Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

தன் அலுவலகத்திலேயே வடிவேலு செய்த அசிங்கம்.. பாலா லட்சுமணன் கூறிய பகீர் தகவல்..!

Tamil Cinema News

தன் அலுவலகத்திலேயே வடிவேலு செய்த அசிங்கம்.. பாவா லட்சுமணன் கூறிய பகீர் தகவல்..!

தமிழ் திரையுலகில் இன்று வரை அசைக்க முடியாத காமெடியன்களில் ஒருவராக திகழும் வைகைப்புயல் வடிவேலு ஆரம்ப காலத்தில் கடுமையான பொருளாதார சிரமங்களில் இருந்து விடுபட வேண்டும் என்ற எண்ணத்தில் சென்னை நோக்கி திரை துறை பயணத்தை ஆரம்பிக்க வந்தவர்.

வறுமையால் வாடிய இவருக்கு ஆரம்ப நாட்களில் திரைப்படங்களில் சின்ன சின்ன கேரக்டர் ரோல் மட்டுமே அமைந்தது அதனை அடுத்து ராஜ்கிரணின் படத்தில் அறிமுகம் செய்யப்பட்ட இவர் இன்று உச்சகட்ட காமெடியன்களில் ஒருவராக திகழ்கிறார்.

நடிகர் வடிவேலு..

இதனை அடுத்து வடிவேலுவே இல்லாத படம் இல்லை என்று சொல்லக்கூடிய வகையில் சூப்பர் ஸ்டார் முதல் தல அஜித் வரை அனைத்து முன்னணி தமிழ் நடிகர்களோடு இணைந்து நடித்திருக்கும் இவரது காமெடியை பார்ப்பதற்கு என்றே ஒரு ரசிகர் படை உள்ளது.

சின்ன குழந்தை முதல் பெரியவர்கள் வரை தனது அசாத்திய நகைச்சுவை திறமையால் கட்டிப்போட்டு சிரிக்க வைக்க கூடிய நடிகர் வடிவேலு தன்னுடைய பர்சனல் வாழ்க்கையில் சிறப்பான மனிதர் அல்ல என்பதை உணர்த்தக்கூடிய வகையில் பல்வேறு விதமான சம்பவங்கள் நிகழ்ந்ததை அடுத்து அது பற்றி வலைத்தளங்களில் அதிக அளவு செய்தி பரவி உள்ளது.

--Advertisement--

இந்நிலையில் இவரோடு இணைந்து நடித்த நடிகைகள் சிலர் இவர் மீது மீடு புகார் அளித்ததோடு மட்டுமல்லாமல் அந்த நடிகைகளின் எதிர்கால சினிமா கனவை அடியோடு ஒழித்து கட்டிய நடிகராக வடிவேலு இருப்பதாக பல வெளிப்படையாக கருத்துக்களை பதிவு செய்திருக்கிறார்கள்.

தன்னை யாரும் நடிப்பில் ஓவர் டேக் செய்து விடக்கூடாது தன்னைவிட யாரும் உயர்ந்து விடக் கூடாது என்ற குறுகிய மனப்பான்மையோடு இருப்பவர்தான் வடிவேலு என்று அவரோடு இணைந்து நடித்த பல நடிகர்கள் கூறியிருக்கிறார்கள்.

மேலும் பெண்கள் விஷயத்தில் படு மோசமான பேர்வழி அட்ரஸ்மெண்ட் செய்தால் வாய்ப்புகளை தரக்கூடியவர் என்ற பேச்சுக்களை உண்மையாக கூடிய வகையில் அண்மையில் பேட்டி கொடுத்த பல நடிகைகள் இவரை பற்றி கூறியிருக்கிறார்கள்.

அலுவலகத்தில் வைத்து செய்த வடிவேலு..

