கடைசி வரை சேர்ந்து நடிக்காத கமல்ஹாசனுடன் மற்றும் ரகுவரன்..! காரணம் தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..!

உலகநாயகன் என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்படும் கமலஹாசன் அன்று முதல் இன்று வரை திரை உலகில் ஒரு எண்சைக்ளோபீடியாவாகவே திகழ்கிறார். இவரோடு இணைந்து நடிக்க வேண்டும் என்று பலரும் ஆர்வமாக இருந்த சமயத்திலும் ரகுவரன் மற்றும் இணைந்து நடிக்கவில்லை.


ஏன் ரகுவரன் கமலோடு கடைசி வரை சேர்ந்து நடிக்கவில்லை என்பதற்கான காரணம் தெரிந்தால் நீங்கள் ஷாக் ஆகி விடுவீர்கள். அந்த விவரம் பற்றிய பதிவினை இந்த பதிவில் நீங்கள் படித்து தெரிந்து கொள்ளலாம்.

நடிகர் கமலஹாசன்..

குழந்தை நட்சத்திரமாக திரை உலகில் அறிமுகமாகி களத்தூர் கண்ணம்மா முதல் விக்ரம் பகுதி இரண்டு வரை கலக்கி வரும் கமலஹாசன் பல்வேறு காலங்களில் தனது நடிப்புத் திறனை பல்வேறு விதமாக வெளிப்படுத்தி இருக்கிறார்.

இவர் நடிப்பில் வெளி வந்த படங்கள் அனைத்துமே திரை உலகில் நடிக்க வேண்டும் என நினைக்கும் வருங்கால ஹீரோக்களுக்கும், ஹீரோயின்களுக்கும் நடிப்பினை தக்க வகையில் எடுத்து சொல்லிக் கொடுக்கும் படி இருக்கும் என சொல்லலாம்.


பன்முகத் திறமையை கொண்ட கமலஹாசன் இன்று வரை திரையுலகில் நிலைத்து நிற்க அவரது அபார திறமையை காரணம் என்று சொல்லலாம்.

--Advertisement--

கமல், ரகுவரன் கடைசி வரை சேர்ந்து நடிக்காதது..

இவரைப் போலவே ஒரு காலகட்டத்தில் தனது வித்தியாசமான குரலின் மூலம் ரசிகர்களை கவர்ந்த ரகுவரன் தமிழ், மலையாளம், ஹிந்தி, தெலுங்கு என பல மொழிகளில் நடித்து அசத்தியிருக்கிறார்.

குணச்சித்திர வேடங்கள் மட்டுமல்லாமல் ஹீரோவாகவும், ஆன்டி ஹீரோவாகவும் பல படங்களில் நடித்திருக்க கூடிய இவர் ஏறத்தாழ 300 படங்களுக்கு மேல் நடித்திருக்கிறார்.

இவரது நடிப்பை பாட்ஷா, முதல்வன், முகவரி, சம்சாரம் அது மின்சாரம், ஏழாவது மனிதன் போன்ற படங்களில் பக்காவாக இருந்ததோடு மட்டுமல்லாமல் ரசிகர்களால் விரும்பப்படும் அற்புதக் கலைஞராக திகழ்ந்தார்.


குடி பழக்க வழக்கத்தால் தன் வாழ்க்கையையும் திரை வாழ்க்கையையும் தொலைத்த இவர் நடிகை ரோகிணியை திருமணம் செய்து கொண்ட இவருக்கு ரிஷி என்ற ஒரு மகனும் இருக்கிறார்.

காரணம் தெரிஞ்சா ஷாக்காவிங்க..

இந்நிலையில் இந்த இரு ஜாம்பவான்களும் ஒன்றாக இணைந்து எந்த ஒரு திரைப்படத்திலும் நடிக்கவில்லை. இதற்கு காரணம் என்ன என்பதை பிரபல திரை விமர்சகர் பயில்வான் ரங்கநாதர் தெரிவித்திருக்கிறார்.

இதில் அவர் கமல் பற்றி சொல்லும் போது கமலஹாசனுக்கு ஒரு திரைப்படம் முடிந்து விட்டால் எடிட்டிங் செய்யும் போது அந்த குழுவோடு அமர்ந்து எடிட்டிங்கை பார்வை இடக்கூடிய தன்மை கொண்டவர்.

அவ்வாறு செய்யும் போது தன்னை விட அதிகமாக எமோஷனலாக நடித்திருந்தால் அது அந்த படத்திற்கு அந்த காட்சிக்கு தேவையில்லாத பட்சத்தில் எடிட் செய்ய சொல்லி விடுவார்.


இதனால் பல நடிகர்களும் தங்களுடைய நடிப்புத் திறன் வெளியே தெரிய க்கூடாது என்பதற்காகத் தான் கமல் எப்படி செய்கிறார் என்று நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள். ஆனால் அது அப்படி அல்ல என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.

இது போன்ற காரணத்தால் தான் நடிகர் கமலஹாசனோடு இணைந்து ரகுவரன் நடிக்க வேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்திக் கொள்ளாமல் இருந்து விட்டார். அது மட்டுமல்லாமல் இருவரும் இணைந்து நடிக்க கூடிய கதை அம்சம் அமையவில்லை என்று கூறி இருக்கிறார்.

இந்த விஷயம் தான் தற்போது இணையத்தில் வைரலாக மாறி இருப்பதோடு கமலஹாசனும் ரகுவரனும் இணைந்து நடிக்க எந்த ஒரு சூழ்நிலையும் வாய்ப்பு கொடுக்கவில்லை என்ற விஷயத்தை ரசிகர்கள் அவர்களுக்குள் பேசி வருகிறார்கள்.