடலுறவு கொள்கிறார்கள்.. எனவே இந்த நேர கட்டுப்பாட்டில் எந்த அர்த்தமும் இல்லை எனவும் கூறியிருந்தார் காஜல் அகர்வால் என்பது குறிப்பிடத்தக்கது.

   

--Advertisement--