மேலும் இவர் திரைத்துறையில் வளர்ந்து வர காரணமாக இருந்த கேப்டன் விஜயகாந்தின் மரணத்தை அடுத்து நேரில் சென்று விசாரிக்காத நபராக இவர் விளங்கியதை அடுத்து இவர் மீது பல்வேறு வகையான விமர்சனங்கள் எழுந்தது உங்களுக்கு ஞாபகத்தில் இருக்கலாம்.

இதனை அடுத்து இவரோடு படங்களில் நடித்திருக்கும் பாவா லக்ஷ்மணன் அண்மை பேட்டி ஒன்றில் இனி மேல் எந்த நடிகரின் முகத்தில் நீங்கள் முழிக்க கூடாது என்ற எண்ணத்தில் இருக்கிறீர்களா? என்ற கேள்வி எழுப்பப்பட்ட போது அவர் பட்டென்று கூறிய பதில் வைகைப்புயல் வடிவேலு தான்.

அப்படி என்ன இவர்கள் இருவருக்குள்ளும் நடந்தது என்று நீங்கள் யோசிக்கலாம். எப்போதுமே தன்னைவிட எந்த நடிகரும் உயர்ந்து விடக் கூடாது என்று எண்ணத்தில் இருக்கக்கூடிய வைகைப்புயல் நாய் சேகர் படத்தில் நடிப்பதற்கு முன்பு நடந்த விஷயத்தை தான் தற்போது பாவா லக்ஷ்மணன் பகிர்ந்திருக்கிறார்.

பாவா லட்சுமணனின் ஓப்பன் டாக்..

இது நிமித்தமாக பாவா லட்சுமணன் பேசும் போது பட வாய்ப்பு கேட்டு வடிவேலுவின் அலுவலகத்திற்கு சென்ற போது அவருடைய அலுவலகத்திலேயே வைத்து தன்னை அசிங்க அசிங்கமான வார்த்தைகளால் பேசி வரக்கூடாது என்று திட்டி அனுப்பியதாக அண்மை பேட்டி ஒன்றில் பசிந்து இருக்கிறார்.

மேலும் இந்த பேட்டியில் நாய் சேகர் திரைப்படத்தில் புது காமெடியனை களம் இறக்க இருக்கிறேன் பழைய ஆளுகள் யாரையும் பயன்படுத்தவில்லை என்று வடிவேலு பெருமையாக கூறியிருக்கிறார். இதற்கு அதில் அவருக்கு என்ன பெருமை என்று எனக்கு தெரியவில்லை.

நாங்கள் எல்லாம் ஒரு ஆலோசனை கூறினால் அதை ஏற்றுக் கொள்வோம். ஆனால் நாய் சேகர் படத்தில் நடித்த அவர் கூறிய புதிய ஆட்கள் ஏதாவது ஆலோசனை கூறினால் அதற்கு மறுப்பு தெரிவிக்கிறார்கள். அத்தோடு வடிவேலுவை ஓவர் டெக் செய்யும் விதமாக பேசுவார்கள்.

வடிவேலு வாங்குகின்ற சம்பளம் ஒரு நாளைக்கு 25 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரை. ஆனால் எங்களுக்கு ஒரு நாளைக்கு 5000 ரூபாய்க்கு மேல் தாண்டியது கிடையாது. நாய் சேகர் படத்தில் நடிக்க வாய்ப்பு கேட்டுச் சென்றேன் அழைக்கிறேன் என்று கூறினார். அதன் பிறகு அழைக்கவே இல்லை படம் ரிலீஸ் ஆகிவிட்டது.

இதனை அடுத்த தான் இனிமேல் வாழ்க்கையில் வடிவேலுவை சந்திக்கவே கூடாது என்ற முடிவில் இருப்பதாக பாபா லட்சுமணன் ஓபனாக வடிவேலு பற்றி பேசிய விசயமானது தற்போது இணையத்தில் வைரலாக மாறி உள்ளது.

Continue Reading
 

More in Tamil Cinema News

Trending Now

To Top