இதுவரை இல்லாத உச்ச கட்ட கவர்ச்சி.. நைட் பார்ட்டியில் கீர்த்தி சுரேஷ்..! – ரசிகர்கள் ஷாக்..!

பிரபல இளம் நடிகை கீர்த்தி சுரேஷ் நைட் பார்ட்டி ஒன்றில் கலந்து கொண்ட போது எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. பல்வேறு முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகியாக வலம் வந்து கொண்டிருக்கிறார் நடிகை கீர்த்தி சுரேஷ்.

தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு மற்றும் மலையாள மொழியிலும் தொடர்ந்து படங்களில் நடித்து முன்னணி கதாநாயகியாக இருந்து வருகிறார். தமிழில்  இது என்ன மாயம் என்ற திரைப்படத்தில் நடிகர் விக்ரம் பிரபு ஜோடியாக நடித்ததன் மூலம் அறிமுகமானார்.

அதனை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் ஜோடியாக ரஜினி முருகன் ரெமோ உள்ளிட்ட இரண்டு திரைப்படங்களில் நடித்த இரண்டு திரைப்படங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றன.

எனவே இவருக்கான மார்க்கெட் ஓபன் ஆனது. இவருக்கான தனி ரசிகர் பட்டாளமும் உருவானது. என்ன இருந்தாலும் இவருக்கு நடிப்பு வரவில்லை. ஓவர் ஆக்டிங் செய்கிறார். சினிமா பின்புலம் இருப்பதால் இவருக்கு பட வாய்ப்புகள் கிடைத்துக் கொண்டிருக்கிறது என்று இவரை சுற்றி விமர்சனங்களும் இருந்தது.

ஆனால், மறைந்த நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாற்று திரைப்படமான மகாநடி என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தன் மீது இருந்த அப்படியான விமர்சனங்களை சுக்கு சுக்காக அடித்து நொறுக்கினார் நடிகை கீர்த்தி சுரேஷ்.

--Advertisement--

இன்னும் சொல்லப்போனால் சாவித்திரி ஆகவே வாழ்ந்திருந்தார் அந்த திரைப்படத்தில் என்று தான் கூற வேண்டும். இந்த படத்தில் நடித்த பல்வேறு விருதுகளை வாங்கி குவித்தார் நடிகை கீர்த்தி சுரேஷ்.

தற்போது நடிகர் நாணிக்கு ஜோடியாக இவர் நடித்துள்ள தசரா திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. மட்டுமில்லாமல் இந்த படத்தில் இடம் பெற்ற மைனரு வேட்டி கட்டி என்ற பாடலும் ட்ரெண்டிங்கில் இருந்து கொண்டிருக்கின்றது.

தொடர்ந்து படங்களில் பிஸியாக நடித்த ஒரு நடிகை கீர்த்தி சுரேஷ் சமீபத்தில் நைட் பார்ட்டி ஒன்றில் கலந்து கொண்டிருக்கிறார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தான் தற்போது இணையத்தில் வைரலாகி ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்து வருகின்றது